உடுமலை அருகே வீட்டின் பூட்டைஉடைத்து 15 பவுன் நகை திருட்டு - காவல்துறை விசாரணை

உடுமலை அருகே வீட்டின் பூட்டை உடைத்து 15 பவுன் நகை திருட்டு சம்பவம் தொடர்பாக மக்கள் மத்தியில் பீதியை ஏற்படுத்தியுள்ளது.


திருப்பூர்: வீட்டின் கதவு பூட்டை உடைத்து நடைபெற்ற திருட்டு சம்பவம் குறித்து போலிசார் விசாரணை நடத்தி வருகிறன்றனர்

உடுமலை அடுத்த எலையமுத்தூர் பிரிவு அருகே உள்ள கொங்குரார் லே-அவுட்டை சேர்ந்தவர் நாகராஜன் (57). ஓய்வு பெற்ற ராணுவ வீரரான இவர் தனது குடும்பத்துடன் கடந்த 4-ம் தேதி இரவு வீட்டை பூட்டிக்கொண்டு திருமூர்த்திநகரில் உள்ள தனது தோட்டத்திற்கு சென்று விட்டார்.

இவர் குடியிருந்து வரக்கூடிய வீட்டு உரிமையாளரும் மூன்று நாட்களுக்கு முன்னரே மடத்துக்குளத்தில் உள்ள தோட்டத்துக்கு சென்று விட்டார். இந்த சூழலில் கடந்த 5-ம் தேதி மாலை 5 மணிக்கு நாகராஜன் வீட்டுக்கு வந்துள்ளார். அப்போது கேட் மற்றும் வீட்டின் கதவு திறந்திருந்தது. உள்ளே சென்று பார்த்த போது டேபிளில் இருந்த 3¾ பவுன்நகைகள் திருடு போனது தெரிய வந்தது.

அதன்பின்பு கீழ்தளத்துக்கு வந்து பார்த்துள்ளார். அப்போது வீட்டின் கதவு திறந்திருந்தது. இது குறித்து வீட்டின் உரிமையாளரிடம் தெரிவித்தார். இதை உரிமையாளர் வந்து பார்த்தபோது பீரோவில் இருந்த 12 நகைகள் திருடு போனது. ஆக மொத்தம் 15 ¾ பவுன் நகைகளை மர்ம ஆசாமிகள் திருடி சென்று விட்டனர். இதுகுறித்து நாகராஜன் உடுமலை போலீசில் புகார் செய்தார். அதன் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை செய்து வருகிறார்கள்.

வீட்டின் கதவை உடைத்து நகைகள் திருடப்பட்ட சம்பவம் உடுமலை பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Newsletter

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி, திருமூர்த்தி அணைகளின் நீர்மட்டம் உயர்வு

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் 37.6 அடியாகவும், திருமூர்த்தி அணையின் நீர்மட்டம் 38.44 அடியாகவும் ஜூன...

தென்மேற்கு பருவமழையால் கோவை மாவட்ட அணைகளில் நீர்மட்டம் உயர்வு

கோவை மாவட்டத்தில் தென்மேற்கு பருவமழை காரணமாக ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு அணைகளில் நீர்வரத்து அதிகரித்துள்ளது. நீர்வ...

கோவை பீளமேட்டில் ஜன்னல் வழியாக சாவி எடுத்து 30 பவுன் நகை கொள்ளை

கோவை பீளமேடு நேருநகரில் மர்ம நபர் ஜன்னல் வழியாக கதவில் இருந்த சாவியை எடுத்து பூட்டிய வீட்டிற்குள் நுழைந்து 30 பவுன் தங்க...

கோவையில் சட்டவிரோத கிராவல் மண் கடத்தல் மீது நடவடிக்கை; 30-க்கும் மேற்பட்ட லாரிகள் பறிமுதல்

கோவை மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் நள்ளிரவு நடத்தப்பட்ட சிறப்பு வாகன சோதனையில், அரசு அனுமதியின்றி கிராவல் மண் கடத்தியத...

கோவை 27வது வார்டு பீளமேடு பகுதியில் வாய்க்கால், சாக்கடை சுத்திகரிப்பு பணிகள் நடைபெற்றன

கோயமுத்தூர் மாநகராட்சி வார்டு 27ல் இன்று வாய்க்கால் மற்றும் சாக்கடை சுத்தம் செய்யும் பணிகளை கவுன்சிலர் அம்பிகா தனபால் நே...

கோவையில் தீவிர டெங்கு கொசு ஒழிப்பு: வீடு வீடாக ஆய்வு மற்றும் புகை மருந்து தெளிப்பு பணிகள்

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா இ.ஆ.ப., அவர்களின் அறிவுறுத்தலின்படி, குனியமுத்தூர் கோகுலம் நகர் மற்றும்...