கவுண்டம்பாளையத்தில் முதியோர் குடும்ப அட்டைதாரர்களுக்கு இலவச வேஷ்டி, சேலைகளை வழங்கிய ஆட்சியர்

கவுண்டம்பாளையம் ஊராட்சி ஒன்றிய நடுநிலை பள்ளியில் செயல்பட்டு வரும் சத்துணவு கூடத்தில் கோவை மாவட்ட ஆட்சியர் ஆய்வு மேற்கொண்டார். அப்பகுதியில் செயல்பட்டு வரும் மாற்றுத்திறனாளி மாணவர்கள் பயின்று வரும் அம்ரித் சிறப்பு மையத்தையும் அவர் பார்வையிட்டார்.


கோவை: கோவை மாவட்ட ஆட்சித் தலைவர் கிராந்திகுமார் பாடி கவுண்டம்பாளையம் பகுதியில் பல்வேறு இடங்களில் நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.



அதன்படி கவுண்டம்பாளையம் நுகர் பொருள் வாணிப கழக கிடங்கில் ஆய்வு மேற்கொண்ட மாவட்ட ஆட்சித் தலைவர், அங்குள்ள பொருட்களை பார்வையிட்டு கிடங்கு வளாகத்தையும் ஆய்வு செய்தார்.



அதனைத் தொடர்ந்து கவுண்டம்பாளையம் மூவர் நகர் பகுதியில் உள்ள நியாய விலை கடையில் விநியோகிக்கப்படும் ரேஷன் பொருட்களையும், பதிவேடுகளையும் ஆய்வு செய்தார்.



அதனைத் தொடர்ந்து கவுண்டம்பாளையம் ஊராட்சி ஒன்றிய நடுநிலை பள்ளியில் செயல்பட்டு வரும் சத்துணவு கூடத்தில் ஆய்வு மேற்கொண்டார்.



பின்னர் அப்பகுதியில் செயல்பட்டு வரும் மாற்றுத்திறனாளி மாணவர்கள் பயின்று வரும் அம்ரித் சிறப்பு மையத்தில் பார்வையிட்டு அங்குள்ள வசதிகளை கேட்டறிந்து மாற்றுத்திறனாளி மாணவர்களுக்கு அளிக்கப்படும் சிறப்பு பயிற்சிகள் குறித்து கேட்டறிந்தார்.



பின்னர் கவுண்டம்பாளையம் கிராம நிர்வாக அலுவலகத்தில் முதியோர் குடும்ப அட்டைதாரர்களுக்கு இலவச வேஷ்டி சேலைகளை வழங்கினார்.



இந்த ஆய்வின்போது தமிழ்நாடு நுகர்பொருள் வாணிப கழக முதல்நிலை மண்டல மேலாளர் சதீஷ்குமார், மாவட்ட வளங்கள் அலுவலர் குணசேகரன், வடக்கு வட்டாட்சியர் தங்கராஜ் ஆகியோர் உடன் இருந்தனர்.

Newsletter

கோவையில் டெங்கு தடுப்பு: பள்ளி, கல்லூரிகளுக்கு சரிபார்ப்பு பட்டியல் வழங்கப்படும்

கோவை மாநகராட்சி 100 வார்டுகளில் டெங்கு தடுப்பு நடவடிக்கைகளை தீவிரப்படுத்தியுள்ளது. 28.08.2026 முதல் பள்ளிகள், கல்லூரிகள்...

கோவை மாநகராட்சி மத்திய மண்டலத்தில் டெங்கு கொசு ஒழிப்பு பணிகள் தீவிரம்

கோயம்புத்தூர் மாநகராட்சி மத்திய மண்டல பகுதிகளில் டெங்கு கொசு ஒழிப்பு பணிகள் தீவிரமாக மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. வார்டு...

கோவை பீளமேடு பகுதியில் டெங்கு ஒழிப்பு உள்ளிட்ட பல்வேறு பணிகளை ஆய்வு செய்த கவுன்சிலர்

சிங்காநல்லூர் சட்டமன்ற தொகுதி வார்டு 27 கவுன்சிலர் அம்பிகா தனபால் பீளமேடு பகுதிகளில் டெங்கு கொசு ஒழிப்பு, சாலை அமைப்பு,...

திருப்பூரில் அமராவதி, திருமூர்த்தி அணைகளில் நீர்மட்டம் உயர்வு

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் ஆகஸ்ட் 27ஆம் தேதி 59.22 அடியாக உயர்ந்துள்ளது. நீர் பிடிப்பு பகுதிகளில...

ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு அணைகளில் நீர்மட்டம் உயர்வு

ஆனைமலை, பொள்ளாச்சி, வால்பாறை பகுதிகளில் உள்ள அணைகளில் தென்மேற்கு பருவமழை காரணமாக நீர்மட்டம் உயர்ந்துள்ளது. ஆழியாறு அணையி...

கோவையில் போட்டித் தேர்வு பயிற்சி வகுப்புகளுக்கு ஆசிரியர்கள் தேவை

கோவை மாவட்ட வேலைவாய்ப்பு மையத்தில் TNPSC, SSC, RRB, IBPS போன்ற போட்டித் தேர்வுகளுக்கான இலவச பயிற்சி வகுப்புகள் நடத்தப்பட...