உடுமலை திருப்பதி வெங்கடேச பெருமாள் கோவிலில் நவராத்திரி திருவிழா - பரதநாட்டியம் அரங்கேற்றம்

உடுமலை திருப்பதி வெங்கடேச பெருமாள் கோவிலில் நவராத்திரி விழாவில் மாணவ,மாணவியரின் பரதநாட்டியம் அரங்கேற்றப்பட்டது. இதனை சுற்றுவட்டாரப்பகுதிகளில் இருந்து மக்கள் கண்டுகளித்தனர்.


திருப்பூர்: நவராத்திரி திருவிழாவில் கடவுளின் திருவுருவங்கள், திருமணம் மற்றும் பல்வேறு வகையான புரண காலத்து நிகழ்வுகள், கொழு பொம்மைகளாக வைக்கப்பட்டிருந்தன.

திருப்பூர் உடுமலை அடுத்துள்ள பள்ளபாளையம் ஊராட்சி பகுதியில் உள்ள உடுமலை திருப்பதி வெங்கடேச பெருமாள் கோவிலில் நவராத்திரி கொழுவிழா கடந்த 15ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை துவக்கியது.



தினமும் ஒரு அலங்காரத்தில் பத்மாவதி தாயார் பக்தர்களுக்கு அருள் பாலித்தார். இன்று ஏழாவது நாளில் பத்மாவதி தாயார் சிறப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள் பாலித்தார்.



மேலும் கோவில் பகுதியில் வைக்கப்பட்டிருந்த கடவுளின் திருவுருவங்கள், திருமணம் மற்றும் பல்வேறு வகையான புரண காலத்து நிகழ்வுகள், கொழு பொம்மைகளாக வைக்கப்பட்டிருந்தன. கொழு கண்காட்சியை ஏராளமான பக்தர்கள் கண்டுகளித்தனர்.



மேலும் நவராத்திரி விழாவை முன்னிட்டு மாணவ, மாணவிகளின் பரதநாட்டிய நிகழ்ச்சி வெகு சிறப்பாக நடைபெற்றது.



இந்த நிகழ்வில் சுற்றுவட்டார பகுதிகளிலிருந்து ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் மேற்கொண்டனர்.

Newsletter

கோவையில் மாநகராட்சி இடத்தில் கோவில் கட்ட முயற்சி; தகராறில் ஈடுபட்ட இரு தரப்பினர் மீது வழக்கு

கோவை ஆர்.எஸ்.புரம் காமராஜபுரம் ஹவுசிங் யூனிட் பகுதியில் மாநகராட்சிக்கு சொந்தமான பொது இடத்தில் அனுமதியின்றி கோவில் கட்ட ம...

சாலை விபத்துகள் : கோவையில் கணவன்-மனைவி, முதியவர் உட்பட 8 பேர் படுகாயம்

கோவை மாநகரின் பல்வேறு பகுதிகளில் அடுத்தடுத்து நடைபெற்ற 6 சாலை விபத்துகளில் முதியவர் உட்பட 8 பேர் காயமடைந்தனர். பைக் மீது...

G Square விவகாரம் குறித்து எஸ்.பி. வேலுமணியே விளக்கம் அளிப்பார்: கோவையில் அமைச்சர் செங்கோட்டையன்

கோவையில் செய்தியாளர்களைச் சந்தித்த அமைச்சர் செங்கோட்டையன், G Square தொடர்பான கேள்விக்கு முன்னாள் அமைச்சர் எஸ்.பி. வேலுமண...

மிலாடி நபி பண்டிகையை முன்னிட்டு கோவையில் 20,000 பேருக்கு இலவச நெய் சோறு வழங்கல்

கோவை உக்கடம் ஜி.எம் நகரில் சுன்னத் ஜமாத் சார்பில் மிலாடி நபி பண்டிகையை முன்னிட்டு 2000 கிலோ அரிசியில் நெய் சோறு சமைக்கப்...

கோவை சித்தாபுதூர் ஐயப்பன் கோவிலில் ஓணம் பண்டிகை சிறப்பு வழிபாடு

கோவை சித்தாபுதூர் ஐயப்பன் கோவிலில் ஓணம் பண்டிகையை முன்னிட்டு சிறப்பு வழிபாடுகள் நடைபெற்றன. சுவாமி சன்னதி முன்பு டன் கணக்...

கோவை நீலாம்பூரில் வாலிபர் குத்திக்கொலை; உடலை பள்ளத்தில் வீசியதாக கூறி தொழிலாளி சரண்

கோவை நீலாம்பூரில் இளைஞர் ஒருவரை கத்தியால் குத்திக் கொலை செய்து உடலை சாலையோர பள்ளத்தில் வீசியதாக கூறி காவல் நிலையத்தில் ச...