உடுமலை அருகே சாலையில் அடிபட்டு கிடந்த மயிலை காப்பாற்றிய நபருக்கு குவியும் பாராட்டு

பெரியபட்டி அருகே இறக்கை மற்றும் காலில் அடிபட்டு பறக்க முடியாமல் உயிருக்கு போராடிக்கொண்டிருந்த மயிலை, வனத்துறையினர் விரைந்து வந்து மீட்டு, சிகிச்சை அளித்து வருகின்றனர்.


திருப்பூர்: திருப்பூர் மாவட்டம் உடுமலை அருகே குடிமங்கலத்தில் உணவகம் மற்றும் தண்ணீர் கேன் சப்ளை செய்துவருபவர் வெள்ளசெட்டிபாளையத்தை சார்ந்த கார்த்திகேயன்.

இவர் பல்லடம் சாலையில் பெரியபட்டி அருகே வந்து கொண்டிருந்த போது மயில் ஒன்று சாலை ஒரத்தில் இறக்கை மற்றும் காலில் அடிபட்டு பறக்க முடியாமல் வேதனையுடன் இருப்பதை கண்டு என்னசெய்வது என தெரியாமல் அதன் அருகிலேயே நீண்டநேரம் நாய்கள் கடித்திடாவாறு பாதுகாத்து நின்றார்.

அதன்பின் அங்கிருந்தவர்கள் உதவி இயக்குநர் கணேஸ்ராம் அவர்களுக்கு தகவல் கொடுக்க உடனடியாக செயல்பட்ட அவர் மயிலை மீட்க சம்பவ இடத்திற்கு வனத்துறையினரை அனுப்பினர்.

விரைந்து வந்த வனத்துறையினர் அடிபட்டு கிடந்த மயிலை மீட்டு சிகிச்சைகாக எடுத்து சென்றனர்.

அடிபட்டுகிடந்த மயிலுக்கு நாய் உள்ளிட்ட மிருகங்களால் பாதிப்பு ஏற்படாதவாறு பாதுகாத்து நின்ற கார்த்திகேயனுக்கும் தகவல் கிடைத்த உடன் விரைந்துவந்த மயிலை மீட்டு சிகிச்சை அளித்த வனத்துறையினர்க்கும் பாராட்டுகள் குவிந்து வருகின்றது.

Newsletter

கோவை ஆர்.எஸ்.புரத்தில் சரக்கு வாகனம் மீது மரம் சாய்ந்து விபத்து – ஒருவர் படுகாயம்.

ஆர்.எஸ்.புரம் மெக்கரிக்கர் சாலையில் பழமையான மரம் திடீரென சரிந்து சரக்கு வாகனத்தின் மீது விழுந்ததில் ஓட்டுநர் படுகாயமடைந்...

கோவை மாவட்ட சட்டமன்ற தேர்தலில் 152 வேட்பாளர்கள் தேர்தல் டெபாசிட் இழப்பு

கோவை மாவட்டத்தில் நடைபெற்ற சட்டமன்ற தேர்தலில் போட்டியிட்ட 183 வேட்பாளர்களில் 152 பேர் தங்கள் டெபாசிட் தொகையை இழந்துள்ளனர...

இருகூரில் செல்போன் பறிப்பு: பொதுமக்கள் துரத்தி இருவர் கைது

கோவை இருகூர் அருகே மகாத்மா காந்தி ரோடு ஜங்ஷனில் ராம்குமாரிடம் இருந்து செல்போன் பறித்த இருவர், பொதுமக்கள் துரத்தியதில் சி...

கோவை வடக்கு வாக்காளர்களுக்கு BJP வேட்பாளர் வானதி சீனிவாசன் நன்றி

கோவை வடக்கு தொகுதியில் தேசிய ஜனநாயகக் கூட்டணி BJP வேட்பாளராக போட்டியிட்ட வானதி சீனிவாசன், தனக்கு வாக்களித்த அனைவருக்கும்...

மத்திய அரசின் அவசரகால கடன் உத்தரவாத திட்டம் 5.2-ஐ தொழில் சங்கங்கள் வரவேற்பு

கோவையில் மத்திய அரசு அறிவித்துள்ள அவசரகால கடன் உத்தரவாத திட்டம் 5.2-ஐ பல்வேறு தொழில் சங்கங்கள் வரவேற்றுள்ளன. இத்திட்டம்...

விமான எரிபொருள் விலை உயர்வு: கோவை விமான நிலையத்தில் பயணிகள் கட்டணங்களில் பெரிய மாற்றம் இல்லை

ஈரான்-இஸ்ரேல் போர் காரணமாக சர்வதேசத்தில் விமான எரிபொருள் விலை உயர்ந்துள்ள நிலையில், கோவை சர்வதேச விமான நிலையத்தில் பயணிக...