விளையாட்டில் கவனம் செலுத்த வேண்டும் - மாணவர்களுக்கு மத்திய அமைச்சர் எல் முருகன் அறிவுரை

உடலுக்கு உறுதியும், மனதிற்கு அமைதியையும் தருவது விளையாட்டு என்பதால் மாணவர்கள் விளையாட்டிலும் கவனம் செலுத்தி வெற்றிபெற வேண்டும் என மத்திய அமைச்சர் முருகன் தெரிவித்துள்ளார்.


கோவை: கோவை இரத்தினம் கல்விக் குழுமத்தில் "இரத்தினம் ஸ்போர்ட்ஸ் அகாடமி " திறப்பு விழா நடைபெற்றது. இதில் மத்திய அமைச்சர் எல்.முருகன் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார். இரத்தினம் கல்விக் குழுமங்களின் தலைவர் முனைவர்.மதன்.ஆ.செந்தில் தலைமை தாங்கினார்.

இரத்தினம் கல்விக் குழுமங்களின் இயக்குனர் சீமா செந்தில் முன்னிலை வகித்தார்.



சிறப்பு விருந்தினர் எல்.முருகன், இரத்தினம் ஸ்போர்ட்ஸ் அகாடமியினை தன் பொற்கரங்களால் திறந்து வைத்தார்.



பூப்பந்து மைதானம், கூடைப்பந்து மைதானம் என பல விளையாட்டு மைதானங்கள் இங்கு அமைந்துள்ளன. இந்த விளையாட்டு மைதானங்களின் மொத்த மதிப்பு சுமார் மூணு கோடி ரூபாய் ஆகும்.

பின்னர் அவர் பேசுகையில்," உடலுக்கு உறுதியும், மனதிற்கு அமைதியையும் தருவது விளையாட்டு ஆகும். மாணவர்கள் விளையாட்டிலும் கவனம் செலுத்தி வெற்றிபெற வேண்டும். நமது நாட்டின் விளையாட்டு வீரர்கள் ஆசிய விளையாட்டுப் போட்டிகளில் 107 பதக்கங்களும், ஆசிய பாரா விளையாட்டுப் போட்டிகளில் 111 பதக்கங்களும் பெற்று வரலாற்றுச் சாதனை படைத்து உள்ளனர். அதேபோல் இரத்தினம் கல்விக் குழுமங்களின் மாணவ, மாணவியரும் வரலாற்றுச் சாதனை படைக்க வேண்டும் என்று கூறினார்.

இரத்தினம் கல்விக் குழுமங்களின் தலைவர் முனைவர்.மதன்.ஆ.செந்தில் பேசுகையில்,"நமது இரத்தினம் கல்விக் குழுமங்களின் மாணவ,மாணவியர்கள் பல்வேறு விளையாட்டுப் போட்டிகளில் பல்கலைக்கழக அளவிலும், தேசிய அளவிலும் சாதனை படைத்து வருகின்றனர். அவர்களை ஊக்குவிக்கவும், மேலும் ஆர்வமுள்ள மாணவ, மாணவியருக்கு சிறப்பான முறையில் பயிற்சி அளித்து அவர்களை வெற்றிப்பாதைக்கு அழைத்துச் செல்வதே இந்த இரத்தினம் ஸ்போர்ட்ஸ் அகாடமியின் நோக்கமாகும்" என்று கூறினார்.

இந்த விழாவில் இரத்தினம் கல்விக் குழுமங்களின் செயலாளர் முனைவர்.மாணிக்கம் இரத்தினம் கல்விக் குழுமங்களின் துணைத் தலைவர் முனைவர்.பா.நாகராஜ் மற்றும் இரத்தினம் கல்விக் குழுமங்களைச் சேர்ந்த அனைத்து கல்லூரிகளின் முதல்வர்கள் பேராசிய பெருமக்கள் மற்றும் மாணவ மாணவியர் ஆகியோர் கலந்து கொண்டனர்.

Newsletter

கோவையில் ஒரே நாளில் 600க்கும் மேற்பட்ட தெருநாய்களுக்கு வெறிநாய்க்கடி தடுப்பூசி

Coimbatore மாநகராட்சி வார்டு 50, 51, 52, 54, 100 பகுதிகளில் வெறிநாய்க்கடி தடுப்பூசி திட்டத்தை தீவிரப்படுத்தி, கால்நடை மர...

Multiple LPG Cylinders Explode at Migrant Workers’ Quarters in Coimbatore’s Nava India

More than 40 temporary sheds were gutted after seven LPG cylinders exploded one after another at a migrant workers’ colo...

கோவை நவ இந்தியாவில் அடுத்தடுத்து வெடித்த 7 சமையல் எரிவாயு சிலிண்டர்கள்

கோவை நவ இந்தியா பகுதியில் வடமாநிலத் தொழிலாளர்கள் தங்கியிருந்த தற்காலிகக் குடியிருப்பில் அடுத்தடுத்து 7 சமையல் எரிவாயு சி...

கோவை கற்பகம் நிகர்நிலை பல்கலைக்கழகத்தில் இணையக் குற்ற விழிப்புணர்வு நிகழ்ச்சி

கோவை, கற்பகம் நிகர்நிலை பல்கலைக்கழகத்தில் ஆகஸ்ட் 27, 2026 அன்று இணையக் குற்ற விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது. கூடுதல்...

மேட்டுப்பாளையம் துணை மின் நிலையத்தில் நாளை (29.08.2026) மின்தடை

மேட்டுப்பாளையம் துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நாளை (29.08.2026) காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை நடைப...

பசூர் துணை மின் நிலையத்தில் நாளை (29.08.2026) மின்தடை

பசூர் துணை மின் நிலையத்தில் நாளை ஆகஸ்ட் 29 அன்று காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மாதாந்திர மின் பராமரிப்பு பணி நடைபெறும்...