பா.ஜ.க மத்தியில் ஆட்சிக்கு வந்த பின்னர் மதரீதியான வன்முறையும், தலித் விரோத நடவடிக்கைகளும் அதிகரித்துள்ளது - தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் திருநாவுக்கரசர் குற்றம்சாட்டினார்

கோவையில் பாரூக் என்ற திராவிட கழகத்தை சேர்ந்த இளைஞர் கொலை செய்யப்பட்டது கண்டிக்கதக்கது எனவும், பா.ஜ.க மத்தியில் ஆட்சிக்கு வந்த பின்னர் மதரீதியாகவும், தலித் மக்களும் பாதிக்கப்படுவதும் அதிகரித்துள்ளது எனவும் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் திருநாவுக்கரசர் குற்றம்சாட்டினார்.

கோவையில் காங்கிரஸ் கமிட்டி தலைவர் திருநாவுக்கரசர் நேற்று செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது  எடப்பாடி பழனிச்சாமியை மரியாதை நிமித்தமாக விமான நிலையத்தில் சந்தித்தாக தெரிவித்தார். மேலும் ஆர்.கே.நகர் தேர்தல் அதிகாரியை மாற்றியது போல நிறைய நடவடிக்கைகள் எடுக்க வேண்டும் என தெரிவித்த அவர், பணபட்டுவாடா இல்லாமல் தேர்தல் நடத்தப்பட வேண்டும் என வலியுறுத்தினார்.

மேலும் மக்கள் நல கூட்டணியானது கருத்து வேறுபாடுகளுடன் அதில் உள்ள கட்சிகள்  ஒன்றாக இருந்து வந்ததாகவும் தேர்தலில் போட்டியிடாத  சி.பி.ஐ , விடுதலை சிறுத்தைகள் போன்ற கட்சிகள் திமுக கூட்டணிக்கு ஆதரவு கொடுத்தால் வரவேற்க தக்கது எனவும் தெரிவித்தார்.

மேலும் கோவையில் பாரூக் என்ற இளைஞர் கொலை செய்யப்பட்டது கண்டிக்கதக்கது என கூறியவர் பா.ஜ.க மத்தியில் ஆட்சிக்கு வந்த பின்னர் மதரீதியாகவும், தலித் மக்கள் பாதிக்கப்படுவதும் அதிகரித்துள்ளது எனவும் குற்றச்சாட்டினார். 5 மாநில தேர்தல் காங்கிரஸ் தோல்வி என்றோ, பா.ஜ.கவிற்கு வெற்றி என்றோ எடுத்துக்கொள்ள கூடாது எனவும் கோவாவி அதிக இடங்களை காங்கரஸ் வெற்றி பெற்றிருந்தும்  குறுக்கு வழியில் ஜனநாயகத்திற்கு விரோதமாக ஆட்சியை பா.ஜ.க அமைத்துள்ளது என தெரிவித்தார்.

மேலும் உள்ளாட்சி தேர்தலை உடனடியாக நடத்த தமிழக அரசு நடவடிக்கை எடுக்கவேண்டும் எனவும் தெரிவித்தார். அவினாசி அத்திகடவு திட்டத்திற்கு  தமிழக அரசு நிதி ஓதுக்கி இருப்பது வரவேற்க தக்கது எனவும் தெரிவித்த அவர், சூலூர் சட்டமன்ற உறுப்பினர் பெயரை வாக்காளர் பட்டியலில் இறந்தவர்கள் பட்டியலில் சேர்க்க காரணமானவர்கள் மீது அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தினார்.

Newsletter

கவுண்டம்பாளையத்தில் பெண்களிடம் ஆபாச சைகைகள் காட்டி அச்சுறுத்திய நபர் மீது கைது நடவடிக்கை

கோவை கவுண்டம்பாளையம் பகுதியில் பெண்களை குறிவைத்து அரை நிர்வாணமாக நின்று ஆபாச சைகைகள் காட்டி அச்சுறுத்திய 38 வயது நபரை போ...

ஆனைகட்டி அருகே உக்ரைன் சுற்றுலா பயணியை விரட்டிய காட்டு யானை

கோவை மாவட்டம் ஆனைகட்டி அருகே ஒற்றை காட்டு யானை விரட்டியதால் உயிர் தப்பிக்க ஓடிய உக்ரைன் நாட்டைச் சேர்ந்த சுற்றுலா பயணி ப...

அவிநாசி தனித்தொகுதி தவெக MLA கமலி அமைச்சராக பதவியேற்பு

திருப்பூர் மாவட்டம் அவிநாசி தனித்தொகுதி தமிழக வெற்றிக் கழக MLA கமலி, தவெக அரசின் இரண்டாம் கட்ட அமைச்சரவை விரிவாக்கத்தில்...

கோவை மாவட்டத்தை சேர்ந்த 2 தவெக MLA-க்களுக்கு அமைச்சரவை பதவி..!

கோவை வடக்கு மற்றும் கிணத்துக்கடவு தொகுதிகளை சேர்ந்த தவெக சட்டமன்ற உறுப்பினர்கள் சம்பத்குமார், விக்னேஷ் குமார் ஆகியோருக்க...

கோவையில் இன்று (21.05.2026) மாதாந்திர மின் பராமரிப்பு:  பல பகுதிகளில் மின் நிறுத்தம்

கோவை நகரில் மே 21, 2026 காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை ஐந்து துணை மின்நிலையங்களில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறும...

Left Parties Stage Demonstration in Coimbatore Urging Rollback of Fuel and Commercial LPG Price Hike..!

Demanding an immediate rollback of the hike in petrol, diesel and commercial LPG cylinder prices, the CPI(M), CPI and CP...