ராசிபாளையத்தில் கலையரங்கம் திறப்பு விழா - எம்.எல்.ஏ வி.பி.கந்தசாமி பங்கேற்பு

பொதுமக்கள் விழா நடத்த, கலைநிகழ்ச்சி, பொதுக்கூட்டம் உள்ளிட்ட பொது நிகழ்ச்சிகளை கலையரங்கத்தில் நடத்தலாம் என்றும், ஊரின் வளர்ச்சிக்கு இந்த கலையரங்கம் முக்கிய பங்காற்றும் என்றும் சூலூர் சட்டமன்ற உறுப்பினர் வி.பி.கந்தசாமி தெரிவித்தார்.


கோவை: சூலூர் அருகே ராசிபாளையத்தில் பொதுமக்கள் பயன்பாடுக்காக கலையரங்கத்தை சூலூர் எம்.எல்.ஏ திறந்து வைத்தார். சூலூர் சட்டமன்ற தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து ரூபாய் 7,10,000/- மதிப்பீட்டில் கலையரங்கம் கட்டப்பட்டு உள்ளது.



இதன் திறப்புவிழாவிற்கு மாவட்ட ஊராட்சி தலைவர் சாந்திமதி தோப்பு அசோகன், சூலூர் சட்டமன்ற உறுப்பினர் வி.பி.கந்தசாமி உள்ளிட்டோர் தலைமை தாங்கினார்.

சூலூர் தெற்கு ஒன்றிய அதிமுக செயலாளர் கோ.குமரவேல், ராசிபாளையம் ஊராட்சி தலைவர் கவிதா ஆகியோர் வரவேற்றனர்.



சூலூர் சட்டமன்ற உறுப்பினர் வி.பி.கந்தசாமி பேசும்போது, பொதுமக்கள் விழா நடத்த , கலைநிகழ்ச்சி, பொதுக்கூட்டம் உள்ளிட்ட பொது நிகழ்ச்சிகள் நடத்தலாம். ஊரின் வளர்ச்சிக்கு இந்த கலையரங்கம் முக்கிய பங்காற்றும் என தெரிவித்தார்.

இவ்விழாவில் வட்டார வளர்ச்சி அலுவலர் சிவகாமி, சூலூர் கார்த்தி, கூட்டுறவு சங்கதலைவர் கணேசன், ஊராட்சி மன்ற உறுப்பினர்கள் மற்றும் அதிமுக கட்சியினர், பொதுமக்கள் திரளாக கலந்து கொண்டனர்.

Newsletter

கற்பகம் மருத்துவக்கல்லூரியின் பட்டமளிப்பு விழா - 2026

கோவை கற்பகம் மருத்துவக்கல்லூரியில் ஏப்ரல் 26ஆம் தேதி நடந்த பட்டமளிப்பு விழாவில் 163 இளங்கலை மற்றும் 10 முதுகலை மருத்துவர...

போத்தனூர்-செட்டிபாளையம் சாலையில் பிளாஸ்டிக் கிடங்கில் பயங்கர தீ விபத்து - லட்சக்கணக்கில் சேதம்

கோவை போத்தனூர்-செட்டிபாளையம் சாலையில் உள்ள பழைய பிளாஸ்டிக் கிடங்கில் நேற்று மாலை திடீரென ஏற்பட்ட தீ விபத்தில் பல லட்சம்...

ஶ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனையில் இருதயவியல் அல்ட்ராசவுண்ட் கருத்தரங்கு நடைபெறுகிறது

ஶ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனை மற்றும் இணை அறிவியல் கல்லூரி இணைந்து "ECHO ESSENTIALS 2026" என்ற தலைப்பில் இரு நாள் கருத்தர...

குழந்தைகளைத் தூண்டிவிட்டு ஓட்டு அரசியல் செய்ததாக நடிகர் விஜய் மீது புகார்

தேர்தல் ஆதாயத்திற்காக குழந்தைகளின் மனநிலையைத் தவறாகப் பயன்படுத்தியதாக தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய் மீது Coimbatore...

தமிழக சட்டமன்றத் தேர்தல்: கோவை மாவட்டத்தில் 84.67 சதவீதம் வாக்குப்பதிவு - தொகுதி வாரியான முழு விவரங்கள்

கோவை மாவட்டத்தில் நேற்று நடைபெற்ற தமிழக சட்டமன்றத் தேர்தலில் 84.67 சதவீதம் வாக்குப்பதிவு பதிவானது. மொத்தம் 27 லட்சத்திற்...

கோவை ஜிடி மேம்பாலத்தில் AI கேமரா பொருத்தும் பணி: இரவு நேர போக்குவரத்துக்கு இன்றும் நாளையும் தடை

கோவை ஜிடி மேம்பாலத்தில் அதிவேக வாகனங்களை கண்காணிக்க AI கேமரா பொருத்தும் பணி காரணமாக இன்று மற்றும் நாளை இரவு 10 மணி முதல்...