உடுமலை வருவாய் கோட்டாட்சியர் அலுவலகத்தில் வரைவு வாக்காளர் பட்டியல் வெளியீடு

இந்திய தேர்தல் ஆணைய உத்தரவின் படி திருப்பூர் மாவட்டம் உடுமலை வருவாய் கோட்டாட்சியர் அலுவலகத்தில் வரைவு வாக்காளர் பட்டியல் வெளியிடப்பட்டது.


திருப்பூர்: அரசியல் கட்சி பிரதிநிதிகள் முன்னிலையில் வரைவு வாக்காளர் பட்டியல் வெளியிடப்பட்டது.

இந்திய தேர்தல் ஆணைய உத்தரவுப்படி ஆண்டுதோறும் புதிய வாக்காளர் சேர்க்கை, நீக்கம், திருத்தம், முகவரி மாற்றம் தொடர்பாக அக்டோபர் மாதத்தில் வாக்காளர் வரைவுப்பட்டியலும் ஜனவரி மாதத்தில் இறுதி வாக்காளர் பட்டியலும் வெளியிடப்படும்.

அந்த வகையில் இந்த ஆண்டுக்கான வாக்காளர் பட்டியல் திருத்தும் பணி முதல் தொடங்கியது. அதன் தொடக்கமாக தற்போதைய நிலவரப்படி உள்ள வரைவு வாக்காளர் பட்டியல் நேற்று வெளியிடப்பட்டது. உடுமலை, மடத்துக்குளம் சட்டமன்றத் தொகுதி அளவிலான பட்டியலை உடுமலை ஆர்.டி.ஓ அலுவலகத்தில் ஆர்.டி.ஓ ஜஸ்வந்த் கண்ணன் வெளியிட்டார்.

அதன் படி கடந்த 05.01.23-ம் தேதி படி உடுமலை சட்டமன்றத் தொகுதியில் 1 லட்சத்து 24 ஆயிரத்து 918 ஆண்கள்,1லட்சத்து 34 ஆயிரத்து 982 பெண்கள், மூன்றாம் பாலினத்தவர் 27 பேர் ஆக மொத்தம் 2 லட்சத்து 59 ஆயிரத்து 927 வாக்காளர்கள் இருந்தனர்.

பின்னர் புதிதாக 1075 ஆண்களும்,1300 பெண்களும், மூன்றாம் பாலினத்தவர் ஒருவர் என 2 ஆயிரத்து 376 வாக்காளர்கள் புதிதாக சேர்க்கப்பட்டனர். இதில் திருத்தங்கள் மேற்கொண்டு 2 ஆயிரத்து 131 ஆண்களும், 2 ஆயிரத்து 288 பெண்களும் ஆக மொத்தம் 4 ஆயிரத்து 419 வாக்காளர்கள் நீக்கம் செய்யப்பட்டனர். 27.10.2023 தேதி படி 1லட்சத்து 23 ஆயிரத்து 862 ஆண்கள், 1 லட்சத்து 33 ஆயிரத்து 994 பெண்கள், மூன்றாம் பாலினத்தவர் 28 பேர் என உடுமலை சட்டமன்ற தொகுதியில் 2 லட்சத்து 57 ஆயிரத்து 884 வாக்காளர்கள் உள்ளனர்.

மடத்துக்குளம் சட்டமன்றத் தொகுதியில் 05.01.2023 தேதி படி 1 லட்சத்து 13 ஆயிரத்து 907 ஆண்கள், 1லட்சத்து 19 ஆயிரத்து 452 பெண்கள், மூன்றாம் பாலினத்தவர் 20 பேர் ஆக மொத்தம் 2 லட்சத்து 33 ஆயிரத்து 379 வாக்காளர்கள் இருந்தனர்.

பின்னர் புதிதாக 806 ஆண்கள்,1104 பெண்கள் என 1964 வாக்காளர்கள் புதிதாக சேர்க்கப்பட்டனர். இதில் திருத்தங்கள் மேற்கொண்டு 2ஆயிரத்து 741 ஆண்களும், 2ஆயிரத்து 865 பெண்களும் மூன்றாம் பாலினத்தவர் 2 ஆக மொத்தம் 5 ஆயிரத்து 608 வாக்காளர்கள் நீக்கம் செய்யப்பட்டனர். 27.10.2023 தேதி படி 1 லட்சத்து 12 ஆயிரத்து 026 ஆண்கள், 1 லட்சத்து 17 ஆயிரத்து 691 பெண்கள், மூன்றாம் பாலினத்தவர் 18 பேர் என மடத்துக்குளம் சட்டமன்ற தொகுதியில் 2 லட்சத்து 29 ஆயிரத்து 735 வாக்காளர்கள் உள்ளனர்.

வாக்காளர் பட்டியலில் சேர்த்தல், நீக்கம், திருத்தம் மேற்கொள்ளுதல், முகவரி மாற்றம் உள்ளிட்டவற்றுக்குமுதல் டிசம்பர் மாதம் 9-ம் தேதி வரை கால அவகாசம் வழங்கப்பட்டு உள்ளது. மேலும் அடுத்த மாதம் 4, 5 மற்றும் 18, 19 ஆகிய தேதிகளில் வாக்குச்சாவடிகளில் சிறப்பு முகாம்கள் நடைபெற உள்ளது.

அப்போது வாக்காளர் பட்டியலில் பெயர் சேரத்தல், நீக்கம், திருத்தங்கள் மேற்கொள்வதற்கு வாக்குச்சாவடி நிலை அதிகாரிகளிடம் நேரடியாகவும், தேர்தல் ஆணையத்தின் இணையதளம் வாயிலாகவும் வாக்காளர்கள் விண்ணப்பிக்கலாம்.

பரிசீலனைக்கு பிறகு இறுதி வாக்காளர் பட்டியல் அடுத்த ஆண்டு ஜனவரி 5- ம் தேதி வெளியிடப்பட உள்ளது.

வாக்காளர் பட்டியலை உடுமலை திமுக நகரச் செயலாளர் சி.வேலுச்சாமி,நகரமன்ற துணைத் தலைவர் எஸ்.கலைராஜன், மாவட்ட பொருளாளர் முபாரக் அலி, உடுமலை நகர காங்கிரஸ் தலைவர் கோ.ரவி, இந்திய கம்யூனிஸ்ட் கட்சி செயலாளர் சௌந்தரராஜன், பகுஜன் சமாஜ் கட்சி ஜே.பெஞ்சமின் கிருபாகரன் உள்ளிட்ட அரசியல் கட்சியினர் பெற்றுக் கொண்டனர். அப்போது ஆர்.டி.ஓ நேர்முக உதவியாளர் ஜலஜா, உடுமலை தாசில்தார் சுந்தரம், மடத்துக்குளம் தாசில்தார் பானுமதி, தேர்தல் துணை தாசில்தார்கள் சையது ராபியம்மாள், வளர்மதி ஆகியோர் உடன் இருந்தனர்.

Newsletter

கோவை 100 அடி சாலையில் அரசு பேருந்து மோதி முதியவர் பலி

கோவை 100 அடி சாலையில் அரசு பேருந்து இருசக்கர வாகனத்தின் மீது மோதியதில் 74 வயது முதியவர் உயிரிழந்தார். இந்த விபத்து தொடர்...

நெஞ்சுவலி சிகிச்சையில் கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனைக்கு சர்வதேச அங்கீகாரம்

மாரடைப்பு மற்றும் நெஞ்சுவலி நோயாளிகளுக்கு சர்வதேச தரத்தில் சிகிச்சையை வழங்குவதில் கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனை சிறப...

கோவையில் ஸ்ரீ ராமகிருஷ்ணா சென்ட்ரல் பள்ளியில் ஸ்கில் லேப் மற்றும் பாட்காஸ்ட் ஸ்டுடியோ திறப்பு

கோவையில் ஸ்ரீ ராமகிருஷ்ணா சென்ட்ரல் பள்ளியில் ஸ்கில் லேப் மற்றும் வோக்ஸ் வேவ் பாட்காஸ்ட் ஸ்டுடியோ இன்று திறக்கப்பட்டது....

கோயம்புத்தூர் மாநகராட்சி வளர்ச்சிப் பணிகள் குறித்து அமைச்சர் சம்பத்குமார் தலைமையில் கலந்தாய்வு

பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் வி.சம்பத்குமார் தலைமையில் கோயம்புத்தூர் மாநகராட்சி வளர்ச்சிப் பணிகள் குறித்த கலந்த...

ஒண்டிப்புதூர் ABC மையத்தையும் உக்கடம் கழிவுநீர் சேகரிப்பு மையத்தையும் மாநகராட்சி ஆணையாளர் ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா இன்று ஒண்டிப்புதூர் பகுதியில் உள்ள வீடில்லா நாய்களுக்கான ABC மையத்தையும...

பேரூர் குளத்தில் 449-வது வார தூய்மைப் பணி - பொதுமக்கள் பங்கேற்க அழைப்பு

கோவை பேரூரில் WWF-India மற்றும் கோவை குளங்கள் பாதுகாப்பு அமைப்பு இணைந்து 449-வது வார தூய்மைப் பணியை ஜூன் 28 அன்று காலை 7...