உடுமலை அருகே புலி உயிரிழப்பு - வனத்துறை விளக்கம்

திருப்பூர் மாவட்டம் உடுமலை அருகே வனப்பகுதியில் உயிரிழந்த நிலையில் கண்டுபிடிக்கப்பட்ட புலி தொடர்பாக வனத்துறை தங்களது விளக்கத்தை அளித்திருக்கிறது.


திருப்பூர்: பன்றியின் முட்கள் குத்தியதால் புலி உயிரிழந்துள்ளதாக வனத்துறை தெரிவித்துள்ளது.



ஆனைமலை புலிகள் காப்பகம், திருப்பூர் வனக்கோட்டம், அமராவதி வனச்சரகம், அமராவதி பிரிவு, கல்லாபுரம் சுற்று கழுதை கட்டி ஓடைப்பகுதியில் நேற்று இறந்த நிலையில் கண்டுபிடிக்கப்பட்ட ஆண் புலிக்கு, ஆனைமலை புலிகள் காப்பக கள இயக்குனர் ராமசுப்ரமணியன் தலைமையில், துணை இயக்குனர் தேவேந்திர குமார் மீனா, உதவி இயக்குனர் கணேஷ் ராம், அமராவதி வனச்சரக அலுவலர், ஆரண்ய அறக்கட்டளை செயலாளர், இயற்கைகான உலகலாவிய நிதியம், சுற்றுச்சூழல் மேம்பாட்டு குழு முன்னிலையில், வனக் கால்நடை மருத்துவர்கள் விஜயராகவன், ராஜன், ராஜா சொக்கப்பன் ஆகியோர் கொண்ட மருத்துவ குழுவினரால், தேசிய புலிகள் பாதுகாப்பு ஆணையத்தின் வழிகாட்டுதலின் படி பிரேத பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது.



இறந்த ஆண் புலிக்கு சுமார் 9 வயது இருக்கும் என மருத்துவ குழுவினரால் உறுதி செய்யப்பட்டது. புலியின் இறப்பானது முள்ளம் பன்றியை வேட்டையாடும் பொழுது முள்ளம் பன்றியின் முட்களால் அதன் முன் கால்கள் மற்றும் மார்பு பகுதியில் ஏற்பட்ட காயம் காரணமாக வீக்கம் ஏற்பட்டு உள்பகுதியில் சீல் பிடித்த நிலையில் வேட்டையாட முடியாத சூழ்நிலையில் அதன் இறப்பு ஏற்பட்டிருக்கலாம் என்று மருத்துவக் குழுவினரால் உறுதி செய்யப்பட்டது.

மேலும் முள்ளம் பன்றியின் முட்கள் புலியின் கால் மற்றும் இரைப்பை பகுதியில் இருந்தது உறுதி செய்யப்பட்டது.



மேலும் புலியின் சடலம், பற்கள் மற்றும் நகங்கள் ஆகியவை எரியூட்டப்பட்டது. என வனத்துறை தரப்பில் தெரிவிக்கபட்டது.

Newsletter

கோவை 100 அடி சாலையில் அரசு பேருந்து மோதி முதியவர் பலி

கோவை 100 அடி சாலையில் அரசு பேருந்து இருசக்கர வாகனத்தின் மீது மோதியதில் 74 வயது முதியவர் உயிரிழந்தார். இந்த விபத்து தொடர்...

நெஞ்சுவலி சிகிச்சையில் கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனைக்கு சர்வதேச அங்கீகாரம்

மாரடைப்பு மற்றும் நெஞ்சுவலி நோயாளிகளுக்கு சர்வதேச தரத்தில் சிகிச்சையை வழங்குவதில் கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனை சிறப...

கோவையில் ஸ்ரீ ராமகிருஷ்ணா சென்ட்ரல் பள்ளியில் ஸ்கில் லேப் மற்றும் பாட்காஸ்ட் ஸ்டுடியோ திறப்பு

கோவையில் ஸ்ரீ ராமகிருஷ்ணா சென்ட்ரல் பள்ளியில் ஸ்கில் லேப் மற்றும் வோக்ஸ் வேவ் பாட்காஸ்ட் ஸ்டுடியோ இன்று திறக்கப்பட்டது....

கோயம்புத்தூர் மாநகராட்சி வளர்ச்சிப் பணிகள் குறித்து அமைச்சர் சம்பத்குமார் தலைமையில் கலந்தாய்வு

பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் வி.சம்பத்குமார் தலைமையில் கோயம்புத்தூர் மாநகராட்சி வளர்ச்சிப் பணிகள் குறித்த கலந்த...

ஒண்டிப்புதூர் ABC மையத்தையும் உக்கடம் கழிவுநீர் சேகரிப்பு மையத்தையும் மாநகராட்சி ஆணையாளர் ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா இன்று ஒண்டிப்புதூர் பகுதியில் உள்ள வீடில்லா நாய்களுக்கான ABC மையத்தையும...

பேரூர் குளத்தில் 449-வது வார தூய்மைப் பணி - பொதுமக்கள் பங்கேற்க அழைப்பு

கோவை பேரூரில் WWF-India மற்றும் கோவை குளங்கள் பாதுகாப்பு அமைப்பு இணைந்து 449-வது வார தூய்மைப் பணியை ஜூன் 28 அன்று காலை 7...