பல்லடம் வடக்கு ஒன்றிய பூத் கமிட்டி ஆலோசனைக் கூட்டம் - முன்னாள் எம்பி அர்ஜுனன் பங்கேற்பு

வருகின்ற நாடாளுமன்றத் தேர்தலில் அதிக வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெற்ற தொகுதியாக மாற்ற வேண்டும் எனவும், அதிமுக சார்பில் அறிவிக்கப்படும் வேட்பாளரை அதிக வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெறச் செய்ய வேண்டும் எனவும் பூத் கமிட்டி ஆலோசனைக்கூட்டத்தில் நிர்வாகிகளுஃகு ஆலோசனைகள் வழங்கப்பட்டன.


திருப்பூர்: அதிமுக கழகப் பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி அவர்களின் ஆணைக்கிணங்க திருப்பூர் புறநகர் மேற்கு மாவட்ட கழகச் செயலாளர், முன்னாள் அமைச்சர், கழக அமைப்புச் செயலாளர் உடுமலை சட்டமன்ற உறுப்பினர் உடுமலை ராதாகிருஷ்ணன், அவர்களின் தலைமையில் பல்லடம் சட்டமன்ற உறுப்பினர் முன்னாள் அமைச்சர் கழக அமைப்புச் செயலாளர் அண்ணன் எம் எஸ் எம் ஆனந்தன் எம் எல் ஏ அவர்களின் முன்னிலையில் இன்று திருப்பூர் மாவட்டம் பல்லடம் அருகே 63 வேலம்பாளையத்தில் உள்ள தனியார் மண்டபத்தில் பூத் கமிட்டி மற்றும் இளைஞர் இளம்பெண்கள் பாசறை ஆலோசனைக் கூட்டம் இன்று நடைபெற்றது.



கூட்டத்தில் நீலகிரி பாராளுமன்ற தொகுதி முன்னாள் எம்பி மற்றும் கழக அமைப்புச் செயலாளர் அர்ஜுனன் அவர்கள் கலந்து கொண்டு நேரில் பூத் கமிட்டி நோட்டுகளை ஆய்வு செய்து கையெழுத்திட்டார்.



இந்நிகழ்வில் நகர செயலாளர் ராமமூர்த்தி, முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் கரைப்புதூர் நடராஜன், முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் பரமசிவம், மாவட்ட தகவல் தொழில்நுட்ப அணி இணை செயலாளர் மிருதுளா நடராஜன், இளைஞரணி மகளிரணி மற்றும் இளம் பெண்கள் பாசறை சார்பில் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.



மேலும் வருகின்ற நாடாளுமன்றத் தேர்தலில் அதிக வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெற்ற தொகுதியாக மாற்ற வேண்டும் எனவும், அதிமுக சார்பில் அறிவிக்கப்படும் வேட்பாளரை அதிக வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெறச் செய்ய வேண்டும் எனவும் ஆலோசனைகள் வழங்கப்பட்டது.

Newsletter

‘யாத்ரி சுவிதா திவஸ் 2026’ கொண்டாட்டம்: பயணிகள் சேவையில் அர்ப்பணிப்பை வெளிப்படுத்திய கோவை விமான நிலையம்

கோவை சர்வதேச விமான நிலையத்தில் யாத்ரி சுவிதா திவஸ் 2026 முன்னிட்டு கலாச்சார நிகழ்ச்சிகள், சுகாதார முகாம்கள், ரத்ததானம்,...

முத்தண்ணன்குளம் Turf மைதானத்துக்கான தனியாருடனான ஒப்பந்தத்தை மாநகராட்சி ரத்து செய்ய வேண்டும்: DYFI வலியுறுத்தல்

கோவை மாநகராட்சி சார்பில் ரூ.60 லட்சம் செலவில் அமைக்கப்பட்ட முத்தண்ணன்குளம் Turf மைதான தனியார் நிறுவனத்திடம் செய்த ஒப்பந்...

50-க்கும் மேற்பட்ட சிசிடிவி காட்சிகள் ஆய்வு: ரூ.40 ஆயிரம் மீட்டு உரியவரிடம் ஒப்படைத்த ஆர்.எஸ்.புரம் போலீசார்..!

கோவை ஆர்.எஸ்.புரம் பகுதியில் உள்ள கனரா வங்கி அருகே தவறவிட்ட ரூ.40 ஆயிரத்தை, 50-க்கும் மேற்பட்ட சிசிடிவி காட்சிகளை ஆய்வு...

மாற்றுத்திறனாளிகள் நலனுக்காக பணியாற்றியவர்களுக்கு மாநில விருதுகள்: விண்ணப்பங்கள் வரவேற்பு

மாற்றுத்திறனாளிகள் நலனுக்காக சிறப்பாக பணியாற்றிய தனிநபர்கள், தொண்டு நிறுவனங்கள், மருத்துவர்கள் மற்றும் நிறுவனங்களுக்கு த...

கோவை தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் ஜூன் 23, 24-ல் மாபெரும் வேலைவாய்ப்பு முகாம்

கோயம்புத்தூர் தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் ஜூன் 23, 24 தேதிகளில் மாபெரும் வேலைவாய்ப்பு முகாம் நடைபெறுகிறது. 20...

கோவையில் நாளை மின் பராமரிப்பு பணி: பல்வேறு பகுதிகளில் மின் தடை

கோவையில் நாளை (ஜூன் 16) காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை போத்தனூர், குப்பேபாளையம், பாப்பநாயக்கன்பாளையம் உட்பட பல்வேறு துண...