தீபாவளிப் பண்டிகையையொட்டி கோவையில் மாநகராட்சி பணியாளர்களுக்கு ஊக்கப்பரிசு

கோவை மாநகராட்சி 15 வது வார்டில் பாதாள சாக்கடை திட்டப்பணிகள் மேற்கொள்ளவதற்காக மாமன்ற உறுப்பினர் சாந்தாமணி பச்சைமுத்து தலைமையில் பூமி பூஜை போடப்பட்டது. இதில், கட்சி நிர்வாகிகள் கலந்துகொண்டனர்.


கோவை: தீபாவளிப் பண்டிகையை ஒட்டி கோவை மாநகராட்சி 15வது வார்டில் பணிபுரியும் தூய்மைப் பணியாளர்கள் மற்றும் தண்ணீர் விநியோகிப்பாளர்கள் 100க்கும் மேற்பட்டோருக்கு வேஷ்டி, சேலை, இனிப்புகள் மற்றும் ஊக்கப்பரிசுகளை மாமன்ற உறுப்பினர் சாந்தாமணி பச்சைமுத்து வழங்கினார். முன்னதாக பாதாளச் சாக்கடைப் பணிகளுக்கான பூமி பூஜை நிகழ்ச்சி நடைபெற்றது.

கோவை மாநகராட்சி 15 வது வார்டு சுப்பிரமணியம் பாளையத்தில் சுமார் 100க்கும் மேற்பட தூய்மை பணியாளர்கள், தண்ணீர் விநியோகிப்பவர்கள் உள்ளனர்.



அவர்களும் தீபாவளியை கொண்டாடும் விதமாக 15வது மாமன்ற உறுப்பினர் சாந்தாமணி பச்சைமுத்து தலைமையில் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு தூய்மை பணியாளர்கள் மற்றும் தண்ணீர் விநியோகிப்பாளர்களுக்கும் இனிப்புடன் வேஷ்டி சேலை மற்றும் ஊக்கப் பரிசு வழங்கப்பட்டது.



இந்த நிகழ்ச்சிக்கு இந்திய தேசிய காங்கிரஸ் மாநில பொதுச் செயலாளர் எஸ்.பச்சை முத்து முன்னிலை வகித்தார். இதில் RGPRS வடக்கு மாவட்ட ஒருங்கிணைப்பாளர் ஷேக் அப்துல் காதர், சர்க்கிள் தலைவர் சின்னு ராமகிருஷ்ணன், மாதவன் மற்றும் கட்சி நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

முன்னதாக கோவை மாநகராட்சிக்குட்பட்ட பகுதியில் சுமார் 300 கோடி மதிப்பில் துடியலூர், கவுண்டம்பாளையம், வீரகேரளம், வடவள்ளி பகுதிகளில் பாதாள சாக்கடை திட்டப்பணிகள் மேற்கொள்ளப்படவுள்ளன. அதன் ஒரு பகுதியாக 15 வது வார்டில் பாதாள சாக்கடை திட்டப்பணி மேற்கொள்ள மாமன்ற உறுப்பினர் சாந்தாமணி பச்சைமுத்து அவர்கள் தலைமையில் பூஜை போடப்பட்டது.

இவ்விழாவில் கன்ஸ்ட்ரக்சன் மேனேஜர் மதன், எல்.என்.டி இன்ஜினியர் ராஜராஜன், ஷேக் அப்துல் காதர், நஞ்சுகுட்டி கவுண்டர், செல்வராஜ் மற்றும் ஊர் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.

Newsletter

உலகத்திறன் போட்டிகள் 2027-க்கான பதிவு தொடக்கம் - கோவை ஆட்சியர் அறிவிப்பு

ஷாங்காய், சீனா 2026ல் நடைபெறும் உலகத்திறன் போட்டிகளுக்கான இந்தியத் திறன் போட்டிகள் 2027-க்கு பதிவுகள் துவங்கின. 16 முதல்...

கோவையில் டெங்கு தடுப்பு: பள்ளி, கல்லூரிகளுக்கு சரிபார்ப்பு பட்டியல் வழங்கப்படும்

கோவை மாநகராட்சி 100 வார்டுகளில் டெங்கு தடுப்பு நடவடிக்கைகளை தீவிரப்படுத்தியுள்ளது. 28.08.2026 முதல் பள்ளிகள், கல்லூரிகள்...

கோவை மாநகராட்சி மத்திய மண்டலத்தில் டெங்கு கொசு ஒழிப்பு பணிகள் தீவிரம்

கோயம்புத்தூர் மாநகராட்சி மத்திய மண்டல பகுதிகளில் டெங்கு கொசு ஒழிப்பு பணிகள் தீவிரமாக மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. வார்டு...

கோவை பீளமேடு பகுதியில் டெங்கு ஒழிப்பு உள்ளிட்ட பல்வேறு பணிகளை ஆய்வு செய்த கவுன்சிலர்

சிங்காநல்லூர் சட்டமன்ற தொகுதி வார்டு 27 கவுன்சிலர் அம்பிகா தனபால் பீளமேடு பகுதிகளில் டெங்கு கொசு ஒழிப்பு, சாலை அமைப்பு,...

திருப்பூரில் அமராவதி, திருமூர்த்தி அணைகளில் நீர்மட்டம் உயர்வு

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் ஆகஸ்ட் 27ஆம் தேதி 59.22 அடியாக உயர்ந்துள்ளது. நீர் பிடிப்பு பகுதிகளில...

ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு அணைகளில் நீர்மட்டம் உயர்வு

ஆனைமலை, பொள்ளாச்சி, வால்பாறை பகுதிகளில் உள்ள அணைகளில் தென்மேற்கு பருவமழை காரணமாக நீர்மட்டம் உயர்ந்துள்ளது. ஆழியாறு அணையி...