திருப்பூர்- ஜார்கண்ட் இடையே தினசரி ரயில் - ஆளுநர் உறுதி

திருப்பூரில் நடந்த வட மாநில தொழிலாளர்களுடனான கலந்துரையாடல் நிகழ்வில் திருப்பூர்- ஜார்கண்ட் தினசரி ரயில் வந்து செல்ல நடவடிக்கை எடுக்கப்படும் என ஜார்கண்ட் மாநில ஆளுநர் சி பி ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.


திருப்பூர்: வட மாநில தொழிலாளர்கள் சொந்த மாநிலம் சென்று வர ஏதுவாக திருப்பூர்- ஜார்கண்ட இடையே ரயில் இயக்க நடவடிக்கை எடுக்கப்படும் என ஆளுநர் ராதாகிருஷ்ணன் தெரிவித்தார்.

திருப்பூர் - பெருமாநல்லூர், கே.எம் நிட்வேர் பனியன் ஏற்றுமதி நிறுவனத்தில் பணி புரியும் வடமாநில தொழிலாளர்களுடனான கலந்துரையாடல் நிகழ்வில் ஜார்கண்ட் மாநில ஆளுநர் சி.பி. ராதாகிருஷ்ணன் பங்கேற்று சிறப்புரையாற்றினார்.



அதில் தொழில், தொழிலாளர் நலன் என்பது நாணயத்தின் இரு பக்கம் போன்றது எனவும், வட மாநில தொழிலாளர்கள், தங்களது சொந்த மாநிலங்களை விட தமிழகத்தில் பாதுகாப்பாகவும், மகிழ்வாகவும் பணி புரியக் கூடிய சூழல் உள்ளதாகவும், குறிப்பாக இங்கு பணி புரியக் கூடிய ஜார்கண்ட் மாநிலத்தை சேர்ந்த தொழிலாளர்கள் தங்களது வீடுகளில் உள்ளது போன்ற எண்ணத்துடன் பணியாற்றி வருவதாகவும், திருப்பூரிலிருந்து, ஜார்கண்ட் மாநிலத்திற்கு வாரம் ஒருமுறை மட்டுமே ரயில் வந்து செல்கிறது. தினமும் வந்து செல்லும்படியான நடவடிக்கைகளை தான் மேற்கொண்டு வருவதாகவும் பேசினார்.



தொடர்ந்து அந்த நிறுவனத்தில் பணியாற்றி அங்கேயே படித்து இளநிலை பட்டம் பெற்ற 17 பெண்களுக்கு பட்டங்களை ஆளுநர் வழங்கினார்.



அதனை ஜார்கண்ட் மாநில தொழிலாளர்களின் கலை நிகழ்ச்சிகளை கண்டு ரசித்தார். தொடர்ந்து ஏற்றுமதி நிறுவனத்திற்கு சென்ற ஆளுநர் வட மாநிலத்தவர்கள் அங்கு பணி புரிவதை பார்வையிட்டு, அவர்களிடம் கலந்துரையாடினார். நிகழ்வின் போது திருப்பூர் ஏற்றுமதியாளர்கள் சங்க தலைவர் சுப்பிரமணியம், டாலர் அப்பரேல்ஸ் நிறுவன உரிமையாளர் மணி உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

Newsletter

ஜூன் இறுதிக்குள் மக்கள் பயன்பாட்டிற்கு சாய்பாபா காலனி மேம்பாலம் திறக்கப்படும்: அமைச்சர் சம்பத்குமார்

கோவையில் ரூ.71 கோடி மதிப்பீட்டில் அமைக்கப்பட்டு வரும் சாய்பாபா காலனி மேம்பாலப் பணிகளை அமைச்சர் வி. சம்பத்குமார் ஆய்வு செ...

கோவை இ.எஸ்.ஐ. மருத்துவமனை அருகே ரேஷன் அரிசி கடத்தல்..? 50 மூட்டைகளுடன் சிக்கிய மினி லாரி.

கோவை இ.எஸ்.ஐ. மருத்துவமனை அருகே ரேஷன் அரிசி கடத்தப்பட்டதாக கிடைத்த தகவலின் பேரில் மினி லாரி ஒன்று மடக்கிப் பிடிக்கப்பட்ட...

கோவையில் மாநில அளவிலான பாரா மேசைப்பந்து தரவரிசைப் போட்டி: 100-க்கும் மேற்பட்டோர் பங்கேற்பு

கோவையில் உள்ள கங்கா முதுகுத்தண்டு காயம் மறுவாழ்வு மையத்தில் நடைபெற்ற தமிழ்நாடு மாநில அளவிலான பாரா மேசைப்பந்து தரவரிசைப்...

‘பியூஸ் கட்டை திருட்டு’, ‘சதி’ என ரீல்களை நிறுத்திவிட்டு, ரியல் நிர்வாகத்தில் கவனம் செலுத்த வேண்டும்: செந்தில் பாலாஜி

தமிழகத்தில் தொடரும் மின்வெட்டு மற்றும் மக்கள் போராட்டங்கள் தொடர்பாக, பிரச்சினைக்கு தீர்வு காண்பதற்குப் பதிலாக திசைதிருப்...

கிணத்துக்கடவில் 10,000 மரக்கன்றுகள் நடவு தொடக்கம்

கிணத்துக்கடவு கொண்டம்பட்டி ஊராட்சியில் சமூக பங்களிப்பு நிதியின் கீழ் 10,000 மரக்கன்றுகள் நடும் பணியை மாவட்ட ஆட்சித்தலைவர...

கோவை அரசு மருத்துவமனையில் இருந்து கைதி தப்பிய வழக்கில் 3 காவலர்கள் பணியிடை நீக்கம்

கோவை அரசு மருத்துவமனையில் இருந்து தப்பிய மோசடி வழக்கு கைதிக்கு உதவியதாக இரண்டாம் நிலை காவலர் மற்றும் கார் ஓட்டுநர் கைது...