சி.ஐ.டி.யு சார்பில், 20 சதவீதம் போனஸ் வழங்கக் கோரி, பணியாளர்கள் கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது

மின் வாரிய ஊழியர்களுக்கு, 20 சதவீத போனஸ் அறிவித்துள்ளதுபோல், எங்களுக்கும் 20 சதவீதம் போனஸ் வழங்க வேண்டும் என்று விளாங்குறிச்சி ரோட்டில் உள்ள வாரிய கண்காணிப்பு பொறியாளர் அலுவலகம் முன் பணியாளர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.


கோவை: 20 சதவீதம் போனஸ் வழங்கவில்லை எனில், பண்டிகை சமயத்தில் குடிநீர் வினியோகம் தடைபட்டால் தொழிற்சங்கமோ, தொழிலாளர்களோ பொறுப்பல்ல என சி.ஐ.டி.யுவினர் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

விளாங்குறிச்சி ரோட்டில் உள்ள வாரிய கண்காணிப்பு பொறியாளர் அலுவலகம் முன் நடந்த ஆர்ப்பாட்டத்துக்கு, சங்கத் தலைவர் பிரான்சிஸ் தலைமை வகித்தார். உதவி தலைவர் பாலகுமார் முன்னிலை வகித்தார். ஆர்ப்பாட்டத்தில், 'வாரிய பணியாளர்களுக்கு, தன்னிச்சையாக போனஸ் அறிவித்தது கண்டிக்கத்தக்கது, பணியாளர்களுக்கு லாபத்திற்கேற்ப போனஸ் அறிவிக்க வேண்டும்' என்பன உள்ளிட்ட கோஷங்களை, 70க்கும் மேற்பட்டோர் எழுப்பினர். சங்க பொதுச் செயலாளர் சரவணன் கூறுகையில், கடந்த காலங்களில் நஷ்டத்தில் இயங்கி வந்ததால், 8.33 சதவீத போனஸ் வழங்கப்பட்டது.

தற்போது, குடிநீர் கட்டணம் உயர்த்தப்பட்டு லாபத்தில் இயங்கி வருகிறது. நஷ்டத்தில் இயங்குவதாக கூறப்படும் போக்குவரத்துக்கழகம், மின் வாரிய ஊழியர்களுக்கு, 20 சதவீத போனஸ் அறிவித்துள்ளது. எனவே, எங்களுக்கும் 20 சதவீதம் போனஸ் வழங்க வேண்டும் என்றார். கோரிய போனஸ் தொகையை வழங்கவில்லையேல், பண்டிகை சமயத்தில் குடிநீர் வினியோகம் தடைபட்டால் தொழிற்சங்கமோ, தொழிலாளர்களோ பொறுப்பல்ல எனவும் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

Newsletter

கோவை கண்ணப்பநகரில் அண்ணாமலை தீவிர தேர்தல் பரப்புரை மேற்கொண்டார்

கோவை வடக்கு சட்டமன்றத் தொகுதியின் கண்ணப்பநகர் பகுதியில் தமிழக பாஜக முன்னாள் மாநிலத் தலைவர் K.Annamalai, அதிமுக கோவை வடக்...

பாஜக மகளிரணித் தலைவர் வானதி சீனிவாசன் உடல்நலக்குறைவால் மருத்துவமனையில் அனுமதி

கோவை வடக்கு தொகுதியில் போட்டியிடும் பாஜக மகளிரணித் தலைவர் வானதி சீனிவாசன், தீவிர பிரச்சாரத்தால் ஏற்பட்ட காலில் வலி மற்று...

மூலப்பொருட்கள் விலை உயர்வால் பவுண்டரி பொருட்களின் விலை 10 சதவீதம் உயர்த்த 'காஸ்மாபேன்' சங்கம் முடிவு

மூலப்பொருட்கள் விலை உயர்வால் பவுண்டரி தொழிலில் உற்பத்தி பணிகள் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் இதனால் பவுண்டரி உற்பத்தி பொருட்க...

மூலப்பொருட்கள் விலை உயர்வால் பவுண்டரி பொருட்களின் விலை 10 சதவீதம் உயர்த்த 'காஸ்மாபேன்' சங்கம் முடிவு

மூலப்பொருட்கள் விலை உயர்வால் பவுண்டரி தொழிலில் உற்பத்தி பணிகள் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் இதனால் பவுண்டரி உற்பத்தி பொருட்க...

தொண்டாமுத்தூர்: திமுக வேட்பாளர் என்.ஆர். கார்த்திகேயன் வெற்றிக்காக கட்சியினர் ஒன்றுபட்டு செயல்பட வேண்டும் – செந்தில் பாலாஜி

தொண்டாமுத்தூர் சட்டமன்றத் தொகுதியில் நடைபெற்ற செயல்வீரர்கள் மற்றும் வீராங்கனைகள் கூட்டத்தில், கூட்டணிக் கட்சிகளின் நிர்வ...

வால்பாறை: திமுக வேட்பாளருக்கு ஆதரவு கோரி டாக்டர் மகேந்திரன் பரப்புரை..!

வால்பாறை சட்டமன்றத் தொகுதி திமுக வேட்பாளர் குட்டி என்கிற ஆ. சுதாகருக்கு ஆதரவு கோரி, பொள்ளாச்சி மற்றும் வால்பாறை தேர்தல்...