சி.ஐ.டி.யு சார்பில், 20 சதவீதம் போனஸ் வழங்கக் கோரி, பணியாளர்கள் கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது

மின் வாரிய ஊழியர்களுக்கு, 20 சதவீத போனஸ் அறிவித்துள்ளதுபோல், எங்களுக்கும் 20 சதவீதம் போனஸ் வழங்க வேண்டும் என்று விளாங்குறிச்சி ரோட்டில் உள்ள வாரிய கண்காணிப்பு பொறியாளர் அலுவலகம் முன் பணியாளர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.


கோவை: 20 சதவீதம் போனஸ் வழங்கவில்லை எனில், பண்டிகை சமயத்தில் குடிநீர் வினியோகம் தடைபட்டால் தொழிற்சங்கமோ, தொழிலாளர்களோ பொறுப்பல்ல என சி.ஐ.டி.யுவினர் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

விளாங்குறிச்சி ரோட்டில் உள்ள வாரிய கண்காணிப்பு பொறியாளர் அலுவலகம் முன் நடந்த ஆர்ப்பாட்டத்துக்கு, சங்கத் தலைவர் பிரான்சிஸ் தலைமை வகித்தார். உதவி தலைவர் பாலகுமார் முன்னிலை வகித்தார். ஆர்ப்பாட்டத்தில், 'வாரிய பணியாளர்களுக்கு, தன்னிச்சையாக போனஸ் அறிவித்தது கண்டிக்கத்தக்கது, பணியாளர்களுக்கு லாபத்திற்கேற்ப போனஸ் அறிவிக்க வேண்டும்' என்பன உள்ளிட்ட கோஷங்களை, 70க்கும் மேற்பட்டோர் எழுப்பினர். சங்க பொதுச் செயலாளர் சரவணன் கூறுகையில், கடந்த காலங்களில் நஷ்டத்தில் இயங்கி வந்ததால், 8.33 சதவீத போனஸ் வழங்கப்பட்டது.

தற்போது, குடிநீர் கட்டணம் உயர்த்தப்பட்டு லாபத்தில் இயங்கி வருகிறது. நஷ்டத்தில் இயங்குவதாக கூறப்படும் போக்குவரத்துக்கழகம், மின் வாரிய ஊழியர்களுக்கு, 20 சதவீத போனஸ் அறிவித்துள்ளது. எனவே, எங்களுக்கும் 20 சதவீதம் போனஸ் வழங்க வேண்டும் என்றார். கோரிய போனஸ் தொகையை வழங்கவில்லையேல், பண்டிகை சமயத்தில் குடிநீர் வினியோகம் தடைபட்டால் தொழிற்சங்கமோ, தொழிலாளர்களோ பொறுப்பல்ல எனவும் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

Newsletter

உடுமலை மாரியம்மன் கோவில் தேர் திருவிழா: தேசிய நெடுஞ்சாலையில் போக்குவரத்து மாற்றம்

திருப்பூர் மாவட்டம் உடுமலையில் இன்று மாலை மாரியம்மன் கோவில் தேர் திருவிழா நடைபெறுவதால், கோவை-திண்டுக்கல் தேசிய நெடுஞ்சால...

தொண்டாமுத்தூரில் AIADMK வேட்பாளர் S.P. வேலுமணிக்கு இந்து மக்கள் கட்சி ஆதரவு அறிவிப்பு

தொண்டாமுத்தூர் தொகுதியில் இந்து மக்கள் கட்சி சுயேச்சை வேட்பாளர் சூர்யாவின் வேட்பு மனு நிராகரிக்கப்பட்ட நிலையில், மாநில ப...

கோவை மாவட்டத்தில் தேர்தல் சோதனையில் ரூ.8.18 கோடி பணமும் நகையும் பறிமுதல்

கோவை மாவட்டத்தில் தேர்தல் பறக்கும்படை மற்றும் வருமான வரித்துறையினர் நடத்திய சோதனையில் கடந்த இரு நாள்களில் ரூ.8.18 கோடி ர...

மேட்டுப்பாளையம் தொகுதியில் கவிதா கல்யாணசுந்தரத்திற்கு ஆதரவாக காரமடையில் தீவிர வாக்கு சேகரிப்பு

கோவை வடக்கு மாவட்ட DMK செயலாளர் தொண்டாமுத்தூர் ரவி தலைமையில் மேட்டுப்பாளையம் சட்டமன்ற தொகுதி வேட்பாளர் கவிதா கல்யாணசுந்த...

ஆனைகட்டியில் மலைவாழ் மக்களிடம் பிரச்சாரம் மேற்கொண்ட அதிமுக வேட்பாளர் அருண்குமார்

கோவை ஆனைகட்டி பகுதியில் மலைவாழ் மக்கள் மத்தியில் அதிமுக வேட்பாளர் பி.ஆர்.ஜி.அருண்குமார் தனது தேர்தல் பிரச்சாரத்தை மேற்கொ...

கோவை கடைவீதி போலீசாரின் அதிரடி சோதனை: மெத்தாம்பெட்டமைன் விற்பனை செய்த 3 பேர் கைது

கோவை கடைவீதி போலீசார் தெற்கு உக்கடத்தில் ரோந்து பணியின்போது சந்தேகத்தின் அடிப்படையில் 3 பேரை சோதனை செய்தனர். அவர்களிடம்...