நமது குப்பை, நமது பொறுப்பு, குப்பைகளை தரம்பிரித்து வழங்குமாறு பொதுமக்களுக்கு கோவை மாநகராட்சி அறிவுரை

கோவை‌ மாநகராட்சிக்குட்பட்ட அனைத்து மண்டல வார்டு பகுதிகளில்‌ உள்ள வணிக நிறுவனங்கள்‌, கடைகள்‌ மற்றும்‌ நடைபாதை கடைகள்‌ நடத்தும்‌ வியாபாரிகள்‌ தங்கள்‌ கடைகளில்‌ சேகரமாகும்‌ குப்பைகளை தரம்‌ பிரித்து வழங்க வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.


கோவை: குப்பைகளை தரம் பிரித்து கொடுக்க தவறும்‌ பட்சத்தில்‌ திடக்கழிவு மேலாண்மை விதி 2016-ன்படி தினந்தோறும்‌ அபராதம்‌ விதிக்கப்படும்‌ என்று மாநகராட்சி ஆணையாளர்‌ மா.சிவகுரு பிரபாகரன்‌ எச்சரித்துள்ளார்.

கோவை‌ மாநகராட்சிக்குட்பட்ட அனைத்து மண்டல வார்டு பகுதிகளில்‌ உள்ள வணிக நிறுவனங்கள்‌, கடைகள்‌ மற்றும்‌ நடைபாதை கடைகள்‌ நடத்தும்‌ வியாபாரிகள்‌ தங்கள்‌ கடைகளில்‌ சேகரமாகும்‌ குப்பைகளை தரம்‌ பிரித்து மக்கும்‌ குப்பைகளை பச்சைநிற குப்பைத்‌ தொட்டிகளிலும்‌,‌ மக்காத குப்பைகளை நீல நிற குப்பைத்‌ தொட்டிகளிலும்‌ சேகரித்து மாநகராட்சி தூய்மைப்‌ பணியாளர்களிடம்‌ கொடுக்க வேண்டும்‌.

பச்சை மற்றும்‌ நீல நிற குப்பைத்‌ தொட்டிகளை 30.11.2023 தேதிக்கு முன்பாக கடைகள்‌/ நிறுவனங்களில்‌ முறையாக வைத்து பொதுமக்களுக்கும்‌ வாடிக்கையாளர்களுக்கும்‌ விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும்‌. கோவை‌ மாநகரை தூய்மையாக பராமரிக்க தங்களின்‌ பங்களிப்பை முக மலர்ச்சியுடன்‌ செய்து தர கேட்டுக்‌ கொள்ளப்படுகிறீர்கள்‌. தவறும்‌ பட்சத்தில்‌ திடக்கழிவு மேலாண்மை விதி 2016-ன்படி தினந்தோறும்‌ அபராதம்‌ விதிக்கப்படும்‌ என்று அறிவுறுத்தப்படுகின்றார்கள்‌ என மாநகராட்சி ஆணையாளர்‌ மா.சிவகுரு பிரபாகரன்‌ தெரிவித்துள்ளார்‌.

Newsletter

வால்பாறை வளர்ச்சிக்கு அதிமுக வாக்குறுதி: வேட்பாளர் லட்சுமண சிங் பல்வேறு அறிவிப்புகள்..!

வால்பாறை சட்டமன்றத் தொகுதி அதிமுக வேட்பாளர் லட்சுமண சிங், தேர்தலை முன்னிட்டு சுற்றுலா, விவசாயம், தொழில், கல்வி மற்றும் அ...

மூலப்பொருள் விலை உயர்வு: அவசர கால கடன் உதவி வழங்க ரிசர்வ் வங்கி அதிகாரிகளிடம் தொழில்துறையினர் வலியுறுத்தல்

மூலப்பொருட்கள் விலை உயர்வால் ஏற்பட்ட நெருக்கடியை எதிர்கொள்ள கோவையில் நடந்த கலந்துரையாடல் கூட்டத்தில் தொழில்துறையினர் ரிச...

கிணத்துக்கடவில் இறுதிகட்ட பிரச்சாரம்: வீடு வீடாக வாக்கு சேகரித்த திமுக வேட்பாளர் KVKS சபரி கார்த்திகேயன்

கிணத்துக்கடவு தொகுதியில் திமுக வேட்பாளர் KVKS சபரி கார்த்திகேயன், செட்டிபாளையம் பேரூராட்சிக்குட்பட்ட பகுதிகளில் வீடு வீட...

மின்சார நிலைக் கட்டணம், டிமாண்ட் கட்டணம் குறைக்கப்படும் - திமுக வேட்பாளர் செந்தில் பாலாஜி உறுதி

கோவையில் தொழில்துறையினர் கலந்துரையாடலில் திமுக வேட்பாளர் செந்தில் பாலாஜி, தமிழ்நாட்டில் மின்சாரத்துறையில் நிலைக் கட்டணம்...

ஏப்ரல் 23 தேர்தல் அன்று சுற்றுலாத் தலங்கள் மூடப்படும்

ஏப்ரல் 23ஆம் தேதி நடைபெறும் நாடாளுமன்றத் தேர்தலின் போது பொதுமக்களின் பாதுகாப்பு மற்றும் தேர்தல் நடைமுறைகளை கருத்தில் கொண...

தொண்டாமுத்தூர் தொகுதி வேட்பாளர் N.R.கார்த்திகேயன் காருண்யா கல்வி நிறுவன நிர்வாகிகளை சந்திப்பு

மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணியின் தொண்டாமுத்தூர் தொகுதி வேட்பாளர் N.R.கார்த்திகேயன், காருண்யா கல்வி நிறுவன நிர்வாகிகளை...