வால்பாறை அருகே சிறுத்தை தாக்கியதில் வட மாநில சிறுவன் படுகாயம் - மருத்துவமனையில் அனுமதி

தேயிலை தோட்டத்தில் பதுங்கிருந்து வந்து சிறுத்தை தாக்கியதில், வீட்டின் முன்பு விளையாடிக்கொண்டிருந்த வடமாநில சிறுவனுக்கு, கை, கால் போன்ற இடங்களில் காயம் ஏற்பட்டுள்ளது. பாதிக்கபட்ட சிறுவன் குடும்பத்தினற்கு வால்பாறை வனத்துறை வன சரகர் வெங்கடேஷ் 10 ஆயிரம் நிவாரணம் வழங்கினார்.


கோவை: கோவை மாவட்டம் வால்பாறை அருகே வட மாநில சிறுவனை சிறுத்தை தாக்கியதில் படுகாயமடைந்த சிறுவன் வால்பாறை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

வால்பாறை சுற்றுவட்டார எஸ்டேட் பகுதிகளில் வனவிலங்குகளின் நடமாட்டம் அதிகரித்து வருகிறது. யானை, சிறுத்தை, கரடி, காட்டெருமை, போன்ற வனவிலங்குகள் குடியிருப்பு பகுதிக்குள் நுழைந்து மக்களை அச்சுறுத்தி வருகிறது. இந்நிலையில் வால்பாறை அருகே உள்ள சிறு குன்றா எஸ்டேட் எல் டி டிவிஷனில் ஜார்கண்ட் மாநிலத்தைச் சேர்ந்த தொழிலாளி சஞ்சய் ஓரம் இவரது மகன் பரிதீப் வயது ஏழு இவர் தனது வீட்டில் சுமார் ஆறு முப்பது மணி அளவில் வீட்டின் வாசலில் விளையாடிக் கொண்டிருக்கும் பொழுது தேயிலைத்தோட்டத்தில் இருந்து சிறுத்தை ஒன்று சிறுவனை தாக்கியது.

தாக்கி தேயிலைத்தோட்டத்தில் இழுத்துச் செல்ல முயற்சித்தது. சிறுவனின் அலறல் சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தினர் சத்தம் போட்டதில் சிறுத்தை சிறுவனை விட்டு தேயிலை தோட்டத்தில் ஓடியது. சிறுவனை அக்கம் பக்கத்தினர் காப்பாற்றி வால்பாறை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக கொண்டு வந்தனர்.



சிகிச்சையில் தலை மற்றும் கால் கை போன்ற இடங்களில் சிறுத்தையின் பல் மற்றும் நகங்கல் கீரல் பலத்த காயங்கள் ஏற்பட்டுள்ளது. சிறுவன் சிகிச்சை அளிக்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். தகவல் அறிந்து வந்த வால்பாறை சரகர் வெங்கடேஷ் மற்றும் நகர மன்ற தலைவர் அழகுசுந்தரவள்ளி, காவல்துறையினர் விசாரணை செய்து வருகின்றனர்.



மேலும் பாதிக்கபட்ட சிறுவன் குடும்பத்திற்கு வால்பாறை வனத்துறை வன சரகர் வெங்கடேஷ் 10 ஆயிரம் நிவாரணம் வழங்கினார்.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...