கோவையில் நெடுஞ்சாலை விரிவாக்கத்திற்காக வெட்டப்பட இருந்த அரச மரத்திற்கு மறுவாழ்வு

வேலாண்டிபாளையத்தை சேர்ந்த செயல் செயற்பாட்டு களம் அமைப்பினர் நெடுஞ்சாலைத்துறையிடம் அனுமதி பெற்று இன்று காலை 10 மணி அளவில் மரம் வெட்டும் பணியாளர்களைக் கொண்டு அரச மரத்தின் கிளைகளை  நறுக்கி இரண்டு கிரேன், ஒரு ஜேசிபி மூலம் மரத்தை பிடிங்கி எடுத்துச்சென்று மயானத்திற்கு முன்பகுதியில் நடவு செய்தனர்.


கோவை: கோவை தடாகம் சாலை, கணுவாய் அருகே கே.என்.ஜி புதூர் பிரிவு, சத்யம் கிட்னி சென்டர் முன்புறமுள்ள ஒரு பெரிய 30 ஆண்டு பழமையான அரச மரம் ஒன்று சாலை விரிவாக்கத்திற்காக வெட்டப்பட இருந்தது.



தகவல் அறிந்த கோவை வேலாண்டிபாளையத்தை சேர்ந்த செயல் செயற்பாட்டு களம் அமைப்பினர் நெடுஞ்சாலைத்துறையிடம் அனுமதிபெற்று இன்று காலை 10 மணி அளவில் மரம் வெட்டும் பணியாளர்களைக் கொண்டு அரச மரத்தின் கிளைகளை நறுக்கி இரண்டு கிரேன் ஒரு ஜேசிபி மூலம் 30 அடி நீளமுள்ள லாரி ஒன்றில் ஏற்றி தடாகம் சாலை வழியாக நான்கு கிலோ மீட்டர் பயணித்து வெங்கிட்டாபுரம் அவிலா கான்வென்ட் முன்புறமுள்ள அம்பேத்கர் சாலை வழியாக எடுத்துச் செல்லப்பட்டு வேலாண்டிபாளையம் மயானத்திற்கு முன்புறம் மாலை 4 மணி அளவில் மறு நடவு செய்யப்பட்டது.



செயல் சமூக செயற்பாட்டுக் களம் முன்னெடுத்த இந்த இயற்கைப் பணியில் வெங்கிட்டாபுரம் வேலாண்டிபாளையம் கோவில்மேடு பகுதியைச் சேர்ந்த செயல்பாட்டாளர்கள் தோழர்கள் பங்கேற்றார்கள். இதற்கான பணியை செயல் செயற்பாட்டு களத்தின் ஒருங்கிணைப்பாளர் ஆ.நந்தகுமார், இணை ஒருங்கிணைப்பாளர் சா.கதிரவன் ஆகியோர் செய்திருந்தனர்.

Newsletter

கொட்டாப்புளிபாளையம் கிராமத்தில் கதவு உடைத்து திருட முயன்ற முகமூடி திருடர்கள் தப்பியோட்டம்

திருப்பூர் மாவட்டம் தாராபுரம் அருகே கொட்டாப்புளிபாளையம் கிராமத்தில் நேற்று மாலை 7 மணியளவில் நாச்சிமுத்து வீட்டின் முன்பக...

காங்கேயம் பாப்பினியில் ரூ.2.5 லட்சம் மதிப்பிலான 19 ஆடுகள் திருட்டு; விவசாயிகள் மத்தியில் அச்சம்

திருப்பூர் மாவட்டம் காங்கேயம் பாப்பினியில் விவசாயி பொன்னுசாமியின் தோட்டத்தில் இருந்து நள்ளிரவில் மர்ம நபர்கள் 19 ஆடுகளை...

தாராபுரம் அருகே குடிபோதையில் அண்ணன்-தம்பி மோதல்: அருவாள் தாக்குதலில் அண்ணன் படுகாயம்

திருப்பூர் மாவட்டம் தாராபுரம் அருகே குடிபோதையில் ஏற்பட்ட தகராறில் தம்பி சேனாதிபதி அண்ணன் சந்திரசேகரை அருவாளால் வெட்டிய ச...

ஸ்ரீ ராமகிருஷ்ணா மகளிர் கல்லூரி இந்திய அளவில் 7வது இடம் பெற்று சாதனை

கோவையில் உள்ள ஸ்ரீ ராமகிருஷ்ணா மகளிர் கலை அறிவியல் கல்லூரி, EducationWorld தேசிய தரவரிசையில் இந்திய அளவில் 7வது இடத்தையு...

டாஸ்மாக் ஊழியர்கள் போராட்டம்: பீளமேடு வாணிப கழக அலுவலகத்தில் பரபரப்பு

கோவை பீளமேடு மதுபான கிடங்கு வாணிப கழக அலுவலகத்தில் டாஸ்மாக் அனைத்து தொழிற்சங்க கூட்டு நடவடிக்கை குழுவினர் ஆர்ப்பாட்டம் ந...

சோமனூர் பேருந்து நிலையம் அருகே மின் கம்பத்தில் தீ விபத்து

கோவை சோமனூர் பேருந்து நிலையம் அருகே ஏப்ரல் 27 மதியம் மின் கம்பத்தில் திடீர் தீ விபத்து ஏற்பட்டது. மதிய நேரத்தில் மக்கள்...