கோவை ரயில் நிலையத்தில் போலீசார் தீவிர சோதனை

கேரள மாநிலம் களமச்சேரியில் குண்டு வெடிப்பு சம்பவம் எதிரொலியாக கோவை ரயில் நிலையத்தில் போலிசார் தீவிர சோதனை நடத்தினர்.


கோவை: கொச்சின் குண்டு வெடிப்பை தொடர்ந்து கேரள தமிழக எல்லையில் பாதுகாப்பை பலப்படுத்த காவல்துறை உத்தரவிட்டுள்ளது.

கேரள மாநிலம் எர்ணாகுளம் களமச்சேரியில் உள்ள சாம்ரா சர்வதேச மாநாட்டு மையத்தில் நடந்து வரும் யெகோவாவின் சாட்சிகளின் மண்டல மாநாட்டின் போது குண்டும் வெடிப்பு சம்பவம் நடந்தது. தேவாலயத்தில் நடந்த இந்த குண்டு வெடிப்பு சம்பவத்தால் ஒரு பெண் உயிரிழந்த நிலையில் பலர் கவலைக்கிடமாக உள்ளனர் எனவும். மேலும் 35க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர் என தகவல்கள் வெளியாகி உள்ளது.

இந்த சம்பவத்தின் எதிரொலியாக கேரளா தமிழக எல்லை பகுதிகளில் சோதனையை தீவிர படுத்த தமிழக டிஜிபி அறிவுறுத்தியுள்ளார்.

இந்நிலையில் கோவை மாநகரின் முக்கியமான 15 தேவாலயங்கள் உட்பட 50க்கும் மேற்பட்ட தேவாலயங்களுக்கு காவல்துறையினர் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.



மேலும் கோவை ரயில் நிலையத்திலும் போலீசார் தீவிர சோதனையில் ஈடுபட்டனர். ரயில்வே பாதுகாப்பு படை டிஎஸ்பி ரித்தீஷ் பாபு தலைமையில் ரயில்வே காவலர்கள் மற்றும் வெடிகுண்டு தடுப்பு நிபுணர்கள் சோதனை மேற்கொண்டனர்.



ரயில் நிலையத்தில் அனைத்து நடைமேடைகளிலும் காவல்துறையினர் சோதனை மேற்கொண்டனர். இந்த சோதனையில் வெடிகுண்டுகளை கண்டறியும் நவீன கருவிகளைக் கொண்டும் மோப்ப நாய்களை கொண்டும் சோதனை மேற்கொள்ளப்பட்டது. மேலும் அங்கு பணிபுரியும் பணியாளர்களிடமும் காவல்துறையினர் பல்வேறு அறிவுரைகளை வழங்கினர்.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...