கோவையில் கறிக்கோழி விற்பனையாளரிடம் ரூ.47 லட்சம் மோசடி - சென்னை வியபாரி கைது

கொள்முதல் செய்த கறிக்கோழிக்கு தரவேண்டிய ரூ.47 லட்சம் பணத்தை கொடுக்காமல் தலைமறைவாக இருந்த செந்தில் மோகன் என்ற கறிக்கோழி வியபாரியை, தனிப்படையினர் சென்னையில் வைத்து கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி பின்னர், கோவை மத்திய சிறையில் அடைத்தனர்.


கோவை: சென்னை வண்ணாரப்பேட்டை பகுதியை சேர்ந்த செந்தில் மோகன் என்பவர் புது வண்ணாரப்பேட்டை பகுதியில் வி எம் சி புரோட்டீன் என்ற பெயரில் கறிக்கோழி விற்பனை மையத்தை நடத்தி வருகிறார்.

இந்த நிலையில் அதற்கான உயிர் கறிக்கோழிகளை கோவை பந்தய சாலை பகுதியில் செயல்பட்டு வரும் ஆம்பூர் சிக்கன் என்ற நிறுவனத்தில் மொத்தமாக கொள்முதல் செய்து வந்துள்ளார். கடந்த இரண்டு ஆண்டுகளுக்கும் மேலாக அந்நிறுவனத்துடன் வர்த்தக உறவில் இருந்த செந்தில் மோகன் கடந்த ஒரு ஆண்டாக கொள்முதல் செய்யும் கறிக்கோழிக்கு உரிய தொகையை செலுத்தாமல் இருந்துள்ளார்.

இதை அடுத்து கறிக்கோழி மொத்த விற்பனை மைய மேலாளர் செலுத்த வேண்டிய தொகையை உடனடியாக செலுத்துமாறு கூறவே திடீரென தலைமறைவாகியுள்ளார்.

இதை தொடர்ந்து சுமார் 47 லட்சம் ரூபாய் பணத்தை மோசடி செய்த செந்தில் மோகனை கைது செய்து பணத்தை மீட்டு தருமாறு கூறி அந்நிறுவன மேலாளர் பாலகுமாரன் என்பவர் கோவை பந்தய சாலை காவல் நிலையத்தில் புகார் அளிக்கவே அந்த புகாரின் பேரில் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்ட பந்தய சாலை காவல் நிலைய போலீசார் தலைமறைவான செந்தில் மோகனை பிடிக்க தனிப்படை அமைத்து தேடி வந்தனர்.

இந்த நிலையில் செந்தில் மோகன் சென்னையில் இருப்பது தெரிய வந்த நிலையில் சென்னை சென்ற தனிப்படையினர் செந்தில் மோகனை கைது செய்து கோவை நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்தினர். பின்னர் நீதிமன்ற உத்தரவின் பேரில்15 நாள் காவலில் செந்தில் மோகன் கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டார்.

Newsletter

கோவையில் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் பறிமுதல்; 4 பேர் கைது

கோவை மாநகரில் தடை செய்யப்பட்ட குட்கா மற்றும் புகையிலைப் பொருட்கள் விற்பனையை தடுக்க போலீசார் நடத்திய சோதனையில், வெவ்வேறு...

மருதமலை கோவிலில் வைகாசி விசாகத் திருவிழா கோலாகலமாக தொடக்கம்

கோவை மருதமலை அருள்மிகு சுப்ரமணிய சுவாமி திருக்கோவிலில் வைகாசி விசாகத் திருவிழா சிறப்பு அபிஷேகம், ராஜ அலங்காரம் மற்றும் த...

கோவை மத்திய சிறையில் பரபரப்பு; சூலூர் சிறுமி கொலை வழக்கு குற்றவாளி கார்த்திக் மீது சக கைதிகள் தாக்குதல்

சூலூர் 10 வயது சிறுமி பாலியல் வன்கொடுமை மற்றும் கொலை வழக்கில் குண்டர் சட்டத்தின் கீழ் கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டி...

மாணவிகள் விடுதிகளில் தரமற்ற உணவு: கடும் நடவடிக்கை எடுக்கப்படும் - கோவையில் அமைச்சர் வன்னியரசு எச்சரிக்கை

ஒண்டிப்புதூர் மாணவிகள் விடுதிகளில் தரமற்ற உணவு வழங்கப்பட்ட புகாரை அடுத்து அமைச்சர் வன்னியரசு இன்று ஆய்வு மேற்கொண்டார். ம...

கோவை அரசு மருத்துவமனையில் நள்ளிரவில் திடீர் ஆய்வு நடத்திய அமைச்சர் சம்பத்குமார்

கோவை அரசு மருத்துவமனையில் பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் சம்பத்குமார் நள்ளிரவில் திடீர் ஆய்வு மேற்கொண்டார். பாது...

சிறுவாணி அணை நீர்மட்டம் 8 அடியாக வீழ்ச்சி: ஆகஸ்ட் வரை இருப்பு

கோவை மாநகரின் முக்கிய குடிநீர் ஆதாரமான சிறுவாணி அணையின் நீர்மட்டம் 8 அடியாக சரிந்துள்ளது. இருப்பினும், தற்போது உள்ள நீர்...