கோவை ரயில் நிலையத்தில் போலீசார் தீவிர சோதனை

கேரள மாநிலம் களமச்சேரியில் குண்டு வெடிப்பு சம்பவம் எதிரொலியாக கோவை ரயில் நிலையத்தில் போலிசார் தீவிர சோதனை நடத்தினர்.


கோவை: கொச்சின் குண்டு வெடிப்பை தொடர்ந்து கேரள தமிழக எல்லையில் பாதுகாப்பை பலப்படுத்த காவல்துறை உத்தரவிட்டுள்ளது.

கேரள மாநிலம் எர்ணாகுளம் களமச்சேரியில் உள்ள சாம்ரா சர்வதேச மாநாட்டு மையத்தில் நடந்து வரும் யெகோவாவின் சாட்சிகளின் மண்டல மாநாட்டின் போது குண்டும் வெடிப்பு சம்பவம் நடந்தது. தேவாலயத்தில் நடந்த இந்த குண்டு வெடிப்பு சம்பவத்தால் ஒரு பெண் உயிரிழந்த நிலையில் பலர் கவலைக்கிடமாக உள்ளனர் எனவும். மேலும் 35க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர் என தகவல்கள் வெளியாகி உள்ளது.

இந்த சம்பவத்தின் எதிரொலியாக கேரளா தமிழக எல்லை பகுதிகளில் சோதனையை தீவிர படுத்த தமிழக டிஜிபி அறிவுறுத்தியுள்ளார்.

இந்நிலையில் கோவை மாநகரின் முக்கியமான 15 தேவாலயங்கள் உட்பட 50க்கும் மேற்பட்ட தேவாலயங்களுக்கு காவல்துறையினர் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.



மேலும் கோவை ரயில் நிலையத்திலும் போலீசார் தீவிர சோதனையில் ஈடுபட்டனர். ரயில்வே பாதுகாப்பு படை டிஎஸ்பி ரித்தீஷ் பாபு தலைமையில் ரயில்வே காவலர்கள் மற்றும் வெடிகுண்டு தடுப்பு நிபுணர்கள் சோதனை மேற்கொண்டனர்.



ரயில் நிலையத்தில் அனைத்து நடைமேடைகளிலும் காவல்துறையினர் சோதனை மேற்கொண்டனர். இந்த சோதனையில் வெடிகுண்டுகளை கண்டறியும் நவீன கருவிகளைக் கொண்டும் மோப்ப நாய்களை கொண்டும் சோதனை மேற்கொள்ளப்பட்டது. மேலும் அங்கு பணிபுரியும் பணியாளர்களிடமும் காவல்துறையினர் பல்வேறு அறிவுரைகளை வழங்கினர்.

Newsletter

பிரதமர் மோடி கோவை வருகை: பாதுகாப்பு ஏற்பாடுகள் தீவிரம், 3,000 போலீசார் குவிப்பு..!

தேசிய ஜனநாயக கூட்டணி வேட்பாளர்களுக்கு ஆதரவாக இன்று மாலை கோவை கொடிசியா மைதானத்தில் நடைபெறும் பிரம்மாண்ட பொதுக்கூட்டத்தில்...

கொடீசியாவில் இன்று மோடி-எடப்பாடி பழனிசாமி பிரம்மாண்ட பொதுக்கூட்டம்

கோயம்புத்தூர் கொடீசியா மைதானத்தில் இன்று மாலை பிரதமர் நரேந்திர மோடி மற்றும் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி பங்க...

“இபிஎஸ், வேலுமணி மக்கள் தீர்ப்பை சந்திப்பார்கள்” - கோவையில் செங்கோட்டையன் கடும் விமர்சனம்..!

கோவை தெற்கு தொகுதியில் தவெக வேட்பாளர் செந்தில்குமாரை ஆதரித்து பிரச்சாரம் மேற்கொண்ட தவெக நிர்வாகி செங்கோட்டையன், எடப்பாடி...

கோவையில் “Oceans of Knowledge” நூல் வெளியீட்டு விழா..!

பிரபல கடல்சார் விஞ்ஞானி டாக்டர் ஆர்.எஸ். லால் மோகனின் வாழ்க்கை வரலாற்றை பதிவு செய்த “Oceans of Knowledge” நூல் கோவையில்...

கோவையில் “Oceans of Knowledge” நூல் வெளியீட்டு விழா..!

பிரபல கடல்சார் விஞ்ஞானி டாக்டர் ஆர்.எஸ். லால் மோகனின் வாழ்க்கை வரலாற்றை பதிவு செய்த “Oceans of Knowledge” நூல் கோவையில்...

வால்பாறை மலைப்பாதையில் சுற்றுலா வேன் விபத்து: 8 பேர் உயிரிழப்பு..!

வால்பாறை - பொள்ளாச்சி மலைப்பாதையில் சுற்றுலா பயணிகளை ஏற்றிச் சென்ற டெம்போ டிராவலர் வேன் பள்ளத்தில் கவிழ்ந்ததில் 8 பேர் உ...