விளையாட்டில் கவனம் செலுத்த வேண்டும் - மாணவர்களுக்கு மத்திய அமைச்சர் எல் முருகன் அறிவுரை

உடலுக்கு உறுதியும், மனதிற்கு அமைதியையும் தருவது விளையாட்டு என்பதால் மாணவர்கள் விளையாட்டிலும் கவனம் செலுத்தி வெற்றிபெற வேண்டும் என மத்திய அமைச்சர் முருகன் தெரிவித்துள்ளார்.


கோவை: கோவை இரத்தினம் கல்விக் குழுமத்தில் "இரத்தினம் ஸ்போர்ட்ஸ் அகாடமி " திறப்பு விழா நடைபெற்றது. இதில் மத்திய அமைச்சர் எல்.முருகன் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார். இரத்தினம் கல்விக் குழுமங்களின் தலைவர் முனைவர்.மதன்.ஆ.செந்தில் தலைமை தாங்கினார்.

இரத்தினம் கல்விக் குழுமங்களின் இயக்குனர் சீமா செந்தில் முன்னிலை வகித்தார்.



சிறப்பு விருந்தினர் எல்.முருகன், இரத்தினம் ஸ்போர்ட்ஸ் அகாடமியினை தன் பொற்கரங்களால் திறந்து வைத்தார்.



பூப்பந்து மைதானம், கூடைப்பந்து மைதானம் என பல விளையாட்டு மைதானங்கள் இங்கு அமைந்துள்ளன. இந்த விளையாட்டு மைதானங்களின் மொத்த மதிப்பு சுமார் மூணு கோடி ரூபாய் ஆகும்.

பின்னர் அவர் பேசுகையில்," உடலுக்கு உறுதியும், மனதிற்கு அமைதியையும் தருவது விளையாட்டு ஆகும். மாணவர்கள் விளையாட்டிலும் கவனம் செலுத்தி வெற்றிபெற வேண்டும். நமது நாட்டின் விளையாட்டு வீரர்கள் ஆசிய விளையாட்டுப் போட்டிகளில் 107 பதக்கங்களும், ஆசிய பாரா விளையாட்டுப் போட்டிகளில் 111 பதக்கங்களும் பெற்று வரலாற்றுச் சாதனை படைத்து உள்ளனர். அதேபோல் இரத்தினம் கல்விக் குழுமங்களின் மாணவ, மாணவியரும் வரலாற்றுச் சாதனை படைக்க வேண்டும் என்று கூறினார்.

இரத்தினம் கல்விக் குழுமங்களின் தலைவர் முனைவர்.மதன்.ஆ.செந்தில் பேசுகையில்,"நமது இரத்தினம் கல்விக் குழுமங்களின் மாணவ,மாணவியர்கள் பல்வேறு விளையாட்டுப் போட்டிகளில் பல்கலைக்கழக அளவிலும், தேசிய அளவிலும் சாதனை படைத்து வருகின்றனர். அவர்களை ஊக்குவிக்கவும், மேலும் ஆர்வமுள்ள மாணவ, மாணவியருக்கு சிறப்பான முறையில் பயிற்சி அளித்து அவர்களை வெற்றிப்பாதைக்கு அழைத்துச் செல்வதே இந்த இரத்தினம் ஸ்போர்ட்ஸ் அகாடமியின் நோக்கமாகும்" என்று கூறினார்.

இந்த விழாவில் இரத்தினம் கல்விக் குழுமங்களின் செயலாளர் முனைவர்.மாணிக்கம் இரத்தினம் கல்விக் குழுமங்களின் துணைத் தலைவர் முனைவர்.பா.நாகராஜ் மற்றும் இரத்தினம் கல்விக் குழுமங்களைச் சேர்ந்த அனைத்து கல்லூரிகளின் முதல்வர்கள் பேராசிய பெருமக்கள் மற்றும் மாணவ மாணவியர் ஆகியோர் கலந்து கொண்டனர்.

Newsletter

அண்ணாமலைக்கு ராஜ்யசபா எம்பி பதவி? – “நிச்சயம் வழங்கப்படும்”- கோவையில் எல். முருகன் உறுதி!

திமுக அரசின் மீது மக்களிடம் உள்ள கோபம், அதிருப்தி மற்றும் எதிர்ப்பு உணர்வுகள் மே 4-ஆம் தேதி தேர்தல் முடிவுகளில் தெளிவாக...

கோவை பேரூர் கோயில் தேரின் வெள்ளி பொருட்கள் திருட்டு: அறநிலையத் துறை ஊழியருக்கு 3 ஆண்டு சிறை

கோவை பேரூர் பட்டீஸ்வரர் கோயில் தேரில் வெள்ளிப் பொருட்கள் திருடப்பட்ட வழக்கில், இந்து சமய அறநிலையத் துறை ஊழியர் ஆனந்தனுக்...

தொண்டாமுத்தூர் ரவி துக்கம் அனுசரித்து நிதியுதவி வழங்கினார்

கோவை வடக்கு மாவட்ட DMK செயலாளர் தொண்டாமுத்தூர் ரவி, கோவைபுதூர் பகுதியில் கழக நிர்வாகிகளின் இல்ல துக்க நிகழ்விற்கு நேரில்...

சாய்பாபா காலனி மேம்பாலம் ஜூன் மாதம் திறப்பு - 95 சதவீதம் பணிகள் முடிவு

கோவை சாய்பாபா காலனியில் ரூ.75 கோடியில் நடைபெறும் மேம்பால பணிகள் 95 சதவீதம் நிறைவடைந்துள்ளன. எருக்கம்பெனியில் இறங்குதளம்,...

கோவை சாய்பாபா காலனி மேம்பாலம் ஜூன் மாதம் திறப்பு - 95% பணிகள் நிறைவு

கோவை சாய்பாபா காலனியில் ரூ.75 கோடியில் நடைபெறும் மேம்பால பணிகள் 95% நிறைவடைந்துள்ளன. எருக்கம்பெனியில் இறங்குதளம், மின்வி...

மருதமலை முருகன் கோவிலில் ஒரே மாதத்தில் ரூ.78 லட்சம் காணிக்கை வசூல்

கோவை மருதமலை சுப்பிரமணிய சுவாமி கோவிலில் நடைபெற்ற மாதாந்திர உண்டியல் கணக்கெடுப்பில் ரூ.78 லட்சத்து 1 ஆயிரத்து 439 வசூலான...