முறைகேட்டை தட்டிக்கேட்ட விவசாயி மீது தாக்குதல் - நடவடிக்கை எடுக்கக்கோரி விவசாயிகள் ஆர்ப்பாட்டம்

கோவை மாவட்டம் சூலூர் அருகே அரசூர் திமுக ஊராட்சி தலைவரின் முறைகேட்டை தட்டி கேட்ட விவசாயி மீது தாக்குதல் நடத்தியவர்கள் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி சமூக ஆர்வலர்கள் மற்றும் விவசாயிகள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.


கோவை: முறைக்கேட்டை தட்டிக்கேட்ட விவசாயி மீது தாக்குதல் நடத்தியவர்கள் மீது போலீசார் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று விவசாயிகள் வலியுறுத்தியுள்ளனர்.

சூலூர் அருகே உள்ள அரசூர் ஊராட்சியில் நடைபெற்ற கிராம சபை கூட்டத்தில் கேள்வி எழுப்பிய விவசாயியைதாக்கியதாக திமுக நிர்வாகியை கண்டித்துவிவசாயிகள் மற்றும் சமூக ஆர்வலர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

கோவை மாவட்டம் சூலூர் ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்ட அரசூர் ஊராட்சியில் கடந்த அக்டோபர் 2 ஆம் தேதி நடைபெற்ற கிராம சபை கூட்டத்தில் விவசாயியான ரமேஷ் என்பவர் ஜல்ஜீவன் மிஷன் திட்டத்தின் கீழ் குடிநீர் குழாய் இணைப்பு வழங்குவதில் முறைகேடு நடைபெற்றது தொடர்பாக கேள்வி எழுப்பியதாக தெரிகிறது.

அப்போது திமுகவை சேர்ந்த ஊராட்சித் தலைவரின் ஆதரவாளர்கள், ரமேஷை சரமாரியாக தாக்கியதாக சொல்லப்படுகிறது. இதுகுறித்து விவசாயி ரமேஷ் தரப்பில் சூலூர் காவல் நிலையத்தில் புகார் அளித்ததாகவும் சொல்லப்படுகிறது.

இந்த நிலையில் விவசாயி ரமேஷை தாக்கியதாக ஊராட்சி மன்ற தலைவர் மனோன்மணி, திமுக ஒன்றிய செயலாளர் அன்பரசு மற்றும் அவரது ஆதரவாளர்களை கண்டித்து சூலூர் பேரூராட்சி அலுவலகம் முன்பு திரண்ட விவசாயிகள் மற்றும் சமூக ஆர்வலர்கள் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது விவசாயி ரமேஷை தாக்கிய திமுக ஆதரவாளர்கள் மீது போலீசார் நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும், அரசூர் ஊராட்சியில் தொடர்ந்து நடைபெற்று வரும் ஊழல்கள் குறித்து ஆட்சியர் விசாரணை நடத்த வேண்டும் எனவும் வலியுறுத்தி கோஷங்களை எழுப்பினர்.

தொடர்ந்து செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த விவசாயி ரமேஷ் பேசும்போது, அரசூர் ஊராட்சியில் கடந்த 15 ஆண்டுகளாக சுமார் 30 கோடி ரூபாய் அளவுக்கு ஊழல் மற்றும் பணம் கையாடல் நடந்துள்ளது. 10 வருடங்களாக ஊராட்சி செயலாளராக இருக்கும் கணேசன் மூர்த்தி என்பவர் சட்டவிரோத பண பரிவர்த்தனையில் ஈடுபட்டதுடன் தனது பெயரிலேயே சுமார் 3.30 கோடி ரூபாய் அளவுக்கு வங்கியில் இருந்து பணம் எடுத்துள்ளார். இதுகுறித்து தகவல் அறியும் உரிமைச் சட்டம் மூலம் தகவல்களை கேட்டு பெற்றுள்ளேன்.

இந்நிலையில் கிராம சபை கூட்டத்தில் கலந்து கொள்ள சென்றபோது, ஊராட்சி மன்றத்தை எதிர்த்து கேள்வி கேட்கிறாயா? என கூறிக்கொண்டு ஊராட்சி தலைவரின் ஆதரவாளர்கள் என்னை பயங்கரமாக தாக்கினர். அரசு மருத்துவமனையில் உள்நோயாளியாக அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தேன்.

இது தொடர்பாக சூலூர் காவல் நிலையத்தில் புகார் அளித்தும் வழக்கு பதிவு செய்யவில்லை. ஊராட்சி நிர்வாகத்தின் ஊழல் முறைகேடுகள் தொடர்பாக மாவட்ட நிர்வாகம் உரிய விசாரணை மேற்கொண்டு நடவடிக்கை எடுக்க வேண்டும். அதேபோல என் மீது தாக்குதல் நடத்தியவர்கள் மீதும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என தெரிவித்தார்.

இதுகுறித்து தமிழக விவசாயிகள் பாதுகாப்பு சங்கத்தின் தலைவர் ஈசன் கூறுகையில், அதிகாரிகளின் துணையோடு நடக்கும் ஊழல்களை வெளிக்கொண்டு வந்த விவசாயி மற்றும் சமூக ஆர்வலர் மீது நடைபெற்ற தாக்குதல் கண்டனத்திற்குரியது. இந்த விவகாரத்தில் உரிய தீர்வு கிடைக்காத பட்சத்தில், சூலூர் ஒன்றியத்துக்கு உட்பட்ட அனைத்து ஊராட்சிகளிலும் நடைபெற்ற முறைகேடுகள் மற்றும் ஊழல்களை வெறி கொண்டு வர தமிழக விவசாயிகள் பாதுகாப்பு சங்கம் தொடர் போராட்டங்களை முன்னெடுக்கும் என தெரிவித்தார்.

Newsletter

கோவையில் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் பறிமுதல்; 4 பேர் கைது

கோவை மாநகரில் தடை செய்யப்பட்ட குட்கா மற்றும் புகையிலைப் பொருட்கள் விற்பனையை தடுக்க போலீசார் நடத்திய சோதனையில், வெவ்வேறு...

மருதமலை கோவிலில் வைகாசி விசாகத் திருவிழா கோலாகலமாக தொடக்கம்

கோவை மருதமலை அருள்மிகு சுப்ரமணிய சுவாமி திருக்கோவிலில் வைகாசி விசாகத் திருவிழா சிறப்பு அபிஷேகம், ராஜ அலங்காரம் மற்றும் த...

கோவை மத்திய சிறையில் பரபரப்பு; சூலூர் சிறுமி கொலை வழக்கு குற்றவாளி கார்த்திக் மீது சக கைதிகள் தாக்குதல்

சூலூர் 10 வயது சிறுமி பாலியல் வன்கொடுமை மற்றும் கொலை வழக்கில் குண்டர் சட்டத்தின் கீழ் கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டி...

மாணவிகள் விடுதிகளில் தரமற்ற உணவு: கடும் நடவடிக்கை எடுக்கப்படும் - கோவையில் அமைச்சர் வன்னியரசு எச்சரிக்கை

ஒண்டிப்புதூர் மாணவிகள் விடுதிகளில் தரமற்ற உணவு வழங்கப்பட்ட புகாரை அடுத்து அமைச்சர் வன்னியரசு இன்று ஆய்வு மேற்கொண்டார். ம...

கோவை அரசு மருத்துவமனையில் நள்ளிரவில் திடீர் ஆய்வு நடத்திய அமைச்சர் சம்பத்குமார்

கோவை அரசு மருத்துவமனையில் பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் சம்பத்குமார் நள்ளிரவில் திடீர் ஆய்வு மேற்கொண்டார். பாது...

சிறுவாணி அணை நீர்மட்டம் 8 அடியாக வீழ்ச்சி: ஆகஸ்ட் வரை இருப்பு

கோவை மாநகரின் முக்கிய குடிநீர் ஆதாரமான சிறுவாணி அணையின் நீர்மட்டம் 8 அடியாக சரிந்துள்ளது. இருப்பினும், தற்போது உள்ள நீர்...