உடுமலை போக்குவரத்து காவல் ஆய்வாளருக்கு பிரிவு உபச்சார விழா - காவலர்கள் பாராட்டு

திருப்பூர் மாவட்டம் உடுமலை பகுதியில் கடந்த மூன்று ஆண்டுகளுக்கு மேல் போக்குவரத்துக் காவல் ஆய்வாளராக பணியாற்றிய வெங்கடேசன் அவர்களின் பிரிவு உபச்சார விழா நகராட்சி தேஜஸ் திருமண மண்டபத்தில் நடைபெற்றது.


திருப்பூர்: உடுமலை பகுதியில் போக்குவரத்து நெரிசல் எங்கு ஏற்பட்டாலும் உடனே சம்பவ இடத்திற்கு சென்று காவல் ஆய்வாளர் சீரமைக்கும் பணியில் ஈடுபடுவார் என பிரிவு உபச்சார விழாவில் காவலர்கள் பாராட்டி பேசினர்.



திருப்பூர் மாவட்டம் உடுமலை பகுதியில் கடந்த மூன்று ஆண்டுகளுக்கு மேல் போக்குவரத்துக் காவல் ஆய்வாளராக பணியாற்றிய வெங்கடேசன் அவர்களின் பிரிவு உபச்சார விழா நகராட்சி தேஜஸ் திருமண மண்டபத்தில் நடைபெற்றது.



இந்த நிகழ்வில் உடுமலை காவல் ஆய்வாளர் ராஜேஷ் கண்ணன், மடத்துக்குளம் காவல் ஆய்வாளர் பாலமுருகன், கோவை திருப்பூரில் உடன் பணியாற்றிய காவல் அதிகாரிகள் மற்றும் உடுமலை ஊர்க்காவல் படையினர் மற்றும் உடுமலை உட்கோட்டத்தில் பணிபுரியும் காவல் உதவி ஆய்வாளர்கள், தனிப்பிரிவு காவலர்கள் மற்றும் தலைமை காவலர்கள் மற்றும் உடுமலை பகுதியைச் சேர்ந்த முக்கிய பிரமுகர்கள் கலந்து கொண்டு போக்குவரத்து காவல் ஆய்வாளரை பாராட்டி பொன்னாடை அணிவித்து வாழ்த்து தெரிவித்தனர்.

மேலும் கடந்த மூன்று ஆண்டுகளாக உடுமலை மாரியம்மன் கோவில் தேர் திருவிழா மற்றும் பல்வேறு முக்கிய நிகழ்வுகள், அரசியல் கட்சி தலைவர்கள் வரும் பொழுது எந்த வித பாகுபாடு இல்லாமல் அனைத்து காவலர்களுடன் ஒருங்கிணைந்து போக்குவரத்தை திறம்பட சீர்படுத்தினார். போக்குவரத்து நெரிசல் உடுமலை பகுதியில் எங்கு ஏற்பட்டாலும் உடனே சம்பவ இடத்திற்கு சென்று சீரமைக்கும் பணியில் ஈடுபடுவார் என பல்வேறு தரப்பினர் மேடையில் பாராட்டி பேசினார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

Newsletter

அவிநாசி: ‘ரோடு ஷோ’ மூலம் எல்.முருகனுக்கு ஆதரவு திரட்டிய மத்திய பிரதேச முதல்வர் மோகன் யாதவ்..!

திருப்பூர் மாவட்டம் அவிநாசி தொகுதியில் பாஜக வேட்பாளர் எல்.முருகனை ஆதரித்து மத்திய பிரதேச முதலமைச்சர் மோகன் யாதவ், ரோடு ஷ...

கிணத்துக்கடவில் செந்தில் வேல் பரப்புரை - சபரி கார்த்திகேயனுக்கு வாக்கு சேகரித்தார்..!

கிணத்துக்கடவு தொகுதியில் திமுக வேட்பாளர் கே.வி.கே.எஸ். சபரி கார்த்திகேயனை ஆதரித்து பத்திரிக்கையாளரும் தமிழ்கேள்வி யூடியூ...

கோவை மக்கள் ஏப்ரல் 23ஆம் தேதி செந்தில் பாலாஜியின் முகத்திரையை கிழிப்பார்கள்: அண்ணாமலை

கோவை வடக்கு தொகுதியில் பாஜக வேட்பாளர் வானதி சீனிவாசனுக்கு ஆதரவாக இறுதிக்கட்ட பிரச்சாரத்தில் ஈடுபட்ட அண்ணாமலை, திமுக மீது...

வால்பாறை வளர்ச்சிக்கு அதிமுக வாக்குறுதி: வேட்பாளர் லட்சுமண சிங் பல்வேறு அறிவிப்புகள்..!

வால்பாறை சட்டமன்றத் தொகுதி அதிமுக வேட்பாளர் லட்சுமண சிங், தேர்தலை முன்னிட்டு சுற்றுலா, விவசாயம், தொழில், கல்வி மற்றும் அ...

மூலப்பொருள் விலை உயர்வு: அவசர கால கடன் உதவி வழங்க ரிசர்வ் வங்கி அதிகாரிகளிடம் தொழில்துறையினர் வலியுறுத்தல்

மூலப்பொருட்கள் விலை உயர்வால் ஏற்பட்ட நெருக்கடியை எதிர்கொள்ள கோவையில் நடந்த கலந்துரையாடல் கூட்டத்தில் தொழில்துறையினர் ரிச...

கிணத்துக்கடவில் இறுதிகட்ட பிரச்சாரம்: வீடு வீடாக வாக்கு சேகரித்த திமுக வேட்பாளர் KVKS சபரி கார்த்திகேயன்

கிணத்துக்கடவு தொகுதியில் திமுக வேட்பாளர் KVKS சபரி கார்த்திகேயன், செட்டிபாளையம் பேரூராட்சிக்குட்பட்ட பகுதிகளில் வீடு வீட...