சரவணம்பட்டி 10வது வார்டில் அமைந்துள்ள பகுதியானது அரிஜன காலனி என வாக்காளர் பட்டியலில் இருந்தது. அதனை தந்தை பெரியார் நகர் என மாற்றிட வேண்டும் என்ற கோரிக்கை கடந்த 30 ஆண்டுகளுக்கு மேலாக மக்களால் வைக்கப்பட்டது.
கோவை: அரிஜன காலனி என வாக்காளர் பட்டியலில் இருந்த பகுதி மாமன்ற உறுப்பினரின் நடவடிக்கையால், தந்தை பெரியார் நகர் என பெயர் மாற்றம் செய்யப்பட்டுள்ளதால் அப்பகுதி மக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
சரவணம்பட்டி 10வது வார்டில் அமைந்துள்ள பகுதியானது அரிஜன காலனி என வாக்காளர் பட்டியலில் இருந்தது. அதனை தந்தை பெரியார் நகர் என மாற்றிட வேண்டும் என்ற கோரிக்கை கடந்த 30 ஆண்டுகளுக்கு மேலாக மக்களால் வைக்கப்பட்டது. அக்கோரிக் கையானது மண்டலத் தலைவரும் தங்களது வார்டு மாமன்ற உறுப்பினருமான வே.கதிர்வேலிடம் வைக்கப்பட்டது. அதை தொடர்ந்து கோயம்புத்தூர் மாநகராட்சி மண்டல தலைவர் வே.கதிர்வேல் தொடர்ந்து கலெக்டரிடம் பேசியும் அமைச்சர்களிடம் பேசியும், கோவை மாநகராட்சி மாமன்ற கூட்டத்தில் தீர்மானம் கொண்டு வந்தார்.
அத்தீர்மானம் நிறைவேற்றப்பட்ட நிலையில் அப்பகுதியின் பெயரானது இன்று தந்தை பெரியார் நகர் என மாற்றப்பட்டுள்ளது. இதனையடுத்து அப்பகுதி பொதுமக்கள் மிகவும் மகழ்ச்சியடைந்துள்ளனர். பெயர் பலகையை பைய்யா கவுண்டர் (எ) கிருஷ்ணன் திறந்து வைத்தார். அருகில் வடக்கு மண்டல தலைவர் வே.கதிர்வேல், சுரேஷ் மற்றும் ஊர் பொதுமக்கள் உடன் இருந்தனர்.
சரவணம்பட்டி 10வது வார்டில் அமைந்துள்ள பகுதியானது அரிஜன காலனி என வாக்காளர் பட்டியலில் இருந்தது. அதனை தந்தை பெரியார் நகர் என மாற்றிட வேண்டும் என்ற கோரிக்கை கடந்த 30 ஆண்டுகளுக்கு மேலாக மக்களால் வைக்கப்பட்டது. அக்கோரிக் கையானது மண்டலத் தலைவரும் தங்களது வார்டு மாமன்ற உறுப்பினருமான வே.கதிர்வேலிடம் வைக்கப்பட்டது. அதை தொடர்ந்து கோயம்புத்தூர் மாநகராட்சி மண்டல தலைவர் வே.கதிர்வேல் தொடர்ந்து கலெக்டரிடம் பேசியும் அமைச்சர்களிடம் பேசியும், கோவை மாநகராட்சி மாமன்ற கூட்டத்தில் தீர்மானம் கொண்டு வந்தார்.
அத்தீர்மானம் நிறைவேற்றப்பட்ட நிலையில் அப்பகுதியின் பெயரானது இன்று தந்தை பெரியார் நகர் என மாற்றப்பட்டுள்ளது. இதனையடுத்து அப்பகுதி பொதுமக்கள் மிகவும் மகழ்ச்சியடைந்துள்ளனர். பெயர் பலகையை பைய்யா கவுண்டர் (எ) கிருஷ்ணன் திறந்து வைத்தார். அருகில் வடக்கு மண்டல தலைவர் வே.கதிர்வேல், சுரேஷ் மற்றும் ஊர் பொதுமக்கள் உடன் இருந்தனர்.