கோவை மாநகராட்சியில் செயல்படும் அரசு மாணவர் நல விடுதிகளில் மாவட்ட ஆட்சியர் ஆய்வு

கோவை மாநகராட்சி பந்தய சாலை பகுதியில் அமைந்துள்ள அரசு ஆதிதிராவிடர் மாணவர் நல விடுதியை மாவட்ட ஆட்சியர் நேரில் சென்று ஆய்வு மேற்கொண்டார்.


கோவை: கோவை மாநகராட்சி ராமநாதபுரம் 80 அடி சாலை பகுதியில் அமைந்துள்ள பிற்படுத்தப்பட்டோர் அரசு கல்லூரி மாணவர் நல விடுதியில் மாவட்ட ஆட்சியர் கிராந்திகுமார் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

கோவை மாவட்டத்தில் செயல்பட்டு வரும் பல்வேறு பிற்படுத்தப்பட்டோர் மாணவர் நல விடுதிகள், ஆதிதிராவிடர் மாணவர்களின் நல விடுதிகளை மாவட்ட ஆட்சியர் கிராந்திகுமார் அவ்வப்போது நேரில் சென்று ஆய்வு செய்து வருகிறார். அதன்படி கோவை மாநகராட்சி பந்தய சாலை பகுதியில் அமைந்துள்ள அரசு ஆதிதிராவிடர் மாணவர் நல விடுதியை மாவட்ட ஆட்சியர் நேரில் சென்று ஆய்வு மேற்கொண்டார்.



அங்கு வழங்கப்படும் உணவின் தரத்தையும் உண்டு பரிசோதித்தார்.



மேலும் அங்கு தங்கியுள்ள மாணவர்களிடமும் அங்குள்ள வசதிகளையும் தேவைகளையும் கேட்டறிந்தார். இந்த ஆய்வின் போது கோவை மாவட்ட ஆதிதிராவிடர் நல அலுவலர் மணிமேகலை உடன் இருந்தார்.

அதனைத் தொடர்ந்து கோவை மாநகராட்சி ராமநாதபுரம் 80 அடி சாலை பகுதியில் அமைந்துள்ள பிற்படுத்தப்பட்டோர் அரசு கல்லூரி மாணவர் நல விடுதியையும் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். இந்த ஆய்வின் போது மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் நல அலுவலர் முருகேசன் உடன் இருந்தார்.

Newsletter

கோவையில் டெங்கு தடுப்பு: பள்ளி, கல்லூரிகளுக்கு சரிபார்ப்பு பட்டியல் வழங்கப்படும்

கோவை மாநகராட்சி 100 வார்டுகளில் டெங்கு தடுப்பு நடவடிக்கைகளை தீவிரப்படுத்தியுள்ளது. 28.08.2026 முதல் பள்ளிகள், கல்லூரிகள்...

கோவை மாநகராட்சி மத்திய மண்டலத்தில் டெங்கு கொசு ஒழிப்பு பணிகள் தீவிரம்

கோயம்புத்தூர் மாநகராட்சி மத்திய மண்டல பகுதிகளில் டெங்கு கொசு ஒழிப்பு பணிகள் தீவிரமாக மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. வார்டு...

கோவை பீளமேடு பகுதியில் டெங்கு ஒழிப்பு உள்ளிட்ட பல்வேறு பணிகளை ஆய்வு செய்த கவுன்சிலர்

சிங்காநல்லூர் சட்டமன்ற தொகுதி வார்டு 27 கவுன்சிலர் அம்பிகா தனபால் பீளமேடு பகுதிகளில் டெங்கு கொசு ஒழிப்பு, சாலை அமைப்பு,...

திருப்பூரில் அமராவதி, திருமூர்த்தி அணைகளில் நீர்மட்டம் உயர்வு

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் ஆகஸ்ட் 27ஆம் தேதி 59.22 அடியாக உயர்ந்துள்ளது. நீர் பிடிப்பு பகுதிகளில...

ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு அணைகளில் நீர்மட்டம் உயர்வு

ஆனைமலை, பொள்ளாச்சி, வால்பாறை பகுதிகளில் உள்ள அணைகளில் தென்மேற்கு பருவமழை காரணமாக நீர்மட்டம் உயர்ந்துள்ளது. ஆழியாறு அணையி...

கோவையில் போட்டித் தேர்வு பயிற்சி வகுப்புகளுக்கு ஆசிரியர்கள் தேவை

கோவை மாவட்ட வேலைவாய்ப்பு மையத்தில் TNPSC, SSC, RRB, IBPS போன்ற போட்டித் தேர்வுகளுக்கான இலவச பயிற்சி வகுப்புகள் நடத்தப்பட...