ரூ. 7.40 லட்சம் மோசடி - மெக்கானிக் கடை உரிமையாளர் கைது

சொகுசுகாரில் மாற்றம் செய்து தருவதாக கூறி மோசடி செய்த திண்டுக்கல் மாவட்டத்தை சேர்ந்த நபர் கோவையில் கைது செய்யப்பட்டுள்ளார்.


கோவை: ரூ.7.40 லட்சம் பண மோசடி செய்தவரை கோவை போலீசார் கைது செய்தனர்.

திண்டுக்கல் மாவட்டம், கொடைக்கானலை சேர்ந்தவர் அருண்மணி (வயது 45). இவரது நண்பர் ஒருவர் சொகுசு கார் ஒன்றை கொடுத்து தேர்தல் பிரசாரத்துக்காக அதில் சில மாற்றங்கள் செய்து தருமாறு கூறினார். இதனையடுத்து அருண்மணி ஆன்லைன் மூலமாக கோவை பீளமேடு பி.ஆர்.புரத்தில் உள்ள ஓர்க் ஷாப் இருப்பதை பார்த்தார்.

இதையடுத்து ஒர்க் ஷாப் உரிமையாளர் கோபால் (43) என்பவரை தொடர்பு கொண்டு, சொகுசு காரில் மாற்றம் செய்து தருமாறு, கார் மற்றும் ரூ.2.50 லட்சத்தை முன்பணமாக கொடுத்தார்.

தொடர்ந்து மேலும் பல்வேறு தவணைகளாக ரூ.4.90 லட்சம் என, மொத்தம், ரூ.7.40 லட்சம் பணத்தை கோபாலிடம் கொடுத்தார். ஆனால், பணத்தை பெற்றுக் கொண்ட அவர் குறித்த காலத்தில், காரில் எவ்வித மாற்றமும் செய்து கொடுக்கவில்லை. பணத்தையும் திருப்பித்தர மறுத்து விட்டார். இதுகுறித்து அருண்மணி கேட்ட போது, அவரை தகாத வார்த்தைகளால் பேசிய கோபால், கொலை மிரட்டல் விடுத்தார்.

இதுகுறித்து அவர் பீளமேடு போலீசாரிடம் புகார் அளித்தார். போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி கோபாலை கைது செய்து ஜெயிலில் அடைத்தனர்.

Newsletter

கோவை 100 அடி சாலையில் அரசு பேருந்து மோதி முதியவர் பலி

கோவை 100 அடி சாலையில் அரசு பேருந்து இருசக்கர வாகனத்தின் மீது மோதியதில் 74 வயது முதியவர் உயிரிழந்தார். இந்த விபத்து தொடர்...

நெஞ்சுவலி சிகிச்சையில் கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனைக்கு சர்வதேச அங்கீகாரம்

மாரடைப்பு மற்றும் நெஞ்சுவலி நோயாளிகளுக்கு சர்வதேச தரத்தில் சிகிச்சையை வழங்குவதில் கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனை சிறப...

கோவையில் ஸ்ரீ ராமகிருஷ்ணா சென்ட்ரல் பள்ளியில் ஸ்கில் லேப் மற்றும் பாட்காஸ்ட் ஸ்டுடியோ திறப்பு

கோவையில் ஸ்ரீ ராமகிருஷ்ணா சென்ட்ரல் பள்ளியில் ஸ்கில் லேப் மற்றும் வோக்ஸ் வேவ் பாட்காஸ்ட் ஸ்டுடியோ இன்று திறக்கப்பட்டது....

கோயம்புத்தூர் மாநகராட்சி வளர்ச்சிப் பணிகள் குறித்து அமைச்சர் சம்பத்குமார் தலைமையில் கலந்தாய்வு

பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் வி.சம்பத்குமார் தலைமையில் கோயம்புத்தூர் மாநகராட்சி வளர்ச்சிப் பணிகள் குறித்த கலந்த...

ஒண்டிப்புதூர் ABC மையத்தையும் உக்கடம் கழிவுநீர் சேகரிப்பு மையத்தையும் மாநகராட்சி ஆணையாளர் ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா இன்று ஒண்டிப்புதூர் பகுதியில் உள்ள வீடில்லா நாய்களுக்கான ABC மையத்தையும...

பேரூர் குளத்தில் 449-வது வார தூய்மைப் பணி - பொதுமக்கள் பங்கேற்க அழைப்பு

கோவை பேரூரில் WWF-India மற்றும் கோவை குளங்கள் பாதுகாப்பு அமைப்பு இணைந்து 449-வது வார தூய்மைப் பணியை ஜூன் 28 அன்று காலை 7...