வால்பாறை அருகே பள்ளி வளாகத்தில் நுழைந்த காட்டு யானை - பொருட்களை உடைத்து சேதப்படுத்தியதால் அச்சம்

பச்சை மலை எஸ்டேட் அருகே யானைகள் நடமாட்டம் உள்ள நகராட்சி பள்ளியில் ஏழு மாணவர்களே படிக்கும் நிலையில் பள்ளியை வேறு இடத்திற்கு மாற்ற வேண்டும் என்று அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.


 கோவை: கோவை மாவட்டம் வால்பாறை அருகே பள்ளி வளாகத்தில் நுழைந்த காட்டு யானைகள் பொருட்களை உடைத்து சேதப்படுத்தியது.

கோவை மாவட்டம் வால்பாறை சுற்றுவட்டார எஸ்டேட் பகுதிகளில் காட்டு யானைகள் நடமாட்டம் அதிகரித்து வருகிறது. காட்டு யானைகள் இரவு நேரங்களில் வனப்பகுதியில் இருந்து வெளியேறி குடியிருப்பு பகுதிகளில் நுழைந்து வீடுகளை சேதப்படுத்தி வருகிறது.

இந்நிலையில் வால்பாறை அருகே சில தினங்களாக 22 காட்டு யானைகள் கருமலை எஸ்டேட் பச்சமலை எஸ்டேட் பாரலை எஸ்டேட் போன்ற எஸ்டேட் பகுதிகளில் சுற்றி வந்தது.



பச்சைமலை எஸ்டேட் பகுதியில் உள்ள நகராட்சி நடுநிலைப்பள்ளி வளாகத்தில் நுழைந்த 15 காட்டு யானைகள் பள்ளி வளாகத்தில் நுழைந்து சுவர் மற்றும் ஜன்னல் கதவை உடைத்து உள்ளே சென்று உள்ளிருந்த டேபிள் சேர் டிவி ஸ்மார்ட் போர்டு பள்ளி குழந்தைகளின் வருகை ஆவணங்கள் போன்ற அனைத்து பொருட்களை சேதப்படுத்தியது, பள்ளி வளாகம் வன பகுதி அருகில் உள்ளதால் யானையை வந்தது யாருக்கும் தெரியாத நிலையில் யானைகளை விரட்ட முடியாத சூழ்நிலை ஏற்பட்டுள்ளது.



பள்ளியில் ஏழு மாணவர்களே படிக்கும் நிலையில் பள்ளியை வேறு இடத்திற்கு மாற்ற வேண்டும் என்று அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Newsletter

நெஞ்சுவலி சிகிச்சையில் கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனைக்கு சர்வதேச அங்கீகாரம்

மாரடைப்பு மற்றும் நெஞ்சுவலி நோயாளிகளுக்கு சர்வதேச தரத்தில் சிகிச்சையை வழங்குவதில் கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனை சிறப...

கோவையில் ஸ்ரீ ராமகிருஷ்ணா சென்ட்ரல் பள்ளியில் ஸ்கில் லேப் மற்றும் பாட்காஸ்ட் ஸ்டுடியோ திறப்பு

கோவையில் ஸ்ரீ ராமகிருஷ்ணா சென்ட்ரல் பள்ளியில் ஸ்கில் லேப் மற்றும் வோக்ஸ் வேவ் பாட்காஸ்ட் ஸ்டுடியோ இன்று திறக்கப்பட்டது....

கோயம்புத்தூர் மாநகராட்சி வளர்ச்சிப் பணிகள் குறித்து அமைச்சர் சம்பத்குமார் தலைமையில் கலந்தாய்வு

பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் வி.சம்பத்குமார் தலைமையில் கோயம்புத்தூர் மாநகராட்சி வளர்ச்சிப் பணிகள் குறித்த கலந்த...

ஒண்டிப்புதூர் ABC மையத்தையும் உக்கடம் கழிவுநீர் சேகரிப்பு மையத்தையும் மாநகராட்சி ஆணையாளர் ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா இன்று ஒண்டிப்புதூர் பகுதியில் உள்ள வீடில்லா நாய்களுக்கான ABC மையத்தையும...

பேரூர் குளத்தில் 449-வது வார தூய்மைப் பணி - பொதுமக்கள் பங்கேற்க அழைப்பு

கோவை பேரூரில் WWF-India மற்றும் கோவை குளங்கள் பாதுகாப்பு அமைப்பு இணைந்து 449-வது வார தூய்மைப் பணியை ஜூன் 28 அன்று காலை 7...

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி, திருமூர்த்தி அணைகளின் நீர்மட்டம் உயர்வு

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் 37.6 அடியாகவும், திருமூர்த்தி அணையின் நீர்மட்டம் 38.44 அடியாகவும் ஜூன...