கோவை மண்டல திமுக விவசாய அணி ஆலோசனை கூட்டம் - முக்கிய தீர்மானங்கள் நிறைவேற்றம்

கோவை மாவட்டம் வால்பாறையில் நடைபெற்ற மண்டல திமுக விவசாய அணி ஆலோசனை கூட்டம் நீட் தேர்வுக்கு எதிரான கையெழுத்து இயக்கத்திற்கு ஆதரவு அளிப்பது உள்ளிட்ட முக்கிய தீர்மானங்கள் நிறைவேற்றபட்டன.


கோவை: வால்பாறையில். நடந்த மண்டல திமுக விவசாய அணி ஆலோசனை கூட்டத்தில் முக்கிய தீர்மானங்கள் நிறைவேற்றபட்டன.



கோவை மாவட்டம் வால்பாறையில் கோவை மண்டல திமுக விவசாய அணியின் மாவட்ட அமைப்பாளர்கள் மற்றும் துணை அமைப்பாளர்களின் கலந்தாலோசனைக் கூட்டம் நடைபெற்றது. இதில் மாநில விவசாய அணி துணைத்தலைவர் தமிழ்மணி தலைமை வகித்தார்.நகர செயலாளர் சுதாகரன் வரவேற்றார். கூட்டத்தில் கோவை, ஈரோடு, திருப்பூர், நீலகிரி, நாமக்கல் போன்ற பகுதிகளில் இருந்து திமுக நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.



இக்கூட்டத்தில் ஒன்றிய அரசு கொப்பரை கொள்முதல் விலை 108 இருந்து 150 ரூபாயாக உயர்த்தி தரவேண்டும். கொப்பரை கொள்முதல் நிதியை மூன்று மடங்காக உயர்த்தி தர வேண்டும். பசுமை வாரியத்தின் 10.11.2021 தேதியிட்ட வாரியத்தில் நடவடிக்கையை திரும்ப பெற நடவடிக்கை எடுத்த முதலமைச்சருக்கு நன்றி தெரிவிக்கப்பட்டது. நீட் தேர்வை திரும்ப பெற கையெழுத்து இயக்கத்திற்கு விவசாய அணிகள் முழு ஒத்துழைப்பு வழங்க வேண்டும் என்று கோரிக்கை விடுக்கப்பட்டது உட்பட 10 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

இந்நிகழ்ச்சியில் தமிழ்நாடு டெல்லி சிறப்பு பிரதிநிதி AKS.விஜயன் சிறப்புரை யாற்றினார். இக்கூட்டத்தில் கோழிக்கடை கணேஷ், ஜே. பாஸ்கர், சுரேஷ்குமார் மற்றும் விவசாய அணி அமைப்பாளர்கள் மற்றும் துணை அமைப்பாளர்கள் கட்சி நிர்வாகிகள் தொண்டர்கள் கலந்து கொண்டனர்.

Newsletter

கோவையில் டெங்கு தடுப்பு: பள்ளி, கல்லூரிகளுக்கு சரிபார்ப்பு பட்டியல் வழங்கப்படும்

கோவை மாநகராட்சி 100 வார்டுகளில் டெங்கு தடுப்பு நடவடிக்கைகளை தீவிரப்படுத்தியுள்ளது. 28.08.2026 முதல் பள்ளிகள், கல்லூரிகள்...

கோவை மாநகராட்சி மத்திய மண்டலத்தில் டெங்கு கொசு ஒழிப்பு பணிகள் தீவிரம்

கோயம்புத்தூர் மாநகராட்சி மத்திய மண்டல பகுதிகளில் டெங்கு கொசு ஒழிப்பு பணிகள் தீவிரமாக மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. வார்டு...

கோவை பீளமேடு பகுதியில் டெங்கு ஒழிப்பு உள்ளிட்ட பல்வேறு பணிகளை ஆய்வு செய்த கவுன்சிலர்

சிங்காநல்லூர் சட்டமன்ற தொகுதி வார்டு 27 கவுன்சிலர் அம்பிகா தனபால் பீளமேடு பகுதிகளில் டெங்கு கொசு ஒழிப்பு, சாலை அமைப்பு,...

திருப்பூரில் அமராவதி, திருமூர்த்தி அணைகளில் நீர்மட்டம் உயர்வு

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் ஆகஸ்ட் 27ஆம் தேதி 59.22 அடியாக உயர்ந்துள்ளது. நீர் பிடிப்பு பகுதிகளில...

ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு அணைகளில் நீர்மட்டம் உயர்வு

ஆனைமலை, பொள்ளாச்சி, வால்பாறை பகுதிகளில் உள்ள அணைகளில் தென்மேற்கு பருவமழை காரணமாக நீர்மட்டம் உயர்ந்துள்ளது. ஆழியாறு அணையி...

கோவையில் போட்டித் தேர்வு பயிற்சி வகுப்புகளுக்கு ஆசிரியர்கள் தேவை

கோவை மாவட்ட வேலைவாய்ப்பு மையத்தில் TNPSC, SSC, RRB, IBPS போன்ற போட்டித் தேர்வுகளுக்கான இலவச பயிற்சி வகுப்புகள் நடத்தப்பட...