திருப்பூர் மாவட்ட தீயணைப்பு துறை அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்பு போலீசார் சோதனை

தீயணைப்பு துறை அலுவலகத்தில் இருந்து ரூ.1.45 லட்சம் கணக்கில் வராத பணம் கைபற்றப்பட்டுள்ளது. இதனையடுத்து லஞ்ச ஒழிப்பு துறை போலீசார் இது தொடர்பாக வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.


திருப்பூர்: திருப்பூர் குமார் நகர் பகுதியில் திருப்பூர் மாவட்ட தீயணைப்பு துறை அலுவலகம் செயல்பட்டு வருகிறது. இந்நிலையில் அங்கு லஞ்சம் வாங்கப்படுவதாக வந்த புகாரை அடுத்து லஞ்ச ஒழிப்புத் துறை போலீசார் திடீரென சோதனை நடத்தினர்.



அப்போது தீயணைப்பு துறை அலுவலகத்தில் இருந்து ரூ. 1.45 லட்சம் கணக்கில் வராத பணம் கைபற்றப்பட்டது. இதனையடுத்து லஞ்ச ஒழிப்பு துறை போலீசார் இது தொடர்பாக வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மேலும் அந்த கணக்கில் வராத பணம் யாருடையது என்றும் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...