உடுமலை தமிழக கேரளா எல்லையில் திருப்பூர் மாவட்ட காவல் துறை கண்காணிப்பாளர் வாகன சோதனை

கேரளா மாநிலம் எர்ணாகுளம் மாவட்டத்தில் கிறிஸ்துவ கூட்டத்தில் வெடிகுண்டு வெடித்ததையடுத்து, உடுமலை தமிழக-கேரளா எல்லையில் திருப்பூர் மாவட்ட காவல் துறை கண்காணிப்பாளர் வாகன சோதனையில் ஈடுபட்டுள்ளார்.


திருப்பூர்: அமராவதி அருகே உள்ள ஒன்பதாறு சோதனை சாவடியில் சோதனை தீவிரப்படுத்தப்பட்டு உள்ளது. திருப்பூர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சாமிநாதன் ஒன்பதாறு சோதனைச் சாவடியில் திடீர் ஆய்வு மேற்கொண்டார்.



கேரளா மாநிலம் எர்ணாகுளம் மாவட்டத்தில் நடைபெற்ற கிறிஸ்தவ கூட்டத்தில் வெடிகுண்டு வெடித்து பலர் காயம் அடைந்தும் ஒருவர் உயிரிழந்ததாக கூறப்படுகிறது. இந்த வெடிகுண்டு சம்பவம் நாடு முழுவதும் அதிர்வலையை ஏற்படுத்தி உள்ளது. அதன் எதிரொலியாக கேரள மாநிலத்தை ஒட்டிய தமிழக மாவட்டங்களில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டு உள்ளது.



அதன் ஒரு பகுதியாக தமிழக-கேரளா எல்லையான உடுமலை அடுத்த அமராவதி அருகே உள்ள ஒன்பதாறு சோதனை சாவடியில் சோதனை தீவிரப்படுத்தப்பட்டு உள்ளது.



இந்த சூழலில் நேற்று திருப்பூர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சாமிநாதன் ஒன்பதாறு சோதனைச் சாவடியில் திடீர் ஆய்வு மேற்கொண்டார்.



அப்போது அந்த வழியாக சென்ற வாகனங்களில் போலீஸ் தரப்பில் மேற்கொள்ளப்படும் சோதனையை பார்வையிட்டார்.



மேலும் உடுமலை உட்கோட்ட காவல்துறை அதிகாரிகளுக்கு ஆலோசனைகள் வழங்கினார். இந்த நிகழ்வின் போது உடுமலை போலீஸ் துணை சூப்பிரண்டு சுகுமாறன், போலீஸ் இன்ஸ்பெக்டர்கள் பாலமுருகன், ராஜேஷ் கண்ணன் உள்ளிட்ட போலீசார் உடன் இருந்தனர்.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...