பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கோவையில் தமிழ்நாடு அரசு கல்லூரி ஆசிரியர் கழகத்தினர் போராட்டம்

புதிய பென்ஷன் திட்டத்தை ரத்து செய்து பழைய பென்ஷன் திட்டத்தை அமல்படுத்த வேண்டும் உட்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கோவை அரசு கலைக்கல்லூரி முன்பு தமிழ்நாடு அரசு கல்லூரி ஆசிரியர் கழகத்தினர் போராட்டத்தில் ஈடுபட்டனர்.


கோவை: எம்எல் பிஎச்டி பட்ட மேற்படிப்புகளுக்கு ஊக்க ஊதிய உயர்வு தொகை வழங்க வேண்டும், இணை பேராசிரியர் நிலையில் மூன்று வருடம் முடித்தவுடன் பேராசிரியர் பணி மேம்பாடு வேண்டும் என்று தமிழ்நாடு அரசு கல்லூரி ஆசிரியர் கழகத்தினர் வலியுறுத்தியுள்ளனர்.



பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ்நாடு அரசு கல்லூரி ஆசிரியர் கழகம் சார்பில் இன்று மாநிலம் முழுவதும் அனைத்து அரசு மற்றும் அரசு உதவி பெறும் கல்லூரிகள் முன்பு வாயில் முழக்கப் போராட்டம் நடைபெறுகிறது.



இந்தப் போராட்டத்தில் புதிய பென்ஷன் திட்டத்தை ரத்து செய்து பழைய பென்ஷன் திட்டத்தை அமல்படுத்த வேண்டும், எம்எல் பிஎச்டி பட்ட மேற்படிப்புகளுக்கு ஊக்க ஊதிய உயர்வு தொகை வழங்க வேண்டும், இணை பேராசிரியர் நிலையில் மூன்று வருடம் முடித்தவுடன் பேராசிரியர் பணி மேம்பாடு வேண்டும், புத்தக பயிற்சிக்கு யுஜிசி நெறிமுறைகளை படிக்கால நீட்டிப்பு வழங்கி கல்லூரி கல்வி இயக்குனர் செயல்முறை வழங்க வேண்டும், இணை பேராசிரியர் பதவிக்கு முனைவர் பட்டம் வழங்க வேண்டும் என்ற நிபந்தனையை தளர்த்த வேண்டும், இதர அரசு ஊழியர்களுக்கான பொதுவான கோரிக்கைகளை நிறைவேற்ற வேண்டும் ஆகிய கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டன.



தமிழகம் முழுவதும் நடைபெறும் இந்த போராட்டத்தின் ஒரு பகுதியாக கோவை அரசு கலைக்கல்லூரி முன்பு கோவை மாவட்டத்தை சேர்ந்த தமிழ்நாடு அரசு கல்லூரி ஆசிரியர் கழகத்தினர் கலந்து கொண்டு கோரிக்கை முழக்கங்களை எழுப்பினர். இந்தப் போராட்டத்தில் TNGUTA, AUT, MUTA ஆகிய சங்கங்களும் இணைந்து இந்த கோரிக்கைகளை வலியுறுத்தினர்.

Newsletter

‘யாத்ரி சுவிதா திவஸ் 2026’ கொண்டாட்டம்: பயணிகள் சேவையில் அர்ப்பணிப்பை வெளிப்படுத்திய கோவை விமான நிலையம்

கோவை சர்வதேச விமான நிலையத்தில் யாத்ரி சுவிதா திவஸ் 2026 முன்னிட்டு கலாச்சார நிகழ்ச்சிகள், சுகாதார முகாம்கள், ரத்ததானம்,...

முத்தண்ணன்குளம் Turf மைதானத்துக்கான தனியாருடனான ஒப்பந்தத்தை மாநகராட்சி ரத்து செய்ய வேண்டும்: DYFI வலியுறுத்தல்

கோவை மாநகராட்சி சார்பில் ரூ.60 லட்சம் செலவில் அமைக்கப்பட்ட முத்தண்ணன்குளம் Turf மைதான தனியார் நிறுவனத்திடம் செய்த ஒப்பந்...

50-க்கும் மேற்பட்ட சிசிடிவி காட்சிகள் ஆய்வு: ரூ.40 ஆயிரம் மீட்டு உரியவரிடம் ஒப்படைத்த ஆர்.எஸ்.புரம் போலீசார்..!

கோவை ஆர்.எஸ்.புரம் பகுதியில் உள்ள கனரா வங்கி அருகே தவறவிட்ட ரூ.40 ஆயிரத்தை, 50-க்கும் மேற்பட்ட சிசிடிவி காட்சிகளை ஆய்வு...

மாற்றுத்திறனாளிகள் நலனுக்காக பணியாற்றியவர்களுக்கு மாநில விருதுகள்: விண்ணப்பங்கள் வரவேற்பு

மாற்றுத்திறனாளிகள் நலனுக்காக சிறப்பாக பணியாற்றிய தனிநபர்கள், தொண்டு நிறுவனங்கள், மருத்துவர்கள் மற்றும் நிறுவனங்களுக்கு த...

கோவை தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் ஜூன் 23, 24-ல் மாபெரும் வேலைவாய்ப்பு முகாம்

கோயம்புத்தூர் தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் ஜூன் 23, 24 தேதிகளில் மாபெரும் வேலைவாய்ப்பு முகாம் நடைபெறுகிறது. 20...

கோவையில் நாளை மின் பராமரிப்பு பணி: பல்வேறு பகுதிகளில் மின் தடை

கோவையில் நாளை (ஜூன் 16) காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை போத்தனூர், குப்பேபாளையம், பாப்பநாயக்கன்பாளையம் உட்பட பல்வேறு துண...