தரமின்றி சாலை அமைத்த மூவருக்கு மெமோ

800 மீட்டர் நீளத்துக்கு, ரூ.1.10 கோடியில் புதிதாக ரோடு போடும் பணி மேற்கொள்ளப்பட்டது. தரமின்றி சாலை அமைத்தற்காக மாநகராட்சி அதிகாரிகள் மூவருக்கு ‘மெமோ' வழங்கப்பட்டது.


கோவை: கோவையில் தரமின்றி சாலை அமைத்தற்காக மாநகராட்சி அதிகாரிகள் மூவருக்கு ‘மெமோ' வழங்கப்பட்டது.

பழைய ரோட்டை தோண்டி எடுக்காமல், லேசாக 'மில்லிங்' செய்து விட்டு, தார் ரோடு போடப்பட்டது. இத்தகவல், மாநகராட்சி கமிஷனர் சிவகுரு பிரபாகரன் கவனத்துக்கு சென்றது.நேற்று முன்தினம் இரவு, 11:00 மணி அளவில், அப்பகுதிக்கு நேரில் சென்று அவர் ஆய்வு செய்தார்.

புதிதாக போடப்படும் ரோட்டின் நீளம், அகலம், தார் கலவை வெப்ப அளவு உள்ளிட்டவற்றை ஆய்வுக்கு உட்படுத்தினார். ஒரு மணி நேரம் அங்கேயே இருந்து, தரமாக ரோடு எப்படி போடுவது என்பது குறித்து, மாநகராட்சி அதிகாரிகள் மற்றும் ஒப்பந்ததாரர்களுக்கு கற்றுக்கொடுத்தார்.

நேற்று காலை, 8:00 மணிக்கு அதே பகுதிக்கு கமிஷனர் மீண்டும் சென்று ஆய்வு செய்தார்.

ஜல்லிக்கற்கள் மீது ரோலர் இயக்கி, 'காம்பேக்ட்' செய்யாமல் இருந்தது. ஆங்காங்கேகற்கள் பெயர்ந்து கிடந் தன.அவர் சொல்லிக் கொடுத்தது போல், தார் ரோடு போடாததால், கோபமடைந்த கமிஷனர், ஒப்பந்த நிறுவனமான, 'விஷ்ணு இன்ப்ரா' நிறுவனத்துக்கு அபராதம் விதிக்க உத்தரவிட்டார்.

இப்பணியை கள ஆய்வு செய்து, தரத்தை உறுதி செய்யாத குற்றத்துக்காக, உதவி பொறியாளர் பர்மான் அலி, உதவி நிர்வாக பொறியாளர் பிரபாகரன், நிர்வாக பொறியாளர் கருப்பசாமி ஆகியோருக்கு 'மெமோ' கொடுக்க, கமிஷனர் உத்தரவிட்டார்.

Newsletter

கோவையில் ஒரே நாளில் 600க்கும் மேற்பட்ட தெருநாய்களுக்கு வெறிநாய்க்கடி தடுப்பூசி

Coimbatore மாநகராட்சி வார்டு 50, 51, 52, 54, 100 பகுதிகளில் வெறிநாய்க்கடி தடுப்பூசி திட்டத்தை தீவிரப்படுத்தி, கால்நடை மர...

Multiple LPG Cylinders Explode at Migrant Workers’ Quarters in Coimbatore’s Nava India

More than 40 temporary sheds were gutted after seven LPG cylinders exploded one after another at a migrant workers’ colo...

கோவை நவ இந்தியாவில் அடுத்தடுத்து வெடித்த 7 சமையல் எரிவாயு சிலிண்டர்கள்

கோவை நவ இந்தியா பகுதியில் வடமாநிலத் தொழிலாளர்கள் தங்கியிருந்த தற்காலிகக் குடியிருப்பில் அடுத்தடுத்து 7 சமையல் எரிவாயு சி...

கோவை கற்பகம் நிகர்நிலை பல்கலைக்கழகத்தில் இணையக் குற்ற விழிப்புணர்வு நிகழ்ச்சி

கோவை, கற்பகம் நிகர்நிலை பல்கலைக்கழகத்தில் ஆகஸ்ட் 27, 2026 அன்று இணையக் குற்ற விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது. கூடுதல்...

மேட்டுப்பாளையம் துணை மின் நிலையத்தில் நாளை (29.08.2026) மின்தடை

மேட்டுப்பாளையம் துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நாளை (29.08.2026) காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை நடைப...

பசூர் துணை மின் நிலையத்தில் நாளை (29.08.2026) மின்தடை

பசூர் துணை மின் நிலையத்தில் நாளை ஆகஸ்ட் 29 அன்று காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மாதாந்திர மின் பராமரிப்பு பணி நடைபெறும்...