ஆக்கிரமிப்பில் சிக்கியுள்ள நொய்யலை மீட்க பொதுமக்கள் கோரிக்கை


கோவை, திருப்பூர் மாவட்டங்களின் உயிர் நாடியாக விளங்குவது, நொய்யல் ஆறு. மேற்குத் தொடர்ச்சி மலையில் உருவாகி, சின்னாறு, பெரியாறு என பல கிளை ஆறுகளும், சிற்றாறுகளும் கூடுதுறையில் சங்கமமாகி, நொய்யல் உருவெடுக்கிறது.



இதே நதியில், 32 காட்டாற்று ஓடைகள் கலக்கின்றன. கோவையைச் சுற்றியுள்ள, 19 குளங்களை நிறைத்த பின், கோவை, திருப்பூர், ஈரோடு, கரூர் மாவட்டங்களில், 160 கிலோ மீட்டர் பயணித்து, நொய்யல் என்ற கிராமத்தில், காவிரியில் கலக்கிறது.

ஒரு காலத்தில், கொங்கு மண்டலத்தில் உயிர்களுக்கும், பயிர்களுக்கும் ரத்தநாளமாய் விளங்கிய நொய்யல், கடந்த கால் நுாற்றாண்டு காலத்தில், ஆக்கிரமிப்புகளாலும், ஆலைக்கழிவுகளாலும் இருந்த தடமே மறைந்துபோய் கொண்டிருக்கிறது.



நொய்யலின் வழித்தடத்தை மறித்தும், குளங்களை மூடியும் செய்யப்பட்டுள்ள ஆக்கிரமிப்புகள், நொய்யலின் மறைவிற்கு முக்கியப் பங்காற்றுகின்றன.

இந்த விஷயத்தில், அரசுத்துறைகளே முன்னோடியாக விளங்கி, சாலை, பணிமனை என ஏராளமான கட்டமைப்புகளை குளத்தில் அமைத்துள்ளன. அதன் தொடர்ச்சியாக, குளங்களை பல்லாயிரக்கணக்கானோர் ஆக்கிரமித்து, வீடுகளைக் கட்டியுள்ளனர்.

இவற்றில், வாலாங்குளத்தில் இருந்த சில நூறு வீடுகள் மட்டும் அகற்றப்பட்டு, அங்கிருந்த குடும்பங்களுக்கு மாற்று வீடுகள் தரப்பட்டுள்ளன. இன்னும் பல்வேறு குளங்கள், ஆற்றுப்பாதைகள், வாய்க்கால் ஓரங்களில் உள்ள ஆக்கிரமிப்புகள் அகற்றப்படவில்லை.

இதனிடையே, ஆப்துப்பாலம் அருகே கோவை மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதியில் நொய்யல் நதியில் மீண்டும் அத்துமீறி  ஆக்கிரமிப்புபணி நடைபெற்று வருகிறது.

சில அரசியல்வாதிகளின் பெயர்களை கூறியே இவ்வாறான தவறுகள் நடைபெற்று வருவதாக பொதுமக்கள் கவலை தெரிவித்து வருகின்றனர். இது குறித்து கடந்த சில மாதங்களுக்கு முன்பு அதிகாரிகளுக்கு அப்பகுதி பொதுமக்கள் புகார் கடிதம் அளித்தும் தற்போது வரை எவ்வித நடவடிக்கையும் மேற்கொள்ளப்படவில்லை.

உடனடியாக கோவை மாவட்ட நிர்வாகம் இதுகுறித்து உரிய விசாரணை மேற்கொண்டு ஆக்கிரமிப்பில் இருந்து நொய்யலை மீட்கவேண்டும் என சுற்றுச்சூழல் ஆர்வலர்களும், பொதுமக்களும் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Newsletter

பக்ரீத் பண்டிகை: பொது இடங்களில் பசுவதை செய்யக்கூடாது – இந்து மக்கள் கட்சி உயர்நீதிமன்றத்தில் வழக்கு

வரும் பக்ரீத் பண்டிகையை முன்னிட்டு, பொது இடங்களில் பசுவதை செய்யக்கூடாது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி இந்து மக்கள் கட...

கோவையில் ‘“Army of Dheeran Annamalai” போஸ்டர்கள்; புதிய அரசியல் பரபரப்பு.

கோவையில் 2 நாள் பா.ஜ.க மையக்குழு கூட்டம் நடைபெற்று வந்த நிலையில், இன்று “Fearless Minds Have No Limits” என்ற வாசகத்துடன்...

கோவையில் ‘“Army of Dheeran Annamalai” போஸ்டர்கள்; புதிய அரசியல் பரபரப்பு.

கோவையில் 2 நாள் பா.ஜ.க மையக்குழு கூட்டம் நடைபெற்று வந்த நிலையில், இன்று “Fearless Minds Have No Limits” என்ற வாசகத்துடன்...

கோவை மாவட்ட வனப்பகுதிகளில் புலிகள் கணக்கெடுப்பிற்கு தானியங்கி கேமராக்கள் நிறுவ பணி தொடக்கம்

கோவை மாவட்டத்தில் வால்பாறை, பொள்ளாச்சி, உலாந்தி மற்றும் மானாம்பள்ளி வனச்சரகங்களில் புலிகள் கணக்கெடுப்பிற்காக 350க்கும் ம...

பீளமேடு பகுதியில் குடிநீர் குழாய் பழுது மற்றும் தூய்மை பணிகளை ஆய்வு செய்த கவுன்சிலர்

கோயமுத்தூர் மாநகராட்சி வடக்கு மண்டலம் வார்டு 27 பீளமேடு பகுதியில் சூயஸ் குடிநீர் குழாய் பழுதுபார்க்கும் பணி மற்றும் பல்வ...

புது சித்தாபுதூர் ஸ்ரீ பண்ணாரி மாரியம்மன் திருக்கோவிலில் 86ஆம் ஆண்டு திருக்கல்யாண திருத்தேர் திருவிழா

கோவை புது சித்தாபுதூரில் உள்ள அருள்மிகு ஸ்ரீ பண்ணாரி மாரியம்மன் திருக்கோவிலில் 86ஆம் ஆண்டு திருக்கல்யாண ரதமஹோற்சவம் மற்ற...