உடுமலை ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் கொப்பரை ஏலம் - 5 லட்சத்து 60 ஆயிரத்துக்கு ஏலம்

திருப்பூர் மாவட்டம் உடுமலை ஒழுங்கு முறை விற்பனை கூடத்தில் இ-நாம் திட்டத்தின் கீழ் இன்று கொப்பரை ஏலம் நடைபெற்றது. இதில், 5 லட்சத்து 60 ஆயிரத்துக்கு ஏலம் போனது.


திருப்பூர்: ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் நடைபெற்ற கொப்பரை ஏலத்தில் 28 விவசாயிகள் 141 மூட்டை கொப்பரையை மறைமுக ஏலத்திற்கு கொண்டு வந்திருந்தனர்.

உடுமலை ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் வியாழக்கிழமை தோறும் இ-நாம் திட்டத்தின் கீழ் கொப்பரை ஏலம் நடைபெற்று வருகிறது. இதில் பல்வேறு பகுதிகளை சேர்ந்த விவசாயிகள் கொப்பரையை கொண்டு வந்து பயன் பெற்று வருகின்றனர். கொப்பரை ஏலத்தில் 28 விவசாயிகள் 141 மூட்டை கொப்பரையை மறைமுக ஏலத்திற்கு கொண்டு வந்திருந்தனர்.



இதில் 8 வியாபாரிகள் கலந்து கொண்டனர். ஒரு கிலோ முதல் தரம் தேங்காய் கொப்பரை ரூ.80.99 முதல் ரூ.86.49 க்கும் இரண்டாம் தர கொப்பரை ரூ.73.99 முதல் ரூ.79.99 க்கும் இ-நாம் இணையதளத்தில் விலை நிர்ணயம் செய்யப்பட்டு ஏலம் இறுதி செய்யப்பட்டது. அதன்படி ரூ 5 லட்சத்து 60 ஆயிரத்திற்கு கொப்பரை ஏலம் போனது. மேலும் கூடுதல் விவரங்களுக்கு 9443962834 என்ற எண்களில் தொடர்பு கொள்ளலாம் என்று உடுமலை ஒழுங்குமுறை விற்பனை கூடத்தின் கண்காணிப்பாளர் செந்தில்குமார் தெரிவித்தார்.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...