உடுமலை அருகே நடைபெற்ற பொன்னர் சங்கர் திருக்கல்யாணம்

திருப்பூர் மாவட்டம் உடுமலை அருகே மெட்ராத்தியில் அருள்மிகு பொன்னர் சங்கர் திருக்கல்யாணம் மற்றும் பட்டாபிஷேக விழா வெகுவிமரிசையாக நடைபெற்றது.


திருப்பூர்: உடுமலையில் நடந்த பொன்னர் சங்கர் திருக்கல்யாணத்தில் ஏராளமான பக்தர்கள் பங்கேற்றனர்.

உடுமலை அருகே மெட்ராத்தி அருள்மிகு மாரியம்மன் திருக்கோயில் வளாகத்தில் பொன்னர் சங்கர் கதைப்பாடல் தொடர் நிகழ்ச்சி நடைபெற்று வருகிறது. இதில் பெரியகாண்டி அம்மன் தவசு, செல்லாண்டியம்மன் கோவில் கும்பாபிஷேகம், தாமரை அரியநாச்சியின் பூப்பு நன்னீராட்டு விழா, குன்னுடையாசாமி தாமரை அரியநாச்சி கல்யாணம், செல்லாண்டி அம்மன் தேரோட்டம், தாமரை தவசு, பொன்னர் சங்கர் அருக்காணி தங்கம் பிறப்பு ஆகிய முக்கிய நிகழ்ச்சிகள் ஒவ்வொரு நாளும் நடைபெற்று வந்தது.



இதனைத் தொடர்ந்து அருள்மிகு பொன்னர் சங்கர் திருக்கல்யாணம் நடைபெற்றது.



முன்னதாக ஐம்பொன்னால் ஆகிய பொன்னர், சங்கர், ஸ்ரீபச்சாயி, ஸ்ரீபவளாயி உற்சவ மூர்த்திகளுக்கு சிறப்பு அபிஷேகங்களும், அலங்கார பூஜையும் நடைபெற்றது. தொடர்ந்து கணபதி பூஜை, செல்லாண்டியம்மன் பூஜை மற்றும் சிறப்பு ஹோமத்துடன் திருக்கல்யாணம் நடைபெற்றது.



திருக்கல்யாணத்தை தொடர்ந்து பொன்னர் சங்கருக்கு கிரீடம், செங்கோல் சாத்தப்பட்டு பட்டாபிஷேக விழாவும் நடந்தது.



இந்நிகழ்ச்சியை உடுமலை முனைவர் க. சீதாராமன், உடுமலை சிவா ஆகியோர் கதைப்பாடல் வழி நடத்தினர் நிகழ்ச்சியில் 3000-க்கும் மேற்பட்ட பக்தர்கள் கலந்து கொண்டனர்.

Newsletter

கோவையில் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் பறிமுதல்; 4 பேர் கைது

கோவை மாநகரில் தடை செய்யப்பட்ட குட்கா மற்றும் புகையிலைப் பொருட்கள் விற்பனையை தடுக்க போலீசார் நடத்திய சோதனையில், வெவ்வேறு...

மருதமலை கோவிலில் வைகாசி விசாகத் திருவிழா கோலாகலமாக தொடக்கம்

கோவை மருதமலை அருள்மிகு சுப்ரமணிய சுவாமி திருக்கோவிலில் வைகாசி விசாகத் திருவிழா சிறப்பு அபிஷேகம், ராஜ அலங்காரம் மற்றும் த...

கோவை மத்திய சிறையில் பரபரப்பு; சூலூர் சிறுமி கொலை வழக்கு குற்றவாளி கார்த்திக் மீது சக கைதிகள் தாக்குதல்

சூலூர் 10 வயது சிறுமி பாலியல் வன்கொடுமை மற்றும் கொலை வழக்கில் குண்டர் சட்டத்தின் கீழ் கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டி...

மாணவிகள் விடுதிகளில் தரமற்ற உணவு: கடும் நடவடிக்கை எடுக்கப்படும் - கோவையில் அமைச்சர் வன்னியரசு எச்சரிக்கை

ஒண்டிப்புதூர் மாணவிகள் விடுதிகளில் தரமற்ற உணவு வழங்கப்பட்ட புகாரை அடுத்து அமைச்சர் வன்னியரசு இன்று ஆய்வு மேற்கொண்டார். ம...

கோவை அரசு மருத்துவமனையில் நள்ளிரவில் திடீர் ஆய்வு நடத்திய அமைச்சர் சம்பத்குமார்

கோவை அரசு மருத்துவமனையில் பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் சம்பத்குமார் நள்ளிரவில் திடீர் ஆய்வு மேற்கொண்டார். பாது...

சிறுவாணி அணை நீர்மட்டம் 8 அடியாக வீழ்ச்சி: ஆகஸ்ட் வரை இருப்பு

கோவை மாநகரின் முக்கிய குடிநீர் ஆதாரமான சிறுவாணி அணையின் நீர்மட்டம் 8 அடியாக சரிந்துள்ளது. இருப்பினும், தற்போது உள்ள நீர்...