உடுமலை தமிழிசை சங்கத்தின் துணைத் தலைவர் நினைவேந்தல் நிகழ்ச்சி

அமரர் வஞ்சிமுத்து கொண்ட நட்பு, அன்னாரின் தமிழ்ப்பணி, சமுதாயப் பணிகள் குறித்து எடுத்துரைத்து புகழஞ்சலி கூட்டம் நடைபெற்றது.


திருப்புர் :உடுமலை தமிழிசைச் சங்கத்தின் துணைத் தலைவராக இருந்த அமரர் வஞ்சிமுத்துவின் நினைவேந்தல் நிகழ்ச்சி உடுமலையில் நடைபெற்றது.



உடுமலை தமிழிசைச் சங்கத்தின் துணைத் தலைவராக இருந்த அமரகா வஞ்சிமுத்துவின் நினைவேந்தல் நிகழ்ச்சி உடுமலை மிழிசைச்சங்கத்தின் சார்பில் பாரதியார் நூற்றாண்டு அரசினர் மகளிர் மேல்நிலைப் பள்ளியில் நடைபெற்றது. சங்கத்தின் தலைவர் ரவீந்திரன் கெங்குசாமி தலைமை வகித்தார்.



சங்கத்தின் செயலரும், நாடாளுமன்ற உறுப்பினருமான கு. சண்முகசுந்தரம் முன்னிலை வகித்தார்.

ஆர். கே. ஆர். கல்வி நிறுவனங்களின் தாளாளர் அரிமா ஆர்.கே. ராமசாமி, அமரர் வஞ்சிமுத்து கொண்ட நட்பு, அன்னாரின் தமிழ்ப்பணி, சமுதாயப் பணிகள் குறித்து எடுத்துரைத்து புகழஞ்சலி செலுத்தினார்.



நல்லாசிரியர் கு.சீ. மணி, பேராசிரியர் முனைவர் செல்வநாயகம், வானொலி தங்கவேல், பள்ளி தலைமை ஆசிரியர் விஜயா ஆகியோர் அன்னாரின் சிறப்புகளை கூறிப் புகழ் அஞ்சலி செலுத்தினர். அமரர் வஞ்சிமுத்து ஆசிரியரிடம் பயின்ற மாணவிகள் பானுப்பிரியா, மோகனப்பிரியா மற்றும் ராம் கோடி ராகவி ஆகியோர் தங்கள் ஆசிரியருக்கு இரங்கல் கவிதை படித்தனர்.

முன்னதாக ஆசிரியர் சின்னராசு வரவேற்புரை நிகழ்த்தினார். நிறைவாக கல்வியாளர் செ. மூர்த்தி நன்றி கூறினார். சங்க ஒருங்கிணைப்பாளர் அமிர்தநேயன் நிகழ்ச்சியை தொகுத்து வழங்கினார்.

அமரர் வஞ்சிமுத்துவின் புதல்வர் சரவணன் ஏற்புரை நிகழ்த்தினார். உடுமலை தமிழிசை சங்கத்தின் நிர்வாகிகள் எஸ். எம். டிராவல்ஸ் நாகராஜ் மற்றும் சத்யம் பாபு நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை செய்திருந்தனர். அமரர் வஞ்சிமுத்து திருவருவப்படத்திற்கு அனைவரும் மலர்கள் தூவி அஞ்சலி செலுத்தினர்.

Newsletter

கோவையில் 3,563 வாக்குச்சாவடிகளுக்கு மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் அனுப்பி வைப்பு

கோவை மாவட்டத்தில் நாளைய சட்டமன்றத் தேர்தலுக்கு முன்னதாக 3,563 வாக்குப்பதிவு நிலையங்களுக்கு மின்னணு வாக்குப்பதிவு இயந்திர...

பொள்ளாச்சியில் 281 வாக்குச்சாவடிகளுக்கு பலத்த பாதுகாப்புடன் வாக்கு இயந்திரங்கள் அனுப்பும் பணி தீவிரம்

நாளை நடைபெறவுள்ள தமிழக சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு, பொள்ளாச்சி தொகுதியில் உள்ள 281 வாக்குச்சாவடி மையங்களுக்கு வாக்கு இ...

பல ஆண்டுகளாக அடிப்படை வசதிகள் இல்லை: தேர்தலை புறக்கணிக்க நெறையூர் கிராம மக்கள் முடிவு

குடிநீர், சாலை, போக்குவரத்து, நியாய விலைக்கடை உள்ளிட்ட அடிப்படை வசதிகள் பல ஆண்டுகளாக வழங்கப்படாததால், திருப்பூர் மாவட்ட...

அவிநாசி: ‘ரோடு ஷோ’ மூலம் எல்.முருகனுக்கு ஆதரவு திரட்டிய மத்திய பிரதேச முதல்வர் மோகன் யாதவ்..!

திருப்பூர் மாவட்டம் அவிநாசி தொகுதியில் பாஜக வேட்பாளர் எல்.முருகனை ஆதரித்து மத்திய பிரதேச முதலமைச்சர் மோகன் யாதவ், ரோடு ஷ...

கிணத்துக்கடவில் செந்தில் வேல் பரப்புரை - சபரி கார்த்திகேயனுக்கு வாக்கு சேகரித்தார்..!

கிணத்துக்கடவு தொகுதியில் திமுக வேட்பாளர் கே.வி.கே.எஸ். சபரி கார்த்திகேயனை ஆதரித்து பத்திரிக்கையாளரும் தமிழ்கேள்வி யூடியூ...

கோவை மக்கள் ஏப்ரல் 23ஆம் தேதி செந்தில் பாலாஜியின் முகத்திரையை கிழிப்பார்கள்: அண்ணாமலை

கோவை வடக்கு தொகுதியில் பாஜக வேட்பாளர் வானதி சீனிவாசனுக்கு ஆதரவாக இறுதிக்கட்ட பிரச்சாரத்தில் ஈடுபட்ட அண்ணாமலை, திமுக மீது...