உடுமலை அருகே சாலையில் அடிபட்டு கிடந்த மயிலை காப்பாற்றிய நபருக்கு குவியும் பாராட்டு

பெரியபட்டி அருகே இறக்கை மற்றும் காலில் அடிபட்டு பறக்க முடியாமல் உயிருக்கு போராடிக்கொண்டிருந்த மயிலை, வனத்துறையினர் விரைந்து வந்து மீட்டு, சிகிச்சை அளித்து வருகின்றனர்.


திருப்பூர்: திருப்பூர் மாவட்டம் உடுமலை அருகே குடிமங்கலத்தில் உணவகம் மற்றும் தண்ணீர் கேன் சப்ளை செய்துவருபவர் வெள்ளசெட்டிபாளையத்தை சார்ந்த கார்த்திகேயன்.

இவர் பல்லடம் சாலையில் பெரியபட்டி அருகே வந்து கொண்டிருந்த போது மயில் ஒன்று சாலை ஒரத்தில் இறக்கை மற்றும் காலில் அடிபட்டு பறக்க முடியாமல் வேதனையுடன் இருப்பதை கண்டு என்னசெய்வது என தெரியாமல் அதன் அருகிலேயே நீண்டநேரம் நாய்கள் கடித்திடாவாறு பாதுகாத்து நின்றார்.

அதன்பின் அங்கிருந்தவர்கள் உதவி இயக்குநர் கணேஸ்ராம் அவர்களுக்கு தகவல் கொடுக்க உடனடியாக செயல்பட்ட அவர் மயிலை மீட்க சம்பவ இடத்திற்கு வனத்துறையினரை அனுப்பினர்.

விரைந்து வந்த வனத்துறையினர் அடிபட்டு கிடந்த மயிலை மீட்டு சிகிச்சைகாக எடுத்து சென்றனர்.

அடிபட்டுகிடந்த மயிலுக்கு நாய் உள்ளிட்ட மிருகங்களால் பாதிப்பு ஏற்படாதவாறு பாதுகாத்து நின்ற கார்த்திகேயனுக்கும் தகவல் கிடைத்த உடன் விரைந்துவந்த மயிலை மீட்டு சிகிச்சை அளித்த வனத்துறையினர்க்கும் பாராட்டுகள் குவிந்து வருகின்றது.

Newsletter

மேட்டுப்பாளையம் துணை மின் நிலையத்தில் நாளை (29.08.2026) மின்தடை

மேட்டுப்பாளையம் துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நாளை (29.08.2026) காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை நடைப...

பசூர் துணை மின் நிலையத்தில் நாளை (29.08.2026) மின்தடை

பசூர் துணை மின் நிலையத்தில் நாளை ஆகஸ்ட் 29 அன்று காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மாதாந்திர மின் பராமரிப்பு பணி நடைபெறும்...

அன்னூர் துணை மின் நிலையத்தில் நாளை (29.08.2026) மின்தடை

அன்னூர் துணை மின் நிலையத்தில் நாளை (29.08.2026) காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மாதாந்திர பராமரிப்புப் பணிகள் நடைபெறும்....

கோவை டாடாபாத் துணை மின் நிலையத்தில் நாளை (29.08.2026) மின்தடை

கோவை டாடாபாத் துணை மின் நிலையத்தில் ஆகஸ்ட் 29 அன்று காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மாதாந்திர மின் பராமரிப்பு பணிகள் நடை...

சூலூர் துணை மின் நிலையத்தில் நாளை (29.08.2026) மின்தடை

சூலூர் துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நாளை (29.08.2026) காலை 9 முதல் மாலை 5 வரை நடைபெறும். டி.எம். நக...

Mayor Inaugurates Special Camp for Persons with Disabilities in Coimbatore

A special camp for persons with disabilities was inaugurated and inspected by Mayor Ranganayaki Ramachandran at Kaumara...