போயம்பாளையத்தில் 66வது பவளக்கொடி கும்மி ஆட்டம் அரங்கேற்றம் - 300க்கும் மேற்பட்ட பெண்கள் பங்கேற்பு

திருப்பூர் மாவட்டம் போயம்பாளையத்தில் நடைபெற்ற 66 வது பவளக்கொடி கும்மி ஆட்ட அரங்கேற்றத்தில் 300க்கும் மேற்பட்ட பெண்கள் பங்கேற்று பாரம்பரிய கும்மி ஆட்டத்தை ஆடி அசத்தினர்.


திருப்பூர்: 3 மணி நேரம் நடைபெற்ற கும்மி ஆட்ட நிகழ்ச்சியில் 35 வகையான ஆட்ட நுணுக்கங்களில் பெண்கள் கும்மி அடித்து மிக நேர்த்தியாக ஆடியதை திரளானோர் ஆர்வத்துடன் கண்டுகளித்தனர்.

திருப்பூர், கோவை, ஈரோடு மாவட்டங்களில் பாரம்பரிய கும்மி ஆட்டம் பெரும் எழுச்சி பெற்று வருகிறது. கோவில் விழாக்கள், முக்கிய நிகழ்ச்சிகள் உள்பட பல்வேறு விழாக்களில் இடம்பெறும் கும்மி ஆட்டம் திருப்பூர் பகுதியில் பொதுமக்களிடம் ஆர்வத்தை ஏற்படுத்தி உள்ளது.



அந்த வகையில் திருப்பூர் மாவட்டம் போயம்பாளையம் பகுதியில் பவளக்கொடி கும்மி குழுவின் 66 வது அரங்கேற்ற விழா நடைபெற்றது.



இதில் கும்மி ஆசிரியர் விஸ்வநாதன் தலைமையில் 300 பெண்கள் பல்வேறு கும்மி பாடல்களுக்கு கும்மி ஆட்டம் ஆடி அசத்தினார்கள்.



3 மணி நேரம் நடைபெற்ற இந்த கும்மி ஆட்ட நிகழ்ச்சியில் 35 வகையான ஆட்ட நுணுக்கங்களில் பெண்கள் கும்மி ஆடினார்கள். மிக நேர்த்தியாக நடைபெற்ற இந்த கும்மி ஆட்ட நிகழ்ச்சியை பொதுமக்கள் திரண்டு ரசித்தனர். திருப்பூரில் கும்மி ஆட்டம் புத்துணர்வுடன் வளர்ந்து வருவதாகவும், பாரம்பரிய கும்மி ஆட்டத்தை பெண்கள், ஆண்கள் என அனைத்து தரப்பினரும் ஆர்வமுடன் பங்கேற்று ஆடுவதாக கும்மி ஆசிரியர் விஸ்வநாதன் தெரிவித்தார்.

இந்த கும்மி ஆட்டம் ஆடுவதன் மூலம் மனமும் உடலும் புத்துணர்வு பெறுவதாகவும் பெண்கள் ஏராளமாக கலந்து கொண்டு கும்மி ஆட ஆர்வம் காட்டுவதாக இளம் பெண்கள் பாரம்பரிய கும்மி ஆட்டத்தை மீட்டெடுத்து வருவதாகவும் ஷர்மி ஶ்ரீ என்ற பெண் தெரிவித்தார்.

Newsletter

கோவையில் டாஸ்மாக் பார் அருகே டிரான்ஸ்பார்மர் வெடித்ததில் 3 பேருக்கு தீக்காயம்

கோவை கண்ணப்பநகரில் டாஸ்மாக் பார் அருகே இருந்த டிரான்ஸ்பார்மர் திடீரென வெடித்து தீப்பற்றிய விபத்தில், மூவருக்கு தீக்காயம்...

வாக்கு எண்ணிக்கை மையத்தில் பின்பற்ற வேண்டிய வழிமுறைகள் - கட்சியினருக்கு கோவை ஆட்சியர் எடுத்துரைப்பு

கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் வாக்கு எண்ணிக்கை நாளில் வேட்பாளர்கள் மற்றும் முகவர்கள் பின்பற்ற வேண்டிய வழிமுறைகள் குற...

போர் பதற்றத்தால் வளைகுடா நாடுகளை தவிர்த்து சிங்கப்பூர், மலேசியாவுக்கு படையெடுக்கும் கோவை மக்கள்

கோடைகால விடுமுறையையொட்டி கோவை விமான நிலையத்தில் பயணிகள் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. ஈரான்-இஸ்ரேல் போர் பதற்...

அண்ணாமலைக்கு ராஜ்யசபா எம்பி பதவி? – “நிச்சயம் வழங்கப்படும்”- கோவையில் எல். முருகன் உறுதி!

திமுக அரசின் மீது மக்களிடம் உள்ள கோபம், அதிருப்தி மற்றும் எதிர்ப்பு உணர்வுகள் மே 4-ஆம் தேதி தேர்தல் முடிவுகளில் தெளிவாக...

கோவை பேரூர் கோயில் தேரின் வெள்ளி பொருட்கள் திருட்டு: அறநிலையத் துறை ஊழியருக்கு 3 ஆண்டு சிறை

கோவை பேரூர் பட்டீஸ்வரர் கோயில் தேரில் வெள்ளிப் பொருட்கள் திருடப்பட்ட வழக்கில், இந்து சமய அறநிலையத் துறை ஊழியர் ஆனந்தனுக்...

தொண்டாமுத்தூர் ரவி துக்கம் அனுசரித்து நிதியுதவி வழங்கினார்

கோவை வடக்கு மாவட்ட DMK செயலாளர் தொண்டாமுத்தூர் ரவி, கோவைபுதூர் பகுதியில் கழக நிர்வாகிகளின் இல்ல துக்க நிகழ்விற்கு நேரில்...