கோவையில் திமுக வர்த்தகர் அணி நிர்வாகிகளின் அறிமுக ஆலோசனைக் கூட்டம்

கலைஞர் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு நிகழ்ச்சிகள் நடத்தப்படுவது குறித்தும், கட்சியின் ஆக்க பணிகள் குறித்தும் கோவையில் நடைபெறும் திமுக வர்த்தகர் அணி நிர்வாகிகளின் அறிமுக ஆலோசனைக் கூட்டத்தில் ஆலோசிக்கப்பட உள்ளது.


கோவை: கோவை காந்திபுரம் பகுதியில் உள்ள பெரியார் மற்றும் அண்ணாவின் சிலைக்கு கோவை மாநகர் மாவட்ட வர்த்தகர் அணி அமைப்பாளர் மாரிசெல்வன் மற்றும் நிர்வாகிகள் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.

கோவை மாநகர், வடக்கு மற்றும் தெற்கு மாவட்ட திமுக வர்த்தகர் அணி நிர்வாகிகளின் அறிமுக ஆலோசனைக் கூட்டம் திமுக தலைமை அலுவலகத்தில் நடைபெற்று வருகிறது. திமுக மாநில வர்த்தகர் அணியின் இணைச் செயலாளர் முருகவேல் தலைமையில் நடைபெறும் இக்கூட்டத்தில், கோவை மாநகர் மாவட்ட வர்த்தக அணி அமைப்பாளர் மாரிசெல்வன், வடக்கு மாவட்ட அமைப்பாளர் வேலுசாமி, தெற்கு மாவட்ட அமைப்பாளர் கண்ணன், மாநகர் மாவட்ட தலைவர் சுப்பிரமணி உட்பட பலர் முன்னிலை வகிக்கின்றனர்.



இந்த ஆலோசனை கூட்டத்தின் துவக்கத்தில் திமுக கோவை மாநகர் மாவட்ட செயலாளர் நா.கார்த்திக் நிர்வாகிகளுக்கு வாழ்த்துக்களை தெரிவித்து சிறப்புரை ஆற்றினார். இந்த ஆலோசனைக் கூட்டத்தில் கோவை மாவட்ட நிர்வாகிகள் பலரும் கலந்து கொண்டுள்ளனர். இக்கூட்டத்தில் கலைஞர் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு நிகழ்ச்சிகள் நடத்தப்படுவது குறித்தும், கட்சியின் ஆக்க பணிகள் குறித்தும் ஆலோசிக்கப்பட உள்ளது.



முன்னதாக கோவை காந்திபுரம் பகுதியில் உள்ள பெரியார் மற்றும் அண்ணாவின் சிலைக்கு கோவை மாநகர் மாவட்ட வர்த்தகர் அணி அமைப்பாளர் மாரிசெல்வன் மற்றும் நிர்வாகிகள் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.

Newsletter

திருப்பூரில் கட்சித் தலைவர் மீது அவதூறு பரப்பியதாக புகார்

திருப்பூரில் மனிதநேய ஜனநாயக கட்சி தலைவர் தமீமுன் அன்சாரி மீது சமூக வலைதளங்களில் அவதூறு பரப்பியதாகக் குற்றம் சாட்டி இந்தி...

GCT கல்லூரியில் வைக்கப்பட்டுள்ள EVM இயந்திரங்களை கலெக்டர் திடீர் ஆய்வு

கோவை மாவட்டம் 10 சட்டமன்ற தொகுதிகளில் பதிவான வாக்குகள் அடங்கிய EVM இயந்திரங்கள் தடாகம் சாலை GCT கல்லூரியில் பாதுகாப்பாக...

கோவை அரசினர் தொழில்நுட்ப கல்லூரி வாக்கு எண்ணும் மையத்தை திமுக நிர்வாகிகள் ஆய்வு

கோவை மாவட்டத்தில் 10 தொகுதிக்கான வாக்குப்பதிவு இயந்திரங்கள் வைக்கப்பட்டுள்ள கோவை அரசினர் தொழில்நுட்ப கல்லூரி வாக்கு எண்ண...

கோடையில் ஐஸ்கிரீம் கலப்படம்: உற்பத்தியாளர்கள் மீது தமிழக அரசு தீவிர கண்காணிப்பு

கோடைக்காலத்தில் ஐஸ்கிரீம் மற்றும் குளிர்பானங்களில் கலப்படம் அதிகரித்துள்ள நிலையில், தமிழ்நாடு உணவுப் பாதுகாப்புத் துறை உ...

கோவை உக்கடம் மீன் சந்தையில் கடல் மீன்களின் விற்பனை உச்சம்

கோவையில் கடும் வெயில் காரணமாக உக்கடம் ஒருங்கிணைந்த மீன் சந்தையில் கடல் மீன்களின் விற்பனை அதிகரித்துள்ளது. அசைவ உணவு விரு...

நீர்வளத்துறை அறிவிப்பு: கோவை மாவட்ட அணைகளில் தற்போதைய நீர் நிலை

கோவை மாவட்டத்தில் உள்ள ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு அணைகளில் தொடர் மழை வரத்தால் நீர்மட்டம் உயர்ந்து வருகிறது. திருப்...