கோவை சூலூர் அருகே இரண்டு தொழிலாளர்கள் உயிரிழக்க காரணமான கல்குவாரி மீது நடவடிக்கை எடுக்கவில்லை - சட்டமன்ற உறுப்பினர் கனகராஜ்

கோவை சூலூர் அருகே இரண்டு தொழிலாளர்கள் உயிரிழக்க காரணமான கல்குவாரி மீது நடவடிக்கை எடுக்கவில்லை எனில், எடப்பாடி பழனிச்சாமி அணியில் இருந்து விலகி வேறு அணிக்கு சென்று விடுவேன் என அத்தொகுதி சட்டமன்ற உறுப்பினர் கனகராஜ் கூறியிருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கோவையை அடுத்த சூலூர் தொகுதியில் சட்டமன்ற உறுப்பினராக அதிமுக கட்சியை சேர்ந்த கனகராஜ் இருந்து வருகிறார். முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மரணத்திற்கு பின்னர், சசிகலா ஆதரவு சட்டமன்ற உறுப்பினராக செயல்பட்டு வருகிறார். இந்நிலையில் சூலூர் அருகேயுள்ள பெரியகுயிலி பகுதியில் ஆனந்தகுமார் என்பவருக்கு சொந்தமான கல்குவாரியில் கடந்த இரண்டு நாட்களுக்கு முன்னர் நடந்த வெடிவிபத்தில் இரண்டு தொழிலாளர்கள் உயிரிழந்தனர். விபத்து நடந்த கல்குவாரியில் அத்தொகுதி சட்டமன்ற உறுப்பினரான கனகராஜ் நேற்று மாலை ஆய்வு செய்தார். 

இதையடுத்து செய்தியாளர்களிடம் பேசிய கனகராஜ், கல்குவாரியில் அதிகாரிகள் பணம் பெற்றுக்கொண்டு முறையாக ஆய்வு நடத்தவில்லை என குற்றம்சாட்டினார். இந்த கல்குவாரி மீது நடவடிக்கை எடுக்கவில்லை எனில் ஒரு சட்டமன்ற உறுப்பினரை இழக்க வேண்டியிருக்கும் என கூறிய அவர், எடப்பாடி பழனிச்சாமி அணியில் உள்ள நான் வேறு அணிக்கு சென்றுவிடுவேன் அல்லது பதவியை ராஜினாமா செய்துவிடுவேன் எனவும் தெரிவித்தார். 

மேலும் இருவர் உயிரிழக்க காரணமானவர்கள் மீது நடவடிக்கை எடுக்க முடியவில்லை எனில் எதற்கு எனக்கு பதவி என கேள்வி எழுப்பிய அவர், வேறு அணிக்கு சென்றலாலும் சென்றுவிடுவேன் எனவும், எதை பற்றியும் எனக்கு கவலையில்லை எனவும் கனகராஜ் தெரிவித்தார். ஏற்கனவே 135 அதிமுக சட்டமன்ற உறுப்பினர்களில் 12 பேர் முன்னாள் முதல்வர் ஒ.பன்னீர்செல்வம் அணிக்கு சென்றுவிட்ட நிலையில், மேலும் ஒரு சட்டமன்ற உறுப்பினர் பகிரங்கமாக வேறு அணிக்கு சென்றுவிடுவேன் என தெரிவித்திருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

Newsletter

பொள்ளாச்சி அருகே திருடிய நகைகளை விற்று காதலனுக்கு பைக் பரிசளித்த கல்லூரி மாணவி கைது

பொள்ளாச்சி அருகே குடும்ப நண்பரின் வீட்டில் 9 பவுன் தங்க நகைகளை திருடிய வழக்கில் 19 வயது கல்லூரி மாணவியை போலீசார் கைது செ...

கோவையில் விஸ்வ ஹிந்து பரிஷத் அமைப்பின் கிருஷ்ண ஜெயந்தி விழா; ராதை, கிருஷ்ணர் வேடமிட்டு குழந்தைகள் ஊர்வலம்

கோவை விஸ்வ ஹிந்து பரிஷத் சார்பில் 14-ஆம் ஆண்டு கிருஷ்ண ஜெயந்தி விழா விமரிசையாக நடைபெற்றது. சாஸ்திரி ரோட்டில் இருந்து சிவ...

Palakkad–Tiruchchirappalli Express to Be Short-Terminated at Pugalur on Four Days

The Palakkad Town–Tiruchchirappalli Express will be short-terminated at Pugalur on September 5, 8, 10 and 12 due to slee...

“விஜய் பிரதமர் வேட்பாளரா? – என்னை சிக்கலில் விட்டுவிடாதீர்கள்”: கோவையில் செங்கோட்டையன் பதில்

கோவை விமான நிலையத்தில் இன்று செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் செங்கோட்டையன், தமிழகத்தில் பல்வேறு துறைகளுக்கான அறிவிப்புக...

Coimbatore–Nagercoil Express to Run on Diverted Route via Podanur, Poallchi

The Coimbatore–Nagercoil Express will operate on a diverted route on September 5, 8, 10 and 12 due to sleeper renewal an...

கோவையில் 15 அடி உயரத்தில் இருந்து தொழிலாளி தவறி விழுந்து காயம்; பாதுகாப்பு வசதிகள் குறித்து புகார்

கோவை சுந்தராபுரம் பகுதியில் உள்ள தனியார் தொழிற்சாலையில் சுமார் 15 அடி உயரத்தில் இருந்து தவறி விழுந்து பலத்த காயமடைந்த தொ...