மடத்துக்குளம் அருகே இலவச மருத்துவ முகாம் - பலர் பங்கேற்பு

திருப்பூர் மாவட்டம் மடத்துக்குளம் ஒன்றியம் நரசிங்காபுரம் பகுதியில் கலைஞர் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு இலவச பொது மருத்துவ ஆலோசனை முகாம் நடைபெற்றது.


திருப்பூர்: மடத்துக்குளம் அருகே நடந்த இலவச மருத்துவமுகாமில் ஏராளமான பொதுமக்கள் பங்கேற்று பயனடைந்தனர்.



மடத்துக்குளம் ஒன்றியம், மைவாடி ஊராட்சி, நரசிங்காபுரம் பகுதியில் கலைஞர் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு மடத்துக்குளம் மேற்கு ஒன்றிய திமுக, லாவண்யா மருத்துவமனை மற்றும் எண்ணம் போல் வாழ்க்கை அறக்கட்டளை இணைந்து நடத்தும் இலவச பொது மருத்துவ ஆலோசனை முகாம் நடைபெற்றது. மடத்துக்குளம் மேற்கு ஒன்றிய செயலாளர் கே.ஈஸ்வரசாமி தலைமையில் சிறப்பாக நடைபெற்றது.



இந்நிகழ்ச்சியினை திருப்பூர் தெற்கு மாவட்ட கழக அவைத்தலைவர் இரா.ஜெயராமகிருஷ்ணன் மடத்துக்குளம் மேற்கு ஒன்றிய மாவட்ட பிரதிநிதி ஜெயகுமார் துவக்கி வைத்தனர்.



மேலும் இந்நிகழ்வில் மடத்துக்குளம் கிழக்கு ஒன்றியக் கழக செயலாளர் சாகுல் அமீது மைவாடி ஊராட்சி மன்ற தலைவர் முருகன் நரசிங்கபுரம் கிளைக் செயலாளர் ராஜ்மோகன் உட்பட கிளைக் கழக நிர்வாகிகள் முத்துச்சாமி, சௌந்தரராஜன், முருகானந்தம், கோபால்சாமி எண்ணம் போல் வாழ்க்கை அறக்கட்டளை நிறுவனர் நெல்சன் மைவாடி ஊராட்சி செயலர் முகமது இஷாக் உட்பட மருத்துவர்கள் பரமசிவம், கௌரி பரமசிவம், கார்த்திக் உட்பட ஊர் பொதுமக்களும் கலந்து கொண்டனர்.

Newsletter

கோவை 100 அடி சாலையில் அரசு பேருந்து மோதி முதியவர் பலி

கோவை 100 அடி சாலையில் அரசு பேருந்து இருசக்கர வாகனத்தின் மீது மோதியதில் 74 வயது முதியவர் உயிரிழந்தார். இந்த விபத்து தொடர்...

நெஞ்சுவலி சிகிச்சையில் கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனைக்கு சர்வதேச அங்கீகாரம்

மாரடைப்பு மற்றும் நெஞ்சுவலி நோயாளிகளுக்கு சர்வதேச தரத்தில் சிகிச்சையை வழங்குவதில் கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனை சிறப...

கோவையில் ஸ்ரீ ராமகிருஷ்ணா சென்ட்ரல் பள்ளியில் ஸ்கில் லேப் மற்றும் பாட்காஸ்ட் ஸ்டுடியோ திறப்பு

கோவையில் ஸ்ரீ ராமகிருஷ்ணா சென்ட்ரல் பள்ளியில் ஸ்கில் லேப் மற்றும் வோக்ஸ் வேவ் பாட்காஸ்ட் ஸ்டுடியோ இன்று திறக்கப்பட்டது....

கோயம்புத்தூர் மாநகராட்சி வளர்ச்சிப் பணிகள் குறித்து அமைச்சர் சம்பத்குமார் தலைமையில் கலந்தாய்வு

பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் வி.சம்பத்குமார் தலைமையில் கோயம்புத்தூர் மாநகராட்சி வளர்ச்சிப் பணிகள் குறித்த கலந்த...

ஒண்டிப்புதூர் ABC மையத்தையும் உக்கடம் கழிவுநீர் சேகரிப்பு மையத்தையும் மாநகராட்சி ஆணையாளர் ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா இன்று ஒண்டிப்புதூர் பகுதியில் உள்ள வீடில்லா நாய்களுக்கான ABC மையத்தையும...

பேரூர் குளத்தில் 449-வது வார தூய்மைப் பணி - பொதுமக்கள் பங்கேற்க அழைப்பு

கோவை பேரூரில் WWF-India மற்றும் கோவை குளங்கள் பாதுகாப்பு அமைப்பு இணைந்து 449-வது வார தூய்மைப் பணியை ஜூன் 28 அன்று காலை 7...