கவுண்டச்சிபுதூர் பெஸ்ட்நகரில் கான்கிரீட் சாலை - ரூ.10 லட்சத்தில் அமைக்க பூமி பூஜை

திருப்பூர் மாவட்டம் தாராபுரம் ஒன்றியம் கவுண்டச்சிபுதூரில் ஊராட்சி ஒன்றிய பொது நிதியில் ரூ.10 லட்சத்தில் கட்டப்பட்ட மகளிர் சுகாதார கழிவறையும் திறந்து வைக்கப்பட்டது.


திருப்பூர்: தாராபுரம் ஒன்றியம் கவுண்டச்சிபுதூரில் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு திட்டத்தின் கீழ் ரூ.10 லட்சத்தில் சிமெண்டு கான்கிரீட் சாலை அமைக்க பூமிபூஜை நடைபெற்றது.

தாராபுரம் ஊராட்சி ஒன்றியம் கவுண்டச்சிபுதூர் ஊராட்சியில் 3-வது பெஸ்ட் நகரில் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு திட்டத்தின் கீழ் ரூ.10 லட்சத்தில் சிமெண்டு கான்கிரீட் சாலை அமைக்க பூமிபூஜை நடைபெற்றது. விழாவிற்கு ஊராட்சி மன்ற தலைவர் ஆர்.செல்விரமேஷ் தலைமை தாங்கினார். ஊராட்சி ஒன்றிய துணைத்தலைவர் ஈ.சசிக்குமார், 3-வது வார்டு உறுப்பினர் நர்மதா ஈஸ்வரன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

விழாவில் சிறப்பு விருந்தினராக பங்கேற்ற ஊராட்சி ஒன்றியக்குழு தலைவர் எஸ்.வி.செந்தில்குமார் ரூ.10 லடசத்தில் சிமெண்டு கான்கிரீட் சாலை அமைக்கும் பணியை தொடங்கி வைத்தார்.

இதனை தொடர்ந்து அதே பகுதியில் ஊராட்சி ஒன்றிய பொதுநிதியில் ரூ.10 லட்சத்தில் கட்டப்பட்ட மகளிர் சுகாதார கழிவறையை திறந்து வைத்து ஒன்றிய குழு தலைவர் எஸ்.வி.செந்தில்குமார் கூறுகையில் “இப்பகுதியில் அதிகமாக மக்கள் வசிக்கும் பகுதியில் பெண்கள் காலை கடனை முடிக்க பெரும் உதவியாக இருக்கும். இதனை மக்கள் தினசரி பயன்படுத்திய பின்பு சுத்தமாகவும், சுகாதாரமாகவும் வைத்து கொள்ள வேண்டியது உங்கள் கடமையாகும்” என்றார். அப்போது பொதுமக்கள், மகளிர் சுய உதவி குழுவினர் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை ஊராட்சி செயலர் பெரியசாமி செய்திருந்தார்.

Newsletter

காங்கிரஸ் தொண்டர்களுக்கு பாதுகாப்பு வழங்க கோரி கோவை காவல் ஆணையரிடம் மனு

மயிலாடுதுறையில் காங்கிரஸ் நிர்வாகிகள் தாக்கப்பட்ட சம்பவத்தில் திமுகவினருக்கு எதிராக நடவடிக்கை எடுக்கவும், கோவையில் காங்க...

PM Shri திட்டத்திற்கு எதிராக கோவையில் தந்தை பெரியார் திராவிடர் கழகத்தினர் போராட்டம்

கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகில் மத்திய அரசின் PM Shri திட்டத்திற்கு எதிராக தந்தை பெரியார் திராவிடர் கழகத்தினர் கண்...

கோவில்பாளையத்தில் சிக்கன் கடையில் கல்லாப்பெட்டியிலிருந்து ரூ.3,500 திருடிய வாலிபர்; வைரலாகும் CCTV காட்சிகள்

கோவை கோவில்பாளையம் பகுதியில் சிக்கன் கடையில் உரிமையாளர் வெளியே வேலை செய்துகொண்டிருந்த நேரத்தில், ஒரு வாலிபர் கல்லாப்பெட்...

கோவில்பாளையத்தில் சிக்கன் கடையில் கல்லாப்பெட்டியிலிருந்து ரூ.3,500 திருடிய வாலிபர்; வைரலாகும் CCTV காட்சிகள்

கோவை கோவில்பாளையம் பகுதியில் சிக்கன் கடையில் உரிமையாளர் வெளியே வேலை செய்துகொண்டிருந்த நேரத்தில், ஒரு வாலிபர் கல்லாப்பெட்...

வால்பாறை செல்ல இ-பாஸ் கட்டாயம்: ஆழியார் சோதனைச் சாவடியில் நூற்றுக்கணக்கான வாகனங்கள் திருப்பி அனுப்பம்

வால்பாறைக்கு வார இறுதி நாட்களில் 750 வாகனங்களுக்கு மட்டும் அனுமதி. ஆழியார் சோதனைச் சாவடியில் இ-பாஸ் இல்லாத வாகனங்கள் திர...

மேட்டுப்பாளையம்-ஊட்டி சாலையில் 'பாகுபலி' யானை திடீர் நடமாட்டம்: பொதுமக்கள் அச்சம்

மேட்டுப்பாளையம்-ஊட்டி சாலையில் நேற்றிரவு 'பாகுபலி' யானை திடீரென தோன்றியதால் பரபரப்பு. கல்லாறு வனப்பகுதியிலிருந்து வெளியே...