கோவை மாநாடு பற்றி தாராபுரத்தில் ஓபிஎஸ் அணி அதிமுக செயல் வீரர்கள் கூட்டத்தில் ஆலோசனை

தாராபுரத்தில் நடைபெற்ற அதிமுக ஓபிஎஸ் அணி கழக செயல் வீரர்கள் கூட்டத்தில் வருகின்ற நாடாளுமன்றத் தேர்தல் மற்றும் சட்டமன்றத் தேர்தலில் எவ்வாறு பணியாற்ற வேண்டும் என்பது குறித்து ஆலோசிக்கப்பட்டது.


திருப்பூர்: ஜனவரி 6ஆம் தேதி ஓபிஎஸ் பன்னீர்செல்வம் தலைமையில் கோவையில் நடைபெற உள்ள மாநாட்டிற்கு அனைத்து உறுப்பினர்களையும் கலந்து கொள்வது குறித்து செயல் வீரர்கள் கூட்டத்தில் விரிவாக பேசப்பட்டது.

திருப்பூர் மாவட்டம் தாராபுரத்தில் அதிமுக ஓபிஎஸ் அணியின் சார்பில் கழக செயல் வீரர்கள் கூட்டம் திருப்பூர் புறநகர் மாவட்ட செயலாளர் காமராஜர் தலைமையில், ஓபிஎஸ் அணி கொள்கை பரப்புச் செயலாளர் அழகுராஜ், திருப்பூர் மாநகர் மாவட்ட செயலாளர் சண்முகம் ஆகியோர் முன்னிலையில் நடைபெற்றது.



இந்த செயல் வீரர்கள் கூட்டத்தில் வருகின்ற நாடாளுமன்றத் தேர்தல் மற்றும் சட்டமன்றத் தேர்தலில் எவ்வாறு பணியாற்ற வேண்டும் என்பது குறித்தும் ஜனவரி 6ஆம் தேதி ஓபிஎஸ் பன்னீர்செல்வம் தலைமையில் கோவையில் நடைபெற உள்ள மாநாட்டிற்கு அனைத்து உறுப்பினர்களையும் கலந்து கொள்வது குறித்தும் கட்சி நிர்வாகிகள் மற்றும் கட்சி உறுப்பினர்களிடம் கொள்கை பரப்புச் செயலாளர் மருது அழகுராஜ் ஆலோசனை வழங்கினார்.



இந்த கூட்டத்திற்கு தாராபுரம், காங்கேயம், உடுமலை, மடத்துக்குளம் உள்ளிட்ட சட்டமன்ற தொகுதியில் இருந்து சுமார் 800-க்கும் மேற்பட்டோர் கட்சி நிர்வாகிகள், உறுப்பினர்கள் கலந்து கொண்டனர். தனியார் மண்டபத்தில் நடைபெற்ற ஓபிஎஸ் அணி செயல்வீரர்கள் கூட்டத்திற்கான ஏற்பாடுகளை நகரச் செயலாளர் ஜவகர் செய்திருந்தார்.

Newsletter

சிங்கநல்லூரில் போதைப்பொருள் எதிர்ப்பு தெருக்கூத்து: SRIPMS மாணவர்கள் விழிப்புணர்வு

சர்வதேச போதைப்பொருள் எதிர்ப்பு தினத்தை முன்னிட்டு, SRIPMS செவிலியர் கல்லூரி மற்றும் NSS இணைந்து சிங்கநல்லூர் பேருந்து நி...

மீண்டும் கட்சியில் முக்கிய பொறுப்பில் எஸ்.பி. வேலுமணி – கழகப் பொதுச் செயலாளராக அறிவிப்பு..!

கட்சியை மீறி தவெகவுக்கு ஆதரவு தெரிவித்ததால், அனைத்து கட்சிப் பொறுப்புகளில் இருந்து நீக்கப்பட்டிருந்த எஸ்.பி. வேலுமணிக்க...

கோவை பி.என்.புதூரில் கொசு ஒழிப்பு நடவடிக்கை: புகைமருந்து தெளிப்பு மற்றும் குப்பை சேகரிப்பு பணி

கோவை மாநகராட்சி 41வது வார்டில் மாமன்ற உறுப்பினர் கே.சாந்தி சந்திரன் அறிவுறுத்தலின்படி பி.என்.புதூரில் கொசு ஒழிப்பு புகைம...

கோவை பீளமேடு பகுதியில் டெங்கு தடுப்பு, சுகாதார மேம்பாடு உள்ளிட்ட பல்வேறு பணிகள் நடைபெற்றன

சிங்காநல்லூர் தொகுதி வார்டு 27ல் டெங்கு கொசு ஒழிப்பு, அங்கன்வாடி ஆய்வு, சாலை சுத்தம், மழை நீர் வடிகால் பணிகள் மேற்கொள்ளப...

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் 192 பேர் இரத்த தானம்

உலக குருதி கொடையாளர் தினத்தை முன்னிட்டு தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழக வளாகத்தில் இரத்த தான முகாம் நடத்தப்பட்டது. சிங்...

கோவை மருதமலை முருகன் கோயில் உண்டியலில் ரூ.1.05 கோடி காணிக்கை: தங்கம், வெள்ளி நகைகளும் குவிந்தன

Coimbatore மருதமலை சுப்பிரமணிய சுவாமி திருக்கோயில் உண்டியல் திறப்பில் ரூ.1 கோடியே 5 லட்சம் ரொக்கமும், 105 கிராம் தங்கம்,...