உடுமலையில் கஞ்சா விற்பனை செய்த இரண்டு பேர் கைது - ஒரு கிலோ கஞ்சா பறிமுதல்

உடுமலையில் கஞ்சா விற்பனையில் ஈடுபட்ட இரண்டு பேரை காவல்துறையினர் கைது செய்தனர்.


திருப்பூர்: கஞ்சா விற்பனையில் ஈடுபட்டவரையும், அவருக்கு உறுதுணையாக இருந்தவரையும் காவல்துறையினர் கைது செய்து, அவர்களிடம் தொடர் விசாரணை நடத்திவருகின்றனர்.

திருப்பூர் மாவட்டம் உடுமலையை அடுத்த சிவசக்தி காலனி பகுதியில் கஞ்சா விற்பனை செய்வதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்த தகவலையடுத்து, தலைமை காவலர் பத்ரா அப்பகுதியில் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டு இருந்தார்.

அப்போது அவ்வழியாக வந்த சிவலிங்கம் என்பவரை தடுத்து நிறுத்தி சோதனை செய்த பொழுது அவர் வைத்திருந்த பையில் ஒரு கிலோ அளவில் கஞ்சா வைத்திருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. இதனையடுத்து, அவர் கைது செய்யப்பட்டார்.

கைது செய்யப்பட்ட நபர் மீது ஏற்கனவே இரண்டு கஞ்சா வழக்குகள் நிலுவையில் உள்ளது. மேலும் இவருக்கு கஞ்சா விற்பனை செய்வதற்கு உறுதியாக இருந்த ஏரி பாளையத்தைச் சேர்ந்த தியாகு என்பவரையும் போலீசார் கைது செய்தனர்.

Newsletter

கோவை பீளமேடு பள்ளியில் போதை எதிர்ப்பு மற்றும் டிஜிட்டல் பாதுகாப்பு விழிப்புணர்வு முகாம்

கோவை மாநகராட்சியின் கிழக்கு மண்டலத்தில் உள்ள பீளமேடு தொடக்கப்பள்ளியில் போதைப்பொருள் தீமைகள் மற்றும் டிஜிட்டல் தொழில்நுட்...

கோவையில் தொடரும் கொலை சம்பவங்கள்: ஆலாந்துறையில் பட்டப்பகலில் ஒருவர் வெட்டிக்கொலை

கோவை ஆலாந்துறையில் நாகராஜ் (60) என்பவர் வெட்டிக் கொலை செய்யப்பட்ட சம்பவத்தில், அதே பகுதியைச் சேர்ந்த கந்தசாமி என்பவரை போ...

இந்தியத் திறன் போட்டிகள் 2027-க்கான பதிவு தொடக்கம் - கோவை ஆட்சியர் அறிவிப்பு

ஷாங்காய், சீனா 2026ல் நடைபெறும் உலகத்திறன் போட்டிகளுக்கான இந்தியத் திறன் போட்டிகள் 2027-க்கு பதிவுகள் துவங்கின. 16 முதல்...

உலகத்திறன் போட்டிகள் 2027-க்கான பதிவு தொடக்கம் - கோவை ஆட்சியர் அறிவிப்பு

ஷாங்காய், சீனா 2026ல் நடைபெறும் உலகத்திறன் போட்டிகளுக்கான இந்தியத் திறன் போட்டிகள் 2027-க்கு பதிவுகள் துவங்கின. 16 முதல்...

கோவையில் டெங்கு தடுப்பு: பள்ளி, கல்லூரிகளுக்கு சரிபார்ப்பு பட்டியல் வழங்கப்படும்

கோவை மாநகராட்சி 100 வார்டுகளில் டெங்கு தடுப்பு நடவடிக்கைகளை தீவிரப்படுத்தியுள்ளது. 28.08.2026 முதல் பள்ளிகள், கல்லூரிகள்...

கோவை மாநகராட்சி மத்திய மண்டலத்தில் டெங்கு கொசு ஒழிப்பு பணிகள் தீவிரம்

கோயம்புத்தூர் மாநகராட்சி மத்திய மண்டல பகுதிகளில் டெங்கு கொசு ஒழிப்பு பணிகள் தீவிரமாக மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. வார்டு...