கொங்கூர் கோவிலுக்கு தேர்வான அறங்காவலர்கள் மற்றும் உறுப்பினர்கள் அமைச்சர் சாமிநாதனிடம் வாழ்த்து

புக்கிர காளியம்மன் கோவிலுக்கு அறங்காவலர் குழு தலைவராக வேலுச்சாமியும், உறுப்பினர்களாக பாலசுப்பிரமணி, சுந்தரம், தமிழ்ச்செல்வி, சண்முகம் ஆகியோர் தேர்வு செய்யப்பட்டனர். பசுபதீஸ்வரர் கோவில் அறங்காவலர் குழு தலைவராக பொன்னுச்சாமியும், உறுப்பினர்களாக ஈஸ்வரன், சசிகலா ஆகியோர் தேர்வு செய்யப்பட்டனர்.


திருப்பூர்: திருப்பூர் மாவட்டம் தாராபுரம் அருகே உள்ள கொங்குர் பகுதியில் ஆயிரம் ஆண்டுகள் பழமை வாய்ந்த இரண்டு கோவில்கள் உள்ளன. இந்த கோவில்கள் இந்து சமய அறநிலைத்துறை கட்டுப்பாட்டில் இயங்கி வரும் பசுபதீஸ்வரர் கோவில் மற்றும் உக்கிர காளியம்மன் ஆகிய இரண்டு கோவில்களுக்கு அறங்காவலர் குழு தலைவர் மற்றும் உறுப்பினர்களுக்கான தேர்தல், செயல் அலுவலர் சுந்தர் வடிவேல், ஆய்வாளர் முருகன் மற்றும் வெண்டுவ குல பங்காளிகள் ஆகியோர் முன்னிலையில் நடைபெற்றது.

புக்கிர காளியம்மன் கோவிலுக்கு அறங்காவலர் குழு தலைவராக வேலுச்சாமியும், உறுப்பினர்களாக பாலசுப்பிரமணி, சுந்தரம், தமிழ்ச்செல்வி சண்முகம் ஆகியோர் தேர்வு செய்யப்பட்டனர். பசுபதீஸ்வரர் கோவில் அறங்காவலர் குழு தலைவராக பொன்னுச்சாமியும், உறுப்பினர்களாக ஈஸ்வரன், சசிகலா ஆகியோர் தேர்வு செய்யப்பட்டனர்.

தேர்வான அனைவரும் தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தித் துறை அமைச்சர் சுவாமிநாதனை நேரில் சந்தித்து வாழ்த்து பெற்றனர். அப்போது திருப்பூர் மாநகராட்சி நான்காவது மண்டல தலைவரும் திமுக திருப்பூர் தெற்கு மாவட்ட செயலாளருமான பத்மநாபன், தாராபுரம் ஊராட்சி ஒன்றிய குழு தலைவரும் ஒன்றிய செயலாளருமான எஸ்வி செந்தில்குமார், மூலனூர் நகரச் செயலாளர் தண்டபாணி, தாராபுரம் தெற்கு வட்டார காங்கிரஸ் கமிட்டி தலைவர் சிவசாமி மற்றும் பொன் ராஜா துறை உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டனர்.

Newsletter

கோவை மாநகராட்சி மத்திய மண்டலத்தில் டெங்கு கொசு ஒழிப்பு பணிகள் தீவிரம்

கோயம்புத்தூர் மாநகராட்சி மத்திய மண்டல பகுதிகளில் டெங்கு கொசு ஒழிப்பு பணிகள் தீவிரமாக மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. வார்டு...

கோவை பீளமேடு பகுதியில் டெங்கு ஒழிப்பு உள்ளிட்ட பல்வேறு பணிகளை ஆய்வு செய்த கவுன்சிலர்

சிங்காநல்லூர் சட்டமன்ற தொகுதி வார்டு 27 கவுன்சிலர் அம்பிகா தனபால் பீளமேடு பகுதிகளில் டெங்கு கொசு ஒழிப்பு, சாலை அமைப்பு,...

திருப்பூரில் அமராவதி, திருமூர்த்தி அணைகளில் நீர்மட்டம் உயர்வு

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் ஆகஸ்ட் 27ஆம் தேதி 59.22 அடியாக உயர்ந்துள்ளது. நீர் பிடிப்பு பகுதிகளில...

ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு அணைகளில் நீர்மட்டம் உயர்வு

ஆனைமலை, பொள்ளாச்சி, வால்பாறை பகுதிகளில் உள்ள அணைகளில் தென்மேற்கு பருவமழை காரணமாக நீர்மட்டம் உயர்ந்துள்ளது. ஆழியாறு அணையி...

கோவையில் போட்டித் தேர்வு பயிற்சி வகுப்புகளுக்கு ஆசிரியர்கள் தேவை

கோவை மாவட்ட வேலைவாய்ப்பு மையத்தில் TNPSC, SSC, RRB, IBPS போன்ற போட்டித் தேர்வுகளுக்கான இலவச பயிற்சி வகுப்புகள் நடத்தப்பட...

கோவை ஜி.டி. பாலம் கீழ் புதிய பேருந்து நிழற்குடைகள் அமைப்பது குறித்து மாநகராட்சி ஆணையாளர் ஆய்வு

கோவை அவினாசி சாலையில் அமைந்துள்ள ஜி.டி. பாலத்தின் கீழ் நிழற்குடை இல்லாத பேருந்து நிறுத்தங்களில் புதிய நிழற்குடை அமைக்கும...