பல்லடத்தில் திடீரென பற்றி எரிந்த கார் - தீயை அணைத்த தீயணைப்புத்துறையினர்

பல்லடம் அருகே மகாலட்சுமி நகர் என்ற இடத்தில் சதாசிவம் என்பவர் தனது காரை சாலையோரமாக நிறுத்திவிட்டு, மீண்டும் எடுக்க முயன்றபோது திடீரென கார் பற்றி எரியத்தொடங்கியது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


திருப்பூர்: கோவை மாவட்டம் பொள்ளாச்சியை சேர்ந்த சதாசிவம் என்பவர் பொள்ளாச்சியில் இருந்து பல்லடம் வழியாக திருப்பூர் நோக்கி தனது காரில் சென்று கொண்டிருந்தார்.

பல்லடம் அருகே மகாலட்சுமி நகர் என்ற இடத்தில் கார் சென்று கொண்டிருந்தபோது பின்னால் வந்த மற்றொரு கார் சதாசிவத்தின் காரை முந்தி செல்ல முயன்றபோது, சுதாரித்துக் கொண்ட சதாசிவம் சாலையோரமாக காரை நிறுத்தி உள்ளார்.



மீண்டும் காரை இயக்க முயன்ற போது திடீரென தீப்பற்றி எறிய தொடங்கியது. காரின் முன் பக்கத்தில் தீ எரிவதை சுதாரித்துக் கொண்ட சதாசிவம் காரை விட்டு வெளியேறினார்.

சாலையோரமாக திடீரென கார் பற்றி எரிவதைக் கண்ட பொதுமக்கள் பல்லடம் தீயணைப்பு துறைக்கு தகவல் அளித்தனர்.



சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த பல்லடம் தீயணைப்பு துறை நிலைய அலுவலர் முத்துக்குமாரசாமி தலைமையிலான வீரர்கள் தீயை கட்டுக்குள் கொண்டு வந்தனர். பரபரப்பான திருப்பூர் சாலையில் திடீரென கார் தீ பற்றி எரிந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Newsletter

கோவையில் அரசியல் கட்சி பிரதிநிதிகள் முன்னிலையில் மாதிரி வாக்குப்பதிவு நடைபெற்றது

2026 தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலுக்கான வாக்குப்பதிவு இன்று காலை 7 மணிக்கு தொடங்குகிறது. கோவை மாவட்டத்தில் 10 தொகுதிகளில்...

கோவையில் வாக்குப்பதிவு தொடக்கம்: உற்சாகமாக வாக்களிக்கும் மக்கள்

தமிழக சட்டமன்றத் தேர்தல் 2026 வாக்குப்பதிவு இன்று காலை 7 மணி முதல் கோவை மாவட்டம் முழுவதும் அமைதியான சூழலில் தொடங்கியது....

கோவையில் 3,563 வாக்குச்சாவடிகளுக்கு மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் அனுப்பி வைப்பு

கோவை மாவட்டத்தில் நாளைய சட்டமன்றத் தேர்தலுக்கு முன்னதாக 3,563 வாக்குப்பதிவு நிலையங்களுக்கு மின்னணு வாக்குப்பதிவு இயந்திர...

பொள்ளாச்சியில் 281 வாக்குச்சாவடிகளுக்கு பலத்த பாதுகாப்புடன் வாக்கு இயந்திரங்கள் அனுப்பும் பணி தீவிரம்

நாளை நடைபெறவுள்ள தமிழக சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு, பொள்ளாச்சி தொகுதியில் உள்ள 281 வாக்குச்சாவடி மையங்களுக்கு வாக்கு இ...

பல ஆண்டுகளாக அடிப்படை வசதிகள் இல்லை: தேர்தலை புறக்கணிக்க நெறையூர் கிராம மக்கள் முடிவு

குடிநீர், சாலை, போக்குவரத்து, நியாய விலைக்கடை உள்ளிட்ட அடிப்படை வசதிகள் பல ஆண்டுகளாக வழங்கப்படாததால், திருப்பூர் மாவட்ட...

அவிநாசி: ‘ரோடு ஷோ’ மூலம் எல்.முருகனுக்கு ஆதரவு திரட்டிய மத்திய பிரதேச முதல்வர் மோகன் யாதவ்..!

திருப்பூர் மாவட்டம் அவிநாசி தொகுதியில் பாஜக வேட்பாளர் எல்.முருகனை ஆதரித்து மத்திய பிரதேச முதலமைச்சர் மோகன் யாதவ், ரோடு ஷ...