போர் தொடுத்து வரும் இஸ்ரேலிய ராணுவத்திற்கு எதிர்ப்பு – திருப்பூரில் இஸ்லாமிய அமைப்புகள் ஆர்ப்பாட்டம்

கொடூர தாக்குதலை நடத்தி வரும் இஸ்ரேல் ராணவத்தை கண்டித்தும், அதற்கு ஆதரவு அளிக்கும் அமெரிக்காவுக்கு எதிர்ப்பு தெரிவித்தும் திருப்பூர் சிடிசி கார்னர் பகுதியில் ஒருங்கிணைந்த இஸ்லாமிய ஜமாத் கூட்டமைப்பு மற்றும் ஷாஹின்பாக் போராட்டக் குழு சார்பாக கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.


திருப்பூர்: இஸ்ரேலிய இராணுவம் நடத்தி வரும் கொடூர தாக்குதல்கலை கண்டித்தும், இஸ்ரேலுக்கு ஆதரவு அளித்து வரும் அமெரிக்க ஏகாதிபத்திய அரசுகளை கண்டித்தும் ஒருங்கிணைந்த இஸ்லாமிய ஜமாத் கூட்டமைப்பு - ஷாஹின்பாக் போராட்டக் குழு சார்பாக திருப்பூரில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.



பாலஸ்தீனத்தின் காசா பகுதியில் கடந்த 7- ந் தேதி தொடங்கி கடந்த இரண்டு வாரங்களாக இஸ்ரேலிய இராணுவம் கொடூர தாக்குதல்களை மேற்கொண்டு வருகிறது. சர்வதேச சட்டங்களை மதிக்காமலும், மனித உரிமைகளை புறந்தள்ளி, கொடூரமான இன அழிப்பு முன்னெடுத்து வரும் இஸ்ரேலையும், அதற்கு ஆதரவு அளித்து வரும் அமெரிக்க ஏகாதிபத்திய அரசுகளை கண்டித்தும், திருப்பூர் சிடிசி கார்னர் பகுதியில் ஒருங்கிணைந்த இஸ்லாமிய ஜமாத் கூட்டமைப்பு மற்றும் ஷாஹின்பாக் போராட்டக் குழு சார்பாக கண்டன ஆர்ப்பாட்டமானது நடைபெற்றது.



இந்த ஆர்ப்பாட்டத்தில் பெண்கள் குழந்தைகள் என நூற்றுக்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.



ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டவர்கள் இஸ்ரேலிய இராணுவத்தை கண்டித்தும், அமெரிக்கா அரசை கண்டித்தும் கண்டன கோஷங்களை எழுப்பினர்.

Newsletter

சூலூர்: “சொந்தக் குடும்பத்தினரையே சந்திப்பதில்லை; இதில் எங்களை எப்படி சந்திப்பார் என்று நம்புவது”- தவெக வெட்பாளரிடம் பெண்கள் சரமாரி கேள்வி.

சூலூர் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட கண்ணம்பாளையம் வாரச்சந்தையில், தவெக வேட்பாளர் என்.எம். சுகுமார் பிரச்சாரத்தின் போது, விஜ...

தாராபுரம்: “கொங்கு மண்டலம் புறக்கணிப்பு; 5 ஆண்டுகளாக திராவிட மாடல் ஆட்சியில் ஒரு பிரச்சனைக்கும் தீர்வு இல்லை” – அர்ஜுன் சம்பத் குற்றச்சாட்டு

தாராபுரம் சட்டமன்ற தொகுதியில் அதிமுக வேட்பாளர் சத்தியபாமாவுக்கு ஆதரவாக இந்து மக்கள் கட்சி மாநில தலைவர் அர்ஜுன் சம்பத் பி...

கோவை: மூத்த குடிமக்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்கான தபால் வாக்கு பதிவு பணிகள் தொடக்கம்

கோவையில் உள்ள 10 சட்டமன்ற தொகுதிகளில், இந்த பணிக்காக 160-க்கும் மேற்பட்ட குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன. மேலும், 9000-க்கும...

கோவையில் மூத்த குடிமக்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்கான தபால் வாக்குப் பதிவு பணிகள் தொடக்கம்

கோவையில் தமிழக சட்டமன்ற தேர்தலுக்கான மூத்த குடிமக்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்கான தபால் வாக்குப் பதிவு பணிகள் இன்று...

சிங்காநல்லூர் தொகுதியில் MGR வேடத்தில் வாக்கு சேகரித்த AIADMK வேட்பாளர் கே ஆர். ஜெயராம்

சிங்காநல்லூர் தொகுதி AIADMK வேட்பாளர் K R Jayaram MGR வேடமனிந்து நந்தா நகர், திருக்குமரன் நகர் உள்ளிட்ட பகுதிகளில் வீதி...

செப்டம்பர் வரை பருத்தி இறக்குமதி வரி ரத்து செய்ய மத்திய அரசுக்கு ஜவுளி துறையினர் கோரிக்கை

பருத்தி விலை தொடர்ந்து உயர்ந்து வரும் சூழலில், தமிழக ஜவுளி தொழில்துறை நெருக்கடியை எதிர்கொண்டுள்ளது. விவசாயிகளுக்கு பாதிப...