சேலத்தில் இருந்து கோவை புறப்பட்ட அரசு பேருந்தில் தீ விபத்து - பயணிகள் அலறல்

சேலத்தில் இருந்து கோவை வந்து கொண்டிருந்த அரசு பேருந்தில் தீ பிடித்து விபத்து ஏற்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. புகைமூட்டத்தால் பயணிகள் அவசர அவசரமாக இறக்கி விடப்பட்டதால் பெரும் விபத்து தவிர்க்கப்பட்டது.


கோவை:சேலத்தில் இருந்து கோவைக்கு வந்த அரசு பேருந்து திடீரென தீ பிடித்து எரிந்தது.

சேலத்தில் இருந்து கிளம்பிய அரசு பேருந்து கோவை நோக்கி வந்து கொண்டிருந்த போது கருமத்தம்பட்டி அருகே திடீரென பேருந்தில் முன்பக்கத்தில் புகை கிளம்பிய நிலையில் ஓட்டுநர் சாலை ஓரத்தில் பேருந்து நிறுத்தி விட்டு பயணிகளையும் இறங்க சொல்லி விட்டு அவரும் நடத்துனரும் இறங்கி உள்ளனர். பின்னர் திடீரென பேருந்தில் தீப்பிடித்தது கொழுந்து விட்டு எரிய துவங்கி உள்ளது.

பின்னர் தீயணைப்பு துறையினருக்கு தகவல் அளித்து சூலூரில் இருந்து வந்த தீயணைப்பு துறையினர் தீயை அணைத்தனர்.இது குறித்து போலிசார் விசாரணை நடத்தி வருகின்றனர். இப்பேருந்தில் இருந்து இறங்கிய பயணிகள் அனைவரும் மாற்று பேருந்து மூலம் கோவைக்கு அனுப்பட்டனர்.

Newsletter

கோவையில் ஒரே நாளில் 600க்கும் மேற்பட்ட தெருநாய்களுக்கு வெறிநாய்க்கடி தடுப்பூசி

Coimbatore மாநகராட்சி வார்டு 50, 51, 52, 54, 100 பகுதிகளில் வெறிநாய்க்கடி தடுப்பூசி திட்டத்தை தீவிரப்படுத்தி, கால்நடை மர...

Multiple LPG Cylinders Explode at Migrant Workers’ Quarters in Coimbatore’s Nava India

More than 40 temporary sheds were gutted after seven LPG cylinders exploded one after another at a migrant workers’ colo...

கோவை நவ இந்தியாவில் அடுத்தடுத்து வெடித்த 7 சமையல் எரிவாயு சிலிண்டர்கள்

கோவை நவ இந்தியா பகுதியில் வடமாநிலத் தொழிலாளர்கள் தங்கியிருந்த தற்காலிகக் குடியிருப்பில் அடுத்தடுத்து 7 சமையல் எரிவாயு சி...

கோவை கற்பகம் நிகர்நிலை பல்கலைக்கழகத்தில் இணையக் குற்ற விழிப்புணர்வு நிகழ்ச்சி

கோவை, கற்பகம் நிகர்நிலை பல்கலைக்கழகத்தில் ஆகஸ்ட் 27, 2026 அன்று இணையக் குற்ற விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது. கூடுதல்...

மேட்டுப்பாளையம் துணை மின் நிலையத்தில் நாளை (29.08.2026) மின்தடை

மேட்டுப்பாளையம் துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நாளை (29.08.2026) காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை நடைப...

பசூர் துணை மின் நிலையத்தில் நாளை (29.08.2026) மின்தடை

பசூர் துணை மின் நிலையத்தில் நாளை ஆகஸ்ட் 29 அன்று காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மாதாந்திர மின் பராமரிப்பு பணி நடைபெறும்...