கோவையில் போராட்டத்தில் ஈடுபட்ட சத்துணவு அங்கன்வாடி ஊழியர்கள் கைது

சிறப்பு பென்சன் உயர்த்தி வழங்கிட வேண்டும், காலிப்பணியிடங்களில் சத்துணவு அங்கன்வாடி ஊழியர்களை ஈர்த்து முறையான காலமுறை ஊதியம் வழங்கிட வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி கோவையில் போராட்டம் நடத்திய சத்துணவு ஊழியர்கள் கைது செய்யப்பட்டனர்


கோவை: பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கோவையில் போராட்டத்தில் ஈடுபட்ட சத்துணவு அங்கன்வாடி ஊழியர்கள் கைது செய்யப்பட்டனர்.

சிறப்பு பென்சன் 6750 ரூபாய் வழங்கிட வேண்டும், அரசுத் துறை காலிப்பணியிடங்களில் சத்துணவு அங்கன்வாடி ஊழியர்களை ஈர்த்து முறையான காலமுறை ஊதியம் வழங்கிட வேண்டும், காலை சிற்றுண்டி திட்ட அமலாக்கத்தை சத்துணவு ஊழியர்களிடம் வழங்கிட வேண்டும் என வலியுறுத்தி இன்று மாநிலம் முழுவதும் தமிழ்நாடு சத்துணவு அங்கன்வாடி சங்கங்களின் கூட்டமைப்பு மாநில மையம் சார்பில் மறியல் போராட்டம் நடைபெறுகிறது.



அதன் ஒரு பகுதியாக கோவையில் தெற்கு வட்டாட்சியர் அலுவலகம் முன்பு கோவை மாவட்ட சத்துணவு மற்றும் அங்கன்வாடி ஊழியர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். மாவட்டத் தலைவர் வீரபத்திரன் தலைமையில் நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்தில் நூற்றுக்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டு அவர்களது கோரிக்கைகளை வலியுறுத்தி முழக்கங்களை எழுப்பினர்.



பின்னர் சாலையில் அமர்ந்து மறியல் போராட்டத்தில் ஈடுபட்டதால் காவல்துறையினர் அவர்களை வலுக்கட்டாயமாக கைது செய்தனர். இதனால் தெற்கு வட்டாட்சியர் அலுவலகம் முன்பு சிறிது நேரம் பரபரப்பான சூழல் நிலவியது.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...