நியாய விலைக்கடைகளில் நிர்வாக முறைகேடுகள் - கோவை மாவட்ட ஆட்சியரிடம் நாம் தமிழர் கட்சியினர் மனு

கிணத்துக்கடவு பகுதியில் கழிவு நீர் கால்வாய் அமைப்பது அரசு பேருந்து வழங்குதல் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி மாவட்ட ஆட்சியரிடம் நாம் தமிழர் கட்சியினர் மனு அளித்தனர்.


கோவை :கோவை மாவட்டம் கிணத்துக்கடவு தொகுதியில் நியாய விலைக்கடைகளில் நிர்வாக முறைகேடுகள் நடப்பதாக கூறி மாவட்ட ஆட்சியரிடம் நாம் தமிழர் கட்சியினர் மனு அளித்துள்ளனர்.

கிணத்துக்கடவு தொகுதியில் நியாய விலைக் கடையில் முறைகேடு கழிவு நீர் கால்வாய் அமைப்பது அரசு பேருந்து வழங்குதல் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி கிணத்துக்கடவு தொகுதி நாம் தமிழர் கட்சியின் செயலாளர் அசோக்குமார் தலைமையில் மாவட்ட ஆட்சியரிடம் மனு அளிக்கப்பட்டது.



இது குறித்து அவர்கள் அளித்துள்ள மனுவில் கோவை மாவட்டம் கிணத்துக்கடவு தொகுதி எட்டிமடை பேரூராட்சிக்குட்பட்ட சின்ன ஐயாகவுண்டன் புதூர், நியாய விலை கடையில் நிர்வாக முறைகேடுகள் நடப்பதாகவும் தரமற்ற பொருட்கள் வழங்கப்படுவதாகவும் ரேஷன் பொருட்களை வெளி நபர்களுக்கு விற்பனை செய்வதாக கூறினா்.

எட்டிமடை பேரூராட்சிக்கு உட்பட்ட கேஜி சாவடி பகுதியில் கழிவுநீர் கால்வாய் அமைத்து தர வேண்டும் எனவும், உக்கடம் கரும்புக்கடை குறிச்சி சுந்தராபுரம் கஸ்தூரி கார்டன் வள்ளல் நகர் செந்தமிழ் நகர் கிருஷ்ணா கல்லூரி மைல்கல் பகுதிகளில் போக்குவரத்து வசதி குறைவாக இருப்பதால் பள்ளி கல்லூரி மாணவர்களும் வேலைக்கு செல்வோரும் சிரமங்கள் ஏற்படுவதாகவும் மனுவில் தெரிவித்தனர். எனவே இந்த வழித்தடங்களில் அரசு மினி பேருந்து அமைத்துத் தருமாறும் கேட்டுக் கொண்டுள்ளனர்.

Newsletter

கோவையில் செந்தில் பாலாஜிக்கு ஆதரவாக முன்னாள் மத்திய நிதி அமைச்சர் ப சிதம்பரம் பரப்புரை..!

NDA ஆட்சி அமைந்தால், பீகார் மாநில முதலமைச்சர் நிதிஷ் குமாருக்கு ஏற்பட்ட அரசியல் சூழ்நிலை போன்று தமிழகத்திலும் நிலைமை உரு...

கோவையில் தேசிய ஜனநாயக கூட்டணி வேட்பாளர்களுக்கு இந்து மக்கள் கட்சி தீவிர பிரச்சாரம்

கோவையில் தொண்டாமுத்தூர், தெற்கு, வடக்கு தொகுதிகளில் தேசிய ஜனநாயக கூட்டணி வேட்பாளர்களுக்கு இந்து மக்கள் கட்சியின் மாநில ப...

பீடம்பள்ளி ஊராட்சியில் அம்பேத்கர் 136-வது பிறந்தநாள் விழா: திமுக செயலாளர் மரியாதை

கோவை தெற்கு மாவட்டம் சூலூர் தெற்கு ஒன்றியத்தின் பீடம்பள்ளி ஊராட்சியில் அண்ணல் அம்பேத்கர் 136-வது பிறந்தநாள் நிகழ்வில் தி...

சான்றிதழ் பெறாத "ஜனநாயகன்" படம் வெளியீடு – கோவை உள்ளூர் சேனல் உரிமையாளர் கைது

கோவை கருமத்தம்பட்டியில் "ராசி பிரைம் மூவி" சேனல் உரிமையாளர் பழனிச்சாமி (44), மத்திய தணிக்கை சான்றிதழ் பெறாத "ஜனநாயகன்" த...

தவெக தலைவர் விஜய் இன்று கோவை வருகை - திருப்பூர் பெருமாநல்லூரில் தீவிர பிரச்சாரம்

தமிழக சட்டமன்ற தேர்தல் பிரச்சாரத்திற்காக தவெக தலைவர் விஜய் இன்று தனி விமானம் மூலம் கோவை வந்து திருப்பூர் பெருமாநல்லூரில்...

தொண்டாமுத்தூரில் N.R.கார்த்திகேயனுக்கு ஆதரவாக தீவிர வாக்கு சேகரிப்பு பிரசாரம்

தொண்டாமுத்தூர் சட்டமன்ற தொகுதியில் N.R.கார்த்திகேயனுக்கு ஆதரவாக திமுக தலைவர்கள் தீவிர வாக்கு சேகரிப்பு பணியில் ஈடுபட்டனர...