மூலனூர் ஒழுங்குமுறை கூடத்தில் பருத்தி விற்பனைக்கான மறைமுக ஏலம் - விவசாயிகள் ஆர்வம்

மூலனூரில் ஓழுங்கு முறை கூடத்தில் நடந்த பருத்தி விற்பனை மறைமுக ஏலத்தில் கரூர், ஈரோடு உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களை சேர்ந்த ஏராளமான விவசாயிகள் பங்கேற்றனர்.


திருப்பூர்: திருப்பூர் மாவட்டம் மூலனூர் ஒழுங்குமுறை கூடத்தில் பருத்திவிற்பனைக்கான மறைமுக ஏலம் நடைபெற்றது.

திருப்பூர் மாவட்டம் மூலனூர் ஒழுங்குமுறை விற்பனைக் கூடத்தில் பருத்திவிற்பனை மறைமுக ஏலம் நடைபெற்றது. இதில் திருப்பூர், கரூர், திருச்சி, திண்டுக்கல், ஈரோடு, கோவை மாவட்டங்களை சேர்ந்த விவசாயிகள் 350 நபர்கள் பருத்தி கொண்டு வந்திருந்தனர்.

பருத்தியினை கொள்முதல் செய்ய திருப்பூர், திண்டுக்கல், ஈரோடு, சேலம், கோவை மாவட்டங்களை சேர்ந்த வணிகர்களும், மறைமுக ஏலத்தில் பங்கேற்றனர். வணிகர்களால் அதிகபட்ச விலையாக குவிண்டால் ஒன்றிற்கு ரூபாய் 7595ற்கும் குறைந்தபட்சவிலை ரூபாய் 6500ற்கும் சராசரி விலை ரூ.6900ற்கும் விற்பனையானது.

பருத்தியின் மொத்த அளவு 3646 மூட்டைகள், குவிண்டால் 1151.06 மதிப்பு ரூபாய் 77,16,153/- ஏலத்தில் 16 வியாபாரிகள் மறைமுக ஏலத்தில் பங்கேற்றனர் என முதுநிலை செயலாளர் திருப்பூர் விற்பனைக்குழு சு‌ரேஷ் பாபு தெரிவித்தார். ஏலத்திற்கான ஏற்பாடுகளை கண்காணிப்பாளர் சிவக்குமார் செய்திருந்தார்.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...