விளையாட்டுத்துறையில் சாதிக்க மாணவர்கள் ஆர்வம் காட்ட வேண்டும் - மடத்துக்குளத்தில் முன்னாள் இந்திய அணி பயிற்சியாளர் அறிவுரை

உடலை கட்டுக்கோப்பாக வைப்பதற்கும் நீண்ட ஆயுளுடன் இருப்பதற்கு விளையாட்டு மிகவும் முக்கியமாக கருதப்படுவதாக இந்திய அணி பயிற்சியாளர் ஸ்டாலின் நாகராஜன் கூறினார்.


திருப்பூர்: விளையாட்டுத்துறையில் சாதிக்க மாணவர்கள் ஆர்வம் காட்ட வேண்டும் என முன்னாள் இந்திய அணி பயிற்சியாளர் ஸ்டாலின் நாகராஜன் மடத்துக்குளத்தில் நடைப்பெற்ற விளையாட்டு விழாவில் அறிவுரை கூறியுள்ளார்.

திருப்பூர் மாவட்டம் மடத்துக்குளம் பகுதியில் ஜே எஸ் ஆர் கல்வி குழுமத்தில் விளையாட்டு விழா நடைபெற்றது. விழாவிற்கு முன்னாள் இந்திய அணியின் சிறந்த பயிற்சியாளர் ஸ்டாலின் நாகராஜன் அவர்கள் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார். ஜே எஸ் ஆர் கல்வி குழுமங்களின் தாளாளர் எஸ் ராஜ்குமார் தலைமை வகித்தார். செயலாளர் சதீஷ்குமார் விழாவிற்கு முன்னிலை வகித்தார். விழாவில் ஸ்டாலின் நாகராஜ் அவர்கள் பேசும் பொழுது.

கொரோனா காலகட்டத்தில் ஏராளமானோர் இந்தியாவில் உயிரிழந்த நிலையில் ஒரு விளையாட்டு வீரர் கூட கொரனாவால் உயிர் இழக்க வில்லை காரணம் விளையாட்டு தான் மேலும், உடலை கட்டுக்கோப்பாக வைப்பதற்கும் நீண்ட ஆயுளுடன் இருப்பதற்கு விளையாட்டு மிகவும் முக்கியமாக கருதப்படுகின்றது. விளையாட்டுத்துறையில் மாணவர்கள் அதிக ஆர்வம் காட்டி சாதிக்க வேண்டும் உட்பட பல்வேறு கருத்துக்களை பேசினார் .

விளையாட்டு விழாவில் மாணவர்களின் அணிவகுப்பு மரியாதையை சிறப்பு விருந்தினர் ஸ்டாலின் நாகராஜன் ஏற்றுக்கொண்டார் . பள்ளியின் சிறந்த விளையாட்டு வீரர்கள ஒலிம்பிக் தீபத்தை ஏந்தி வலம் வந்தனர்.



மழலையர் குழந்தைகளின் உடற்பயிற்சி, வண்ணமயமான பாராசூட் உடற்பயிற்சி, ஏரோபிக்ஸ் டான்ஸ், சிலம்பம் யோகா போன்ற நிகழ்வுகள் பார்வையாளர்களை வெகுவாக கவர்ந்தது.



இந்த நிகழ்வில் சுமார் 500-க்கும் மேற்பட்ட பொதுமக்கள் கலந்து கொண்டனர்

Newsletter

கோவையில் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் பறிமுதல்; 4 பேர் கைது

கோவை மாநகரில் தடை செய்யப்பட்ட குட்கா மற்றும் புகையிலைப் பொருட்கள் விற்பனையை தடுக்க போலீசார் நடத்திய சோதனையில், வெவ்வேறு...

மருதமலை கோவிலில் வைகாசி விசாகத் திருவிழா கோலாகலமாக தொடக்கம்

கோவை மருதமலை அருள்மிகு சுப்ரமணிய சுவாமி திருக்கோவிலில் வைகாசி விசாகத் திருவிழா சிறப்பு அபிஷேகம், ராஜ அலங்காரம் மற்றும் த...

கோவை மத்திய சிறையில் பரபரப்பு; சூலூர் சிறுமி கொலை வழக்கு குற்றவாளி கார்த்திக் மீது சக கைதிகள் தாக்குதல்

சூலூர் 10 வயது சிறுமி பாலியல் வன்கொடுமை மற்றும் கொலை வழக்கில் குண்டர் சட்டத்தின் கீழ் கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டி...

மாணவிகள் விடுதிகளில் தரமற்ற உணவு: கடும் நடவடிக்கை எடுக்கப்படும் - கோவையில் அமைச்சர் வன்னியரசு எச்சரிக்கை

ஒண்டிப்புதூர் மாணவிகள் விடுதிகளில் தரமற்ற உணவு வழங்கப்பட்ட புகாரை அடுத்து அமைச்சர் வன்னியரசு இன்று ஆய்வு மேற்கொண்டார். ம...

கோவை அரசு மருத்துவமனையில் நள்ளிரவில் திடீர் ஆய்வு நடத்திய அமைச்சர் சம்பத்குமார்

கோவை அரசு மருத்துவமனையில் பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் சம்பத்குமார் நள்ளிரவில் திடீர் ஆய்வு மேற்கொண்டார். பாது...

சிறுவாணி அணை நீர்மட்டம் 8 அடியாக வீழ்ச்சி: ஆகஸ்ட் வரை இருப்பு

கோவை மாநகரின் முக்கிய குடிநீர் ஆதாரமான சிறுவாணி அணையின் நீர்மட்டம் 8 அடியாக சரிந்துள்ளது. இருப்பினும், தற்போது உள்ள நீர்...