கோவையில் நடைபெற்று வரும் சீர்மிகு நகரத்திட்ட பணிகள் - மாநகராட்சி ஆணையாளர் நேரில் ஆய்வு

கோவை மாநகராட்சி மத்திய மண்டலம்‌ மற்றும்‌ தெற்கு மண்டலத்திற்குட்பட்ட பகுதிகளில்‌ நடைபெற்றுவரும்‌ சீர்மிகு நகரத்திட்ட பணிகள்‌, பாதாள சாக்கடை திட்டப்பணிகளை மாநகராட்சி ஆணையாளர்‌ மா.சிவகுரு பிரபாகரன் நேரில்‌ பார்வையிட்டு ஆய்வு செய்தார்.


கோவை: மத்திய மண்டலம்‌, வார்டு எண்.83க்குட்பட்ட வ.உ.சி.பூங்கா மைதானம்‌ சாலையில்‌ மாநகராட்சி ஆணையாளர்‌ அவர்கள்‌ நேரில்‌ பார்வையிட்டு ஆய்வு செய்து, அங்குள்ள மழைநீர் வடிகால்‌ கால்வாயினை உடனடியாக தூர்வாரிட சம்மந்தப்பட்ட அலுவலா்களுக்கு உத்தரவிட்டார்‌.

கோவை மாநகராட்சி மத்திய மண்டலம்‌ மற்றும்‌ தெற்கு மண்டலத்திற்குட்பட்ட பகுதிகளில்‌ நடைபெற்றுவரும்‌ சீாமிகு நகரத்திட்ட பணிகள்‌, பாதாள சாக்கடை திட்டப்பணிகளை மாநகராட்சி ஆணையாளர்‌ மா.சிவகுரு பிரபாகரன்‌‌ இன்று (22.10.2023) நேரில்‌ பார்வையிட்டு ஆய்வு செய்தார்‌.



கோவை மாநகராட்சி மத்திய மண்டலம்‌, வார்டு எண்‌.83க்குட்பட்ட வ.உ.சி.பூங்கா மைதானம்‌ அருகில்‌ உள்ள சாலையில்‌ NUHM நிதியின்‌ கீழ்‌ ரூ.1 கோடி மதிப்பீட்டில்‌ ஆரோக்கியமான மற்றும்‌ சுகாதாரமான உணவுள்ள தெரு அமையவுள்ள இடத்தை மாநகராட்சி ஆணையாளர்‌ மா.சிவகுரு பிரபாகரன்‌ நேரில்‌ பார்வையிட்டு ஆய்வு செய்து, பணியை விரைவில்‌ தொடங்க சம்மந்தப்பட்ட அலுவலா்களுக்கு உத்தரவிட்டார்‌.



அதனைத்‌ தொடர்ந்து, மத்திய மண்டலம்‌, வார்டு எண்.83க்குட்பட்ட வ.உ.சி.பூங்கா மைதானம்‌ சாலையில்‌ மாநகராட்சி ஆணையாளர்‌ அவர்கள்‌ நேரில்‌ பார்வையிட்டு ஆய்வு செய்து, அங்குள்ள மழைநீர் வடிகால்‌ கால்வாயினை உடனடியாக தூர்வாரிட சம்மந்தப்பட்ட அலுவலா்களுக்கு உத்தரவிட்டார்‌.



பின்னர்‌, தெற்கு மண்டலம்‌ குறிச்சி குளத்தில்‌ சீர்மிகு நகர திட்டத்தின்கீழ்‌ ரூ.52.16 கோடி மதிப்பீட்டில்‌ நடைபெற்றுவரும்‌ புனரமைப்புப்‌ பணிகள்‌ மற்றும்‌ குனியமுத்தூர்‌ பகுதியில்‌ பறவைகள்‌ சிற்பம்‌ அமைக்கும்‌ பணிகள்‌ நடைபெற்றுவருவதை மாநகராட்சி ஆணையாளர்‌ அவர்கள்‌ நேரில்‌ சென்று பார்வையிட்டு ஆய்வு செய்தார்‌.



பின்னா்‌, கோவை‌ மாநகராட்சி தெற்கு மண்டலத்தில்‌ ரூ.591.14 கோடி மதிப்பீட்டில்‌ நடைபெற்றுவரும்‌ குறிச்சி குனியமுத்தார்‌ பாதாள சாக்கடை திட்டப்பணிகளில்‌ ஒருபகுதியாக குனியமுத்தூர்‌ பகுதியில்‌ பிரதான குழாய்‌ அமைக்கும்‌ பணிகள்‌ நடைபெறுவதை மாநகராட்சி ஆணையாளர்‌ அவர்கள்‌ நேரில்‌ பார்வையிட்டு ஆய்வு செய்து, போத்தனூரா- சுந்தராபுரம்‌ இணைப்பு சாலை பணிகளை ஒருவார காலத்திற்குள்‌ முடிக்க சம்மந்தப்பட்ட அலுவலாகளுக்கு உத்தரவிட்டார்‌.



அதனைத்‌ தொடர்ந்து, தெற்கு மண்டலம்‌ வெள்ளலார்‌- சிங்காநல்லூர்‌ பிரதான சாலையில்‌ கட்டப்பட்டுவரும்‌ புதிய மேம்பாலம்‌ பணியினை மாநகராட்சி ஆணையாளர்‌ மா.சிவகுரு பிரபாகரன்‌ நேரில்‌ பார்வையிட்டு ஆய்வு செய்து, அப்பகுதியில்‌ இருந்து பில்லூர்‌-1ன்கீழ்‌ குறிச்சி பகுதிக்கு தண்ணீர் கொண்டுசெல்லும்‌ பிரதான குழாயினை மேம்பாலத்தின்‌ அருகே மாற்றி அமைப்பதற்கான சாத்திய கூறுகள்‌ குறித்து கேட்டறிந்தார்‌.



பின்னர்‌, கோவை மாநகராட்சி மத்திய மண்டலம்‌ ரேஸ்கோர்ஸ்‌ பகுதியில்‌ சீர்மிகு நகரத்திட்டத்தின்கீழ்‌ ரூ.40.07 கோடி மதிப்பீட்டில்‌ புனரமைக்கப்பட்டுள்ள மாதிரி சாலையின்‌ ஒருபகுதியாக தாமஸ்பார்க்‌ சந்திப்பில்‌ அமைக்கப்பட்டுள்ள மீடியா டவர்‌ (Media Tower) அலங்கார செயற்கை நீர்வீழ்ச்சி (Water Falls)ஆகியவற்றை மாநகராட்சி ஆணையாளர்‌ மா.சிவகுரு பிரபாகரன்‌ நேரில்‌ சென்று பார்வையிட்டார்‌.



இந்த ஆய்வுகளின்போது துணை மேயா்‌ ரா.வெற்றிசெல்வன்‌, தெற்கு மண்டல தலைவர்‌ ரெ.தனலட்சுமி, ஆளுங்கட்சித்தலைவர்‌ கார்த்திகேயன்‌, மாமன்ற உறுப்பினர்கள்‌ அஸ்லாம்‌ பாஷா, பாபு, உதவி ஆணையர்‌ மகேஷ்கனகராஜ்‌, செயற்பொறியாளர்‌ கருப்பசாமி, உதவி செயற்பொறியாளர்கள்‌ கனகராஜ்‌, ஹேமலதா,பிரபாகரன்‌, உதவி பொறியாளர்கள்‌ விமல்ராஜ்‌, சரவணக்குமார்‌, சபரிராஜீ, கமலக்கண்ணன்‌, சுகாதார ஆய்வாளா்‌ ஏமீரங்கராஜ்‌ மற்றும்‌ மாநகராட்சி அலுவலர்கள்‌ உடனிருந்தனர்‌.

Newsletter

கோவையில் டெங்கு தடுப்பு: பள்ளி, கல்லூரிகளுக்கு சரிபார்ப்பு பட்டியல் வழங்கப்படும்

கோவை மாநகராட்சி 100 வார்டுகளில் டெங்கு தடுப்பு நடவடிக்கைகளை தீவிரப்படுத்தியுள்ளது. 28.08.2026 முதல் பள்ளிகள், கல்லூரிகள்...

கோவை மாநகராட்சி மத்திய மண்டலத்தில் டெங்கு கொசு ஒழிப்பு பணிகள் தீவிரம்

கோயம்புத்தூர் மாநகராட்சி மத்திய மண்டல பகுதிகளில் டெங்கு கொசு ஒழிப்பு பணிகள் தீவிரமாக மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. வார்டு...

கோவை பீளமேடு பகுதியில் டெங்கு ஒழிப்பு உள்ளிட்ட பல்வேறு பணிகளை ஆய்வு செய்த கவுன்சிலர்

சிங்காநல்லூர் சட்டமன்ற தொகுதி வார்டு 27 கவுன்சிலர் அம்பிகா தனபால் பீளமேடு பகுதிகளில் டெங்கு கொசு ஒழிப்பு, சாலை அமைப்பு,...

திருப்பூரில் அமராவதி, திருமூர்த்தி அணைகளில் நீர்மட்டம் உயர்வு

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் ஆகஸ்ட் 27ஆம் தேதி 59.22 அடியாக உயர்ந்துள்ளது. நீர் பிடிப்பு பகுதிகளில...

ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு அணைகளில் நீர்மட்டம் உயர்வு

ஆனைமலை, பொள்ளாச்சி, வால்பாறை பகுதிகளில் உள்ள அணைகளில் தென்மேற்கு பருவமழை காரணமாக நீர்மட்டம் உயர்ந்துள்ளது. ஆழியாறு அணையி...

கோவையில் போட்டித் தேர்வு பயிற்சி வகுப்புகளுக்கு ஆசிரியர்கள் தேவை

கோவை மாவட்ட வேலைவாய்ப்பு மையத்தில் TNPSC, SSC, RRB, IBPS போன்ற போட்டித் தேர்வுகளுக்கான இலவச பயிற்சி வகுப்புகள் நடத்தப்பட...